






கன்சுலேட்டின் சார்பில் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிதரூர் யேமன் செல்லும் வழியில் துபாய் வருகை புரிந்தார். துபாயில் அவர் அமீரக வர்த்தகத்துறை அமைச்சர் ஷேக்கா லுப்னா, கேபினெட் விவகாரத்துறை அமைச்சர் முஹம்மது அல் கர்காவி உள்ளிட்டோரைச் சந்தித்தார்.
அதனைத்தொடர்ந்து இந்திய கன்சுலேட்டின் சார்பில் சசிதரூருக்க் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் அமீரக உயர்கல்வித்துறை அமைச்சர் ஷேக் நஹ்யான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ழ்வில் இந்திய கன்சுல் ஜெனரல் வேணு ராஜாமணி, இந்திய அரபிய வர்த்தக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment