Friday, June 26, 2009

துபாயில் ம‌த்திய‌ அமைச்ச‌ர் சசித‌ரூருக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி!!












கன்சுலேட்டின் சார்பில் செவ்வாய்க்கிழ‌மை வ‌ர‌வேற்பு அளிக்க‌ப்ப‌ட்ட‌து.
ம‌த்திய‌ அமைச்ச‌ராக‌ப் பொறுப்பேற்ற‌ பின்ன‌ர் முத‌ல்முறையாக‌ வெளிநாடு சுற்றுப்பய‌ண‌ம் மேற்கொண்ட‌ ச‌சித‌ரூர் யேமன் செல்லும் வ‌ழியில் துபாய் வ‌ருகை புரிந்தார். துபாயில் அவ‌ர் அமீர‌க‌ வ‌ர்த்த‌க‌த்துறை அமைச்ச‌ர் ஷேக்கா லுப்னா, கேபினெட் விவ‌கார‌த்துறை அமைச்ச‌ர் முஹ‌ம்ம‌து அல் க‌ர்காவி உள்ளிட்டோரைச் ச‌ந்தித்தார்.

அத‌னைத்தொட‌ர்ந்து இந்திய‌ க‌ன்சுலேட்டின் சார்பில் ச‌சித‌ரூருக்க் வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி ந‌டைபெற்ற‌து. இந்நிக‌ழ்வில் அமீர‌க உய‌ர்க‌ல்வித்துறை அமைச்ச‌ர் ஷேக் ந‌ஹ்யான் சிற‌ப்பு விருந்தின‌ராக‌க் க‌ல‌ந்து கொண்டார்.

இந்நிக‌ழ்ழ்வில் இந்திய‌ க‌ன்சுல் ஜென‌ர‌ல் வேணு ராஜாம‌ணி, இந்திய‌ அர‌பிய‌ வ‌ர்த்த‌க‌ பிர‌முக‌ர்க‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

Wednesday, June 24, 2009

கோவை தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் என்.செ். ரோடு கிளை தலைவர்முகமது கனி விபத்துயில் மரணம்..

கோவை தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் என்.செ். ரோடு கிளை தலைவர்.


முகமது கனி விபத்துயில் மரணம்.


ஜனஸா தொழுகை கோவை திப்பு சுல்தான் பள்ளி யில்நடந்தது.இதில் தவ்ஹித் ஜமாத் மாநில நிர்வாகிகள். எம்.ஐ.சுலைமான்,ஏ.ஸ் அலாவுத்தின்.கோவை ஜபார்,கோவை ரஹிம்,மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.அதுபோல் த மு மு க .மாநில செயலாளர் கோவை உம்மர்,துனை செயலாளர் கோவை சாதிக்,மாநில போச்சாளர் கோவை சைய்து,மாவட்ட நிர்வாகிகள், அப்துல் பசிர், ஹமிது,அகமது கபிர்,திருப்புர் த மு மு க. நிர்வாகிகள். ஹாலித், ஹைதர்அலி,மற்றும் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள். அப்பாஸ். ஷாஜகான். அப்பாஸ்.கோவை தங்கப்பா, அது போல். ஜாக் மாவட்ட நிர்வாகிகள். மலங்கு.சித்திக்.மற்றும் முஸ்லிம் லிக் நிர்வாகிகள். கோவை நாசர். சாகுல் அமிது. சி.டி.எம்.நிர்வாகிகள் உம்மர்ஷா. அபுதாஹிர். மனிதநீதி பாசறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்ஜமாத்நிர்வாகிகள்.பொதுமக்கள் சுமார் 3000க்கும் மேற்பட்றோர்கள் கலந்து கொண்டார்கள்.
மேலும் விபரங்களுக்கு
http://www.dailythanthi.com/article.asp?NewsID=496018&disdate=6/24/2009&advt=௨

http://www.dailythanthi.com/article.asp?NewsID=496156&disdate=6/24/2009



விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் அடைந்தவர்களுக்கு அரசு சார்பில் ருபாய் 7 லட்சத்து 20 ஆயிரம் ருபாய் உதவியை கோவை கலெக்டர் உமாநாத் வழங்கியபோது அருகில் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் அப்பாஸ் உடன் இருந்தார்கள்.



விபத்தில் எந்தவித காயமும் இன்றி தப்பிய 2 வயதுசிறுவன் சேக்பரீத் நடந்த சம்பவம் பற்றி எதுவுமே தெரியாமல் பரிதாபத்துடன் அமர்ந்திருந்த காட்சி.



பலியான தவ்ஹித் ஜமாத் தலைவர்யின் குடும்பத்தார்கள்.ரஜபுனிஸா,தாஜ்னிஸா,ரகமத்துல்லா,சாயிராபானு,முகமது மீரான்,சாகிதாபேகம்,முகமதுகனி,பாத்துமுத்துஜொகரா,மற்றொரு ரகமத்துல்லா ஆகியோரை படத்தில் காணலாம்.



விபத்துக்குள்ளான லாரியும் ஒரு காரும் நெறுங்கி கிடக்கும் காட்சி.


பல்லடம் அரசு மருத்துவமனையில் வரிசையாக வைக்கப்பட்டு இருப்பதை காணலாம்.



ஜனஸாதொழுகை நடத்தும் கட்சி



கொள்கை சகோதரர்கள் கலந்து கொண்ட கட்சி



ஜனாஸா வை. த மு மு க. தவ்ஹித் ஜமாத். ஆம்லன்ஸ் முலம் மைய்ய வாடிக்கு எடுத்து சென்ற கட்சி

செய்திகள்.படம்- கோவை தங்கப்பா

Tuesday, June 23, 2009

வந்தார் ! நின்றார் ! ஜெயித்தார் ! என எல்லோராலும் வியந்து பாராட்டும்படியாக மாபெரும் வெற்றி

சமுதாயச் சேவையே என்னுயிர் மூச்சு ! - எம். அப்துர் ரஹ்மான் பேட்டி!



வந்தார் ! நின்றார் ! ஜெயித்தார் ! என எல்லோராலும் வியந்து பாராட்டும்படியாக மாபெரும் வெற்றிதனை வேலூரில் நிலைக்க வைத்தவர் முத்துப்பேட்டை எம். அப்துர் ரஹ்மான். காலமெலாம் சமுதாயத்திற்கு வெளியேயே சுற்றி விட்டுக் காலம் போன கடைசியில் சமுதாயத்தைத் திரும்பிப் பார்க்கும் சிலருக்குத்தான் அப்துர் ரஹ்மான் ‘இறக்குமதி’ செய்யப்பட்டவராகத் தெரியும்.

சமுதாயச் சேவையிலேயே ஊறித் திளைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அரபு மண்ணில் அலுவல் பார்த்தாலும் பிறந்த மண்ணில் சமுதாயம் மேம்பாடு காண அவர் அயராது ஆற்றி வந்த அரும்பணிகள் தெரிந்தே இருக்கும். உதட்டில் உதிர்க்கும் வார்த்தைகளில் மட்டும் அல்ல…. உள்ளத்தில் ஊற்றெடுக்கும் அவரது உணர்ச்சிகளிலும் இணைந்து கலந்தது இந்திய யூனியன் முஸ்லிம்லீக்.


வெற்றிவீர்ராகச் சென்னை திரும்பிய எம்.அப்துர் ரஹ்மான் எம்.பி. ‘இனிய திசைகள்’ இதழுக்கு அளித்த பிரத்யேகமான பேட்டி இதோ:


? தங்கள் வெற்றியின் இரகசியம்?


! சமுதாயக் கண்ணியம் காக்கப்பட – சமுதாயத்தினரால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே அரசியல் இயக்கமான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேலூரில் வெற்றிபெற்றே ஆக வேண்டுமென ஆன்றோர்கள், சான்றோர்கள், சங்கைமிகு உலமாக்கள், நடுநிலையாளர்கள், அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்ட நல்லெண்ணம் கொண்டவர்கள் என நல்லோர் பலரும் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சிக் கேட்ட துஆ – தஹஜ்ஜத்துத் தொழுகை தொழுது அழுது கேட்ட துஆ – ஹாஜத்து நோன்பு வைத்துக் கண்ணீர் பெருகக் கேட்ட துஆ இவற்றையெல்லாம் கபூல் செய்து அல்லாஹ் அளித்த தீர்ப்பு தான் இந்த வெற்றி!


? தேர்தலில் தாங்கள் சந்தித்த சங்கடம் என்ன? சந்தோஷம் என்ன?



! ‘உருது பேசத் தெரியாதவர்’ மண்ணின் மைந்தர் அல்லர்’ எனப் பரப்பப்பட்ட துவேஷமே சங்கடம், பல்வேறு ஜமாஅத் கூட்டங்களிலும், சந்திப்புகளிலும் உருதுமொழி பேசி அவர்கள் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டதும் அந்தப் பகுதி மக்களோடு பன்னெடுங்காலமாக நான் கொண்ட நெருங்கிய தொடர்பும் அப்பகுதியில் ஆற்றிய சமுதாயப் பணியும் தெரியவர இன்னும் அதிகமாக அப்துர்ரஹ்மான் இன்ஷா அல்லாஹ் சமுதாயப் பணியாற்றுவாரென்று எல்லோர் மத்தியிலும் ஏற்பட்ட நம்பிக்கை சங்கடத்திற்குப் பிறகு கிடைத்த சந்தோஷம் சமுதாயச் சேவையே என்னுயிர் மூச்சு என்பதை மக்கள் உணர்ந்து கொண்டதே மிகப்பெரும் சந்தோஷம்.


? இலட்சத்திற்கும் அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோமென எதிர்பார்த்தீர்களா?



தொடக்கத்தில் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பிரச்சார முடிவில் எதிர்பார்த்தேன். ஒவ்வோர் ஊரிலுள்ள பெரியவர்கள் முக்கிய பிரமுகர்கள் ஒருங்கிணைந்து குழு அமைத்து ஜமாஅத் வாரியாகப் பணி புரிந்ததும் குறிப்பாக முஸ்லிம் பெண்களே குழுவாகச் சேர்ந்து ஜமாஅத் ஜமாஅத்தாக வாக்குகள் சேகரிக்க முனைந்ததும் பெருவாரியான வித்தியாசத்தில் இறையருளால் வெற்றி பெறுவோமென்ற நம்பிக்கையைத் தந்தது.


? வெற்றிக்கு முக்கிய காரணம்?



தமிழக முதல்வர் நாட்டு மக்களுக்குக் கடந்த மூன்றாண்டு களாக ஆற்றி வரும் சாதனைகளும் சமயச் சார்பற்ற மத நல்லிணக்கத்தை நிலைப்படுத்தும் நடுவண் அரசின் சாதனை களும் மக்களை வெகுவாக ஈர்த்திருந்தமையே முக்கிய காரணமெனலாம்.

தொகுதி முழுவதும் பயணம் செய்து பல தரப்பட்ட மக்களையும் சந்தித்தேன். மன்மோகன் அரசின் சாதனை களையும் கலைஞரின் சாதனைகளையும் நாம் சொல்ல முற்படும்போதே அவர்களே நன்றியுணர்வோடு சொல்லுகிற காட்சியை அனுபவித்தேன். வசதி படைத்தோர் முதல் பாமரர் வரை எல்லாத் தரப்பினரிடமும் இத்தகைய உணர்ச்சி இந்தத் தேர்தலில் பிரதிபலித்ததைப் போல வேறெந்தத் தேர்தலிலும் பிரதிபலிக்கவில்லையென்றே கூறலாம்.


?எம்.பி ஆகியுள்ளீர்களே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வளர்ச்சி இனி எப்படி இருக்கும்?



! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அருமைத்தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொஹிதீன் தலைமையில் சிறப்பாக வளர்ந்தே வந்திருக்கிறது. இந்த வளர்ச்சி மேலும் தொடரும். அந்த வளர்ச்சிக்கு இந்த எம்.பி. வாய்ப்பு மேலும் வலிமை சேர்க்கும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இறைவன் பெயரால் முற்றிலும் சமுதாயத்திற்காகத் தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட இறையடியார்களால் தோற்றம் பெற்ற இயக்கமாகும். எனவே இந்த இயக்கத்தை – இதன் தத்துவத்தை – எவராலும் அழிக்க முடியாது. இயக்கச் செயல்பாடுகளில் அவ்வப்போது தொய்வு ஏற்படுவது இயல்பானதேயாகும். அதனைச் சரிசெய்து சரியான திசையில் மேலும் வீறுகொண்டு வலிவோடும் பொலிவோடும் செலுத்த வேண்டிய பொறுப்பு இப்போது எனக்கு இன்னும் அதிகமாகியுள்ளதென்றே கருதுகிறேன்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சியென்பது சமுதாயத்தின் உயிரோடும் உணர்வோடும் இரண்டறக் கலந்ததென்பதால் நிச்சயமாக வளர்ச்சி மேலும் தொடரு மென்ற திடமான நம்பிக்கை எனக்குண்டு.


? முஸ்லிம் லீகில் இளைஞர்கள் இல்லையென ஒரு குறை நிலவுகிறதே?



! அது உண்மை இல்லை. இளைஞர்கள் கணிசமாக முஸ்லிம் லீகில் இருக்கவே செய்கிறார்கள். ஆர்ப்பாட்ட மின்றி ஆரவாரமின்றி அமைதியாகக் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் காட்டிய நெறியில் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொஹிதீன் தலைமையில் அவர்கள் செயல்பட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்.

சூழ்நிலைக் கைதிகளாக ஆங்காங்கே வேறுவேறு அமைப்புகளில் சிக்கிக் கிடந்த இளைஞர்களும் இப்போது மீண்டு வருகிறார்கள். இஸ்லாமியப் பண்பாட்டு வழிமுறையை இஸ்லாமிய ஒழுக்க நெறியோடு பேணி வரும் ஒரே இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தான் என்பதை அவர்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள். இதனால் பல்வேறு அமைப்புகளில் இருந்த இளைஞர்கள் இன்றைக்கு அணி அணியாக முஸ்லிம் லீகில் இணைந்த வண்ணம் உள்ளார்கள்.


? அரசியலில் சமுதாய ஒற்றுமை ஏற்பட என்ன செய்யலாம்?



! சமுதாய உரிமைகளைப் பேணிக் காத்து நமக்கே உரிய கண்ணியத்தையும் மரியாதையையும் எல்லாத் துறை களிலும் பெற்று நாம் வாழ்ந்திட சமுதாய மக்களால் அங்கீகரிக்கப்பட்ட தாய்ச் சபையான இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் அனைவரும் இணைவதே அரசியலில் நாம் வலிமை பெற உதவும். இந்தியத் திருநாட்டின் ஒருமைப் பாட்டையும் இறையாண்மையையும் காத்து எல்லாரும் எல்லாமும் பெற்று மனிதநேயம் மதக் காழ்ப்பின்மை மிளிர அனைவரும் ஒன்று பட்டுப் பச்சிளம் பிறைக் கொடியின் கீழ் ஒருங்கிணைந்து ஒற்றுமை உணர்வு கொண்டு வாழ்வோம் … புத்தெழுச்சி பெறுவோம்.

அப்துர் ரஹ்மான் அவர்களுடைய கண்களின் மலர்ச்சியும் கருத்துகளின் தெளிவும் செயல்பாட்டில் முனையும் உறுதியும் ஆற்றலில் தெரியும் விவேகமும் இந்த நாடாளு மன்ற உறுப்பினர் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் நிறைய சாதிப்பாரென்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. துஆ செய்வோம்!


-பேட்டி ‘சேயோன்’


நன்றி : இனிய திசைகள்
ஜுன் 2009

மார்க்க உரிமைகளுக்காக போராடும் போலந்து முஸ்லிம்கள்!!!



இஸ்லாமிய பெருநாட்களை கொண்டாடுவது, இஸ்லாமியச்சட்டப்படி திருமணம் செய்வது உள்ளிட்ட மார்க்க உரிமைகளை பெறுவதற்காக போலந்து நாட்டு முஸ்லிம்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லிம்களின் இத்தகைய அடிப்படை உரிமைகளை மறுக்கும் 1936-இல் இயற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை.கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் ஆதிக்கத்தில் உள்ள போலந்தில் சட்டப்படி கழுத்தில் தாலிப்போன்ற ஒன்றை கட்டித்தான் திருமணம் செய்யவேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.முஸ்லிம்களின் பெருநாள்தினங்களான ஈகைப்பெருநாள்,தியாகப்பெருநாள்களில் கட்டாயம் பள்ளிக்கூடங்களிலும், அலுவலகங்களிலும் வந்தாகவேண்டும்.இது சுதந்திரத்தின் சுவர்க்கபூமி என்றழைக்கப்படும் ஐரோப்பாவுக்கு நாணக்கேடு என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.


போலந்தில் 30 ஆயிரம் முஸ்லிம்கள் உள்ளனர்.இது போலந்தின் மொத்த மக்கள் தொகையில் 0.1 சதவீதம்.முஸ்லிம்களில் பெரும்பாலோர் துருக்கி வம்சா வழியைச்சார்ந்தவர்கள்.பழைய யூகோஸ்லாவியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து குடியேறியவர்கள்.மீதமுள்ள மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவியவர்கள்.14-ம் நூற்றாண்டில்தான் இஸ்லாம் போலந்தில் அறிமுகமானது.அதே சமயம்சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவந்து முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தகவல்.இதற்காக அரசு அதிகாரிகள் முஸ்லிம் பிரநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள்.


அறுக்கப்பட்ட ஆடு, மாடுகளை சாப்ப்பிடும் உரிமை,ஹலாலான பொருள்கள் எது என்று அறிவிப்புச்செய்யும் உரிமை ஆகியவை புதிய சட்டத்தின் வழி பெற வாய்ப்பு இருக்கிறது.

நவீன ஈரானின் எதிர்காலத்தை தீர்மானிப்போர் இவர்கள்

நவீன ஈரானின் எதிர்காலத்தை தீர்மானிப்போர் இவர்கள் அமெரிக்கா- சியோனிஸ்ட் நிர்பந்தம் மற்றும் தலையீடு காரணமாக உள் நாட்டுகுழப்பத்தை நோக்கிச்செல்லும் ஈரானின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பத்துபேர் இவர்கள்:

1.ஆயத்துல்லா அலி காம்னி:விலாயத்தே ஃபகீஹ் என்ற உயர் பதவியில் இருக்கும் எல்லோராலும் ஆதரிக்கப்படும் மார்க்க அறிஞர்.இமாம் கொமைனியின் மரணத்திற்கு பிறகு விலாயத்தே ஃபகீஹாஹ பதவியேற்ற காம்னி மிதவாதி என்றாலும் ஈரானின் அடிப்படை கொள்கைகளை விட்டுக்கொடுத்தல் என்ற பேச்சுக்கே இடமளிக்காதவர்.

2.மஹ்மூத் அஹ்மத் நிஜாத்:பொறியலில் டாக்டரேட் முடித்த நிஜாத் மேற்கத்தியவாதிகளின் எல்லா எதிர்பார்ப்புகளையும் தகர்த்தெறிந்துவிட்டு மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஈரானின் ஏழைமக்களோடு மிக நெருக்கமாக இருக்கும் நிஜாத் தனது சொந்தவாழ்க்கையை எளிமையாக கழிப்பவர்.நகரவாசிகளான மேற்கத்திய சிந்தனையுடையவர்களின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டும் நிஜாத் இன்று உலக அரங்கில் தீவிரமான ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்.

3.ஆயத்துல்லாஹ் அலி அக்பர் ஹசிமி ரப்ஸஞ்சானி:பிஸ்தா மன்னன் என்று கூறப்படும் இவரின் குடும்ப ஊழல் கடந்த தேர்தலில் முக்கிய பிரச்சனையானது.விலாயத்தே ஃபகீஹை கூட மாற்றும் அதிகாரம் படைத்த சபையின் தலைவர்.அமெரிக்காவோடு ரகசிய தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு.

4.முஹம்மது காத்தமி:நவீனவாதி என்று வாதிக்கப்படும் ஈரானின் முன்னாள் அதிபரான இவருடைய ஆட்சிகாலத்தில் எந்தவொரு நவீனப்படுத்தலுக்கும் முயற்சி எடுக்கவில்லை.காரணமாக இவர்கூறியது அதிபர் பதவியின் அதிகாரம் ஒரு எல்லைவரைக்கும்தான் என்று.

5. அலி லிர்ஜானி:ஒரு பிரபல ஆயத்துல்லா என்றழைக்கப்படும் ஒரு மார்க்க அறிஞரின் மகனான இவர் மஜ்லிஸ் என்றழக்கப்படும் பாரளுமன்ற சபாநாயகராக இருக்கிறார்.நிஜாதுடன் பகைக்கொண்டவர் இவர் என்று மேற்கத்திய ஊடகங்கள் கூறுகின்றன.

6.ஜனரல்.முஹம்மது அலி ஜாஃபரி:ஈரான் புரட்சிப்படையின் கமான்டரான இவர் காம்னியின் விசுவாசத்திற்கு பாத்திரமானவர்.கொரில்லா போரில் திறமையுடைய இவர் இஸ்ரேலின் தாக்குதல்களை தடுப்பதில் வல்லவர் என்று கூறப்படுகிறார்.

7.மீர் ஹுசைன் மூசாவி:ஈராக் ஈரான் மீது தாக்குதல் நடத்தியபொழுது ஈரானின் பிரதமராக இருந்தவர்.நிஜாதைப்போலவே இஸ்லாமியபுரட்சியின் வாரிசான மூசாவி தற்ப்போது நிஜாதை எதிர்த்து தன்னை நவீனவாதியாக காட்டிக்கொள்கிறார்.நகரவாசிகளும் மதசார்பற்றவர்களும் சுதந்திரத்தின் பிம்பமாக மூசாவியை புகழ்கிறார்கள்.

8.முஹம்மது ஃபாகிர் ஃகலீஃபா:தெஹ்ரானில் மேயராக இருக்கும் ஃகலீஃபா புரட்சிப்படையின் கமான்டராக இருந்தவர்.2013-இல் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் எனக்கூறப்படுகிறது.

9.ஆயத்துல்லா அஹ்மத் ஜன்னத்தி:83 வயதான இவர் அதிபர் நிஜாதின் முக்கிய ஆலோசகர்.கார்டியன் கவின்சிலின் உறுப்பினரான இவர் ஈரான் அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறார். அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் மத்தியகிழக்கின் குழப்பங்களுக்கு காரணம் என வாதிப்பவர்.

10. முஹ்சின் ரஸாயி:புரட்சிப்படையின் முன்னாள் கமான்டரான இவர் ஆயத்துல்லா காம்னியின் ஆலோசகர்.

ஈரான் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ளவேண்டும்:உலக நாடுகளுக்கு வெனிசுலா அதிபர் சாவேஸ் கோரிக்கை ..

ஈரான் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ளவேண்டும் என உலக நாடுகளுக்கு வெனிசுலா அதிபர் சாவேஸ் கோரிக்கை வைத்துள்ளார் . ஈரானையும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிஜாதையும் ஏற்றுக்கொள்ளவேன்டும் என்று உலக நாடுகளோடு வெனிசுலா அதிபர் ஹிகோ சாவேஸ் வற்புறுத்தியுள்ளார்.

நிஜாதின் வெற்றி அதிகாரப்பூர்வமானது என்று கூறிய சாவேஸ் ஈரான் அரசையும், இஸ்லாமியபுரட்சியையும் ஒழிக்க நினைக்கும் மேற்கத்திய திட்டம் வெற்றிபெறாது என்று கூறினார்.ஈரானுக்கு வெளியே நடக்கும் பிரச்சாரத்தை நிறுத்தவேண்டும் என்று வெனிசுலா வெளிநாட்டு அமைச்சகம் ஏற்கனவே கோரிக்கைவிடுத்திருந்தது.

செய்தி ஆதாரம்:தேஜஸ் மலையாள நாளிதழ்

Sunday, June 21, 2009

பிறந்தநாள், திருமணநாள் வைபவங்கள் கூடாது!

பிறந்தநாள், திருமணநாள் வைபவங்கள் கூடாது!
புதன், 17 ஜூன் 2009

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பிறந்தநாள், திருமணநாள் போன்ற வைபவங்களை வீட்டில் உள்ள உறுப்பினர்கள் மட்டும் எளிமையாகக் கொண்டாடி மகிழ இஸ்லாம் அனுமதிக்கிறதா? இத்தகைய வைபவங்களை மனதில் கொண்டு உணவு சமைத்து குடும்பத்தினர் ஒன்று கூடி உண்டு மகிழ்வது மட்டுமே எங்கள் நிய்யத் ஆக உள்ளது. குர் ஆன் ஹதீஸ் ஒளியில் தெளிவுறுத்தவும். நன்றி!

ஜஸாக்கல்லாஹ் கைரன்.

மின்னஞ்சல் வழியாக சகோதரி ரஹ்மத்.

தெளிவு:

வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்...

பிறந்த நாள், திருமண நாள் வைபவங்களைச் சிறப்பித்துக் கொண்டாடுவது ஒருவரைப் பார்த்து மற்றவர் காப்பியடித்து, வழக்கமாக்கிக் கொண்டாதாகும். பிறந்த நாள், திருமண நாள் மட்டுமல்ல இன்னும் மே தினம், காதலர் தினம், மகளிர் தினம் என உலகில் கொண்டாடப்படும் பல தினங்கள் மனிதனாக ஏற்படுத்திக் கொண்டவை! இதற்கும் குர்ஆன், சுன்னாவுக்கும் எந்த ஒட்டுமில்லை! - அதாவது அவை இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத கொண்டாட்டங்கள்.

ஒரு குழந்தை பிறந்து விட்டதால் அது பிறந்த நாளுக்கு எந்தச் சிறப்பும் இல்லை! அந்த நாளில் பிறந்ததால் அக்குழந்தைக்கும் எவ்வித சிறப்பும் ஏற்பட்டு விடுவதில்லை! இவ்வகையில் மண நாளுக்கும் எச்சிறப்பும் இல்லை! இவை காலச் சுழற்சியில், காலத்தின் ஒரு நேரத்தில் நிகழும் சம்பவமாகும். ஒவ்வொரு வருடமும் இந்நாட்களை வைபவங்களாகக் கொண்டாடுவதற்கு மார்க்க அங்கீகாரம் எதுவுமில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

படிப்பினை

''எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதை நான் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அப்போது அவர்கள் 'இப்ராஹீம்' என அக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். பிறகு, பேரீச்சம் பழத்தை மென்று குழந்தையின் வாயில் அதை இட்டார்கள். மேலும், அதற்காக சுபிட்சம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்தித்தார்கள். பிறகு என்னிடம் கொடுத்துவிட்டார்கள்.'' அறிவிப்பாளர் அபூமூஸா (ரலி) (நூல்கள்: புகாரி, 5467. முஸ்லிம் 4342 )

குழந்தை பிறந்தவுடன் அதன் வாயில் இனிப்பை ஊட்டவேண்டும் என்ற கருத்தில் அஸ்மா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி புகாரி 5469. முஸ்லிம் 4343, 4344 இடம்பெற்றுள்ளன. அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி: புகாரி 5470. முஸ்லிம் 4340.

''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பிறந்த) குழந்தைகள் கொண்டு வரப்படுவதுண்டு. அப்போது அவற்றுக்காக (பரகத்) அருள்வளம் வேண்டி பிரார்த்திப்பார்கள். பேரீச்சம் பழத்தை மென்று அதைக் குழந்தையின் வாயில் தடவுவார்கள்.'' அறிவிப்பாளர் ஆயிஷா (ரலி) (நூல்: முஸ்லிம் 4345).

குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்காக அருள்வளம் வேண்டிப் பிராத்திப்பதும் இனிப்பு ஊட்டுவதும் (பின்னர் அகீகா கொடுப்பதும்) இவை நபிவழியாகும். வருடா வருடம் பிறந்த நாளை குறிப்பிட்டு அதைச் சிறப்பிக்கவோ அந்நாட்களைக் கொண்டாடவோ நபிவழியில் எந்தச் சான்றும் இல்லை. திருமணம் முடிந்து வலீமா - விருந்து அதுவும் ஒருமுறை கொடுப்பதற்கு நபிவழியில் ஆதாரங்கள் உள்ளன. மண நாளையும் வருடா வருடம் வைபவமாகக் கொண்டாட மார்க்கத்தில் எந்தச் சான்றுமில்லை!

பிறந்த நாள், திருமண நாள் வைபவங்களை ஊரறியக் கொண்டாடவும் அல்லது வீட்டிற்குள் மட்டும் கொண்டாடவும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை. மனிதர்களால் உண்டாக்கப்பட்ட இந்த வைபவங்களை நீங்கள் யாரிடமிருந்து கற்றுக்கொண்டீர்களோ அது போன்று உங்களிடமிருந்து உங்கள் சந்ததிகளும் கற்று, நாளை இவ்வைபவங்களை வெகு விமரிசையாகக் கொண்டாடுவர். அதனால் இதை நீங்களும் தவிர்த்து உங்கள் சந்ததியினரையும் தவிர்க்கும்படித் தூண்டுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்.

மதர்ஸ் டே, ஃபாதர்ஸ் டே என்று பெற்றோருக்குக் கூட "ஒரு நாள்" குறித்து அன்பை பரிமாறிக் கொள்வதன் மூலம் சமூக சீர்கேட்டை விளைவிக்கும் மேலை நாட்டு மோகம் நம் நாட்டையும் விட்டு வைக்கவில்லை. குறிப்பிட்ட ஒரு காரணத்தைக் கூறிக் கொண்டு அந்நாளில் அன்பை (!) பரிமாறிவிட்டு மற்ற தினங்களில் மறந்து போகும் ஃபார்மாலிட்டி சித்தாந்தத்தை இஸ்லாம் ஏற்பதில்லை. வருடா வருடம் பிறந்த நாள், திருமண நாள் விருந்து என்று இல்லாமல், உறவினர்கள் அனைவரும் பங்கு கொள்ளும் 'கெட் டு கெதர்' போன்று பொதுவான விருந்து என்பது நமக்கு வசதிப்படும் எந்த நாளிலும் கொடுக்கலாம்.

(இறைவன் மிக்க அறிந்தவன்)

Saturday, June 20, 2009

வக்ஃபு வாரியத் தலைவராகிறார் கவிக்கோ அப்துல் ரகுமான்


தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் பதவியை தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி ராஜினாமா செய்த பிறகு அந்த பதவிக்குரிய இடம் தற்சமயம் காலியாகவே உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலைச் சந்தித்த திமுக ஒரு சில முஸ்லிம் பிரமுகர்களுக்கு தேர்தலில் திமுகவிற்கு உங்களது விசுவாசத்தை காட்டுங்கள். பின்னர் வக்ஃபு வாரியத் தலைவர் பதவி உங்களை தேடி வரும் என்றனர்.

காதர் முகையதீனுக்கு எம்.பி சீட் இல்லை என்ற நிலை உருவான பின்னர் வக்ஃபு வாரியத் தலைவர் பதிவியை அவருக்கே கொடுக்கலாம் என்று ஒரு தரப்பு நம்பி வந்த நிலையில்.....

கவிக்கோ அப்துல் ரஹ்மான் வக்ஃபு வாரிய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். அநேகமாக இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
கவிஞராகவும் கலைஞரின் மிகச் சிறந்த ஜால்ராவாகவும் பெயர் எடுத்த கவிக்கோ அப்துல் ரகுமான் என்ன செய்யப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்போம்.

Thursday, June 18, 2009

லண்டன் சர்வதேச நீதி இணைய கலந்துரையாடலில் ஜவாஹிருல்லா


லண்டன்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லாஹ் லண்டனில் நடந்த யுனிவர்சல் ஜஸ்டிஸ் நெட்வர்க் (சர்வதேச நீதி இணையம்) அமைப்பின் வட்ட மேசை அமர்வில் கலந்துக் கொண்டார்.கடந்த ஆண்டு மலேசியாவின் பினாங்கு நகரில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.


உலகின் பல்வேறு பகுதிகளில் மனித உரிமைகளுக்காக இயங்கும் முஸ்லிம் அரசு சாரா அமைப்புகளின் ஒரு இணைப்பு அமைப்பாக இது செயல்பட்டு வருகிறது.


இதில் தமுமுகவும் இணைந்து செயல்படுகிறது.3 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உலகில் பல்வேறு நாடுகளில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன.இதில், இலங்கை வட கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களின் பிரச்னையை ஜவாஹருல்லா எடுத்துரைத்தார். ஐ.நா. உட்பட சர்வதேச அரங்குகளில் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சனை முன்னெடுத்துச் செல்வது என்று இதில் தீர்மானிக்கப்பட்டது.


பிரிட்டன், மலேசியா , இந்தோனேசியா, பிரான்ஸ், டென்மார்க், நார்வே, தென் ஆப்ரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.ஐ.நாவினால் அங்கிகரிக்கப்பட்ட மனித உரிமை அமைப்பான இஸ்லாமிக் ஹூமைன் ரைட்ஸ் கமின் மற்றும் சிட்டிசன் இன்டர்நேசனல் அமைப்பு ஆகியவை இணைந்து இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.


மேலும் பிரிட்டனில் உள்ள லீஸ்டர் நகரில் இயங்கும் இஸ்லாமிக் பவுன்டேசன் நிறுவனத்திற்கும் ஜவாஹிருல்லா சென்றார்.இந் நிறுவனத்தின் தலைமை இயக்குனர் மனாசிர் ஹசன், ஜவாஹிருல்லாவை வரவேற்று நிறுவனத்தின் பணிகளை விளக்கினார்.


நிறுவனத்தின செயல் இயக்குனரான சென்னையை சேர்ந்த இர்சாத் பாகியும் உடனிருந்தார்.இந்த நிறுவனத்தின் சார்பாக ஒரு உயர் கல்வி நிறுவனமும் இயங்கி வருகிறது. அங்கு இஸ்லாமிய வங்கியியல் குறித்த முதுகலை பட்டப் படிப்பும், டாக்டர் பட்டத்திற்காக பல்வேறு ஆய்வு பாடங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.


பின்னர் லீஸ்டரில் வாழும் தமிழக மற்றும் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில ஜவாஹிருல்லா பங்கேற்றார்.இலங்கை மவ்லவி இஸ்மாயில் நளீமி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இதில் தமிழக, இலங்கை நிலவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.


மேலும் லண்டன் இஸ்லாமிக் தாவா சென்டர் ஆண்டு விழாவில் பங்கேற்ற ஜவாஹிருல்லா இன்று லண்டன் கிரேடன் பள்ளிவாசலில் தமிழர்களுடன் கலந்துரையாடுகிறார்.


ஜுன் 21ம் தேதி பிரான்ஸ் நாட்டில் பள்ளிவாசல் அடிக்கல் நாட்டும் விழா மற்றும் கருத்தரங்கில் பங்குக் கொள்கிறார்.

Tuesday, June 16, 2009

கண்டன சுவரொட்டி..................


ஆஸ்திரேலியாவில் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு அதிராம்பட்டினத்தில் united student front (usf) சார்பில் கண்டனம் தெரிவித்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.ஆஸ்த்ரேலியாவில் மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதற்க்கு அனைத்து நாடுகளில் இருந்தும் எதிர்ப்பு வலுத்துள்ளது. தமிழ்நாட்டிலும் usf சார்பில் கண்டனம் தெரிவித்து கண்டன சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது

சத்திய பாதையில் இலட்சிய பயணம்.............


இஸ்லாமிய அழைப்பு பனி மையம் லண்டன் (IDC) வழங்கும்
ISLAMIC DAWA'H CENTRE London ( IDC ) Presents

Introducing The "Islamic Knowledge Box" - இஸ்லாமிய அறிவுக் களஞ்சியம் பற்றிய ஓர் அறிமுகம்



ONLY IN TAMIL LANGUAGE
சத்திய பாதையில் இலட்சிய பயணம்..
250 DVD கள் உள்ளடக்கிய 500 மணி நேர இஸ்லாமிய கல்வி. பல மார்க்க அறிஞர்களால் வழங்க பட்டது.இதை நேரடியாக computer அல்லது TV இலோ பார்க்கலாம்.

இலண்டன்:இயக்கங்களும் ஊடங்களும் தலைவர் பேராசிரியரை நோக்கி...!


  • BBC interview ( with BBC manivannan)
______________________________________________________________
  • With Director General of Islamic Foundation Dr Manazir Ahsan
____________________________________________________________________
  • Islamia dawah conference, East London.





த மு மு கத்தலைவர் பேராசிரியர்,Dr., MH. ஜவாஹிருல்லாஹ் அவர்களின் பிரிட்டன்

சுற்றுப்பயணக்குறிப்புகள் புகைப்படங்கள் தொடரும்....

இன்ஷாஅல்லாஹ் !


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்க்கழகம்-பிரிட்டன்.

Monday, June 15, 2009

கனடாவில் படிக்க ஸ்காலர்ஷிப்

கனடாவில் அரசியல் அறிவியல், புவியியல், சமூக நிர்வாகம், பொருளாதாரத் திட்டமிடல், மேலாண்மைப் படிப்புகள், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற போன்ற பாடப் பிரிவுகளில் பிஎச்டி படிப்பதற்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதற்கு விண்ணப்பிப்பவர்கள் முதுநிலைப் பட்டத்தில் கலை அறிவியல் பாடமாக இருந்தால் 55 சதவீத மதிப்பெண்களும் பொறியில், தொழிநுட்பமாக இருந்தால் 60 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். இது தவிர 2 ஆண்டு ஆசிரிய அல்லது ஆராய்ச்சித் துறையில் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட முதுநிலைப் படிப்பை கடந்த 5 ஆண்டுக்குள் முடித்திருப்பது அவசியம்.

இந்த உதவித் தொகை பெற விண்ணப்பிப்பது தொடர்பாக செப்டம்பர் மாதத்தில் எம்ப்ளாய்மென்ட் நியூஸ் பத்திரிகையில் அறிவிப்பு வெளியாகும்

Sunday, June 14, 2009

வரலாற்று சாதனை புரிந்தது TNTJ மாணவர் அணி

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவரணி ஓர் ஆண்டில் மட்டும் (28/05/08 to 31/05/09 - 53 வாரங்கள்) தமிழகத்தில் 80 இடங்களில் 113 கல்வி கருத்தங்குகளை நடத்தி சரித்திரம் படைத்துள்ளது.

தமிழகத்தில் எவ்வளவோ முஸ்லீம் அமைப்புகள் , கல்வி அறக்கட்டளைகள் இருந்தும் நமது சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்காக எந்த முயற்ச்சியும் எடுக்கவில்லை. காரணம் கல்வி அறக்கட்டளைகள் நடத்தும் இவர்கள் கல்வி சேவைக்காக அறக்கட்டளைகள் நடத்தாமல் காசு சம்பாதிக்க அறக்கட்டளை நடத்துகின்றனர். இவர்கள் கல்வி நிறுவனங்களை நிருவி சிறுபாண்மை கல்வி நிறுவனம் என்று அரசாங்கத்திடம் இருந்து சலுகைகளை பெற்றுக் கொண்டு ஏழை முஸ்லீம் மாணவர்களுக்கு உதவாமல், கல்வியை வியாபாரமாக்கி முஸ்லீம்களிடமே ஒரு சீட்டுக்கு இலச்சகணக்கில் கொள்ளை அடிக்கின்றனர். இவர்களால் அடித்தட்டு முஸ்லீம் மாணவர்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. இதுவரை கல்வி செவையில் ஈடுபட்டவர்கள் வயதானவர்களாக இருந்த காரணத்தினாலும், தவ்ஹீத் இல்லாமையும், பெருமை, புகழ் விரும்பும் மனப்பான்மையும் பெரிய அளவில் இவர்களால் எதுவும் செய்ய இயலாமல் போனது.

இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முஸ்லீம்களுக்கு கல்வியில் வழிகாட்ட மாணவரணியை நிறுவி, கல்வி விழிப்புணர்வு பிராசாரத்தை மாநிலம் முழுவதும் முடுக்கிவிட்டது. இதனால் தவ்ஹீதை ஏற்ற படித்த இளைஞர்கள் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் தமிழகம் முழுவதும் இடைவிடாமல் அடித்தட்டு முஸ்லீம் மக்களின் கல்வி வளர்ச்சிகாக அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

கொட்டும் மழையையும் , கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அல்லாஹ்வுடைய மிகப்பெரிய கிருபையால் ஒர் ஆண்டில் மட்டும் 80 இடங்களில் 113 கல்வி கருத்தங்குகளை நடத்தி உள்ளனர். இதுவரை எந்த முஸ்லீம் இயக்கமும் செய்திறாத சாதனையை நமது TNTJ மாணவரணி செய்துள்ளது. தவ்ஹீதை உயிர் மூச்சாக கொண்டவர்களால் மட்டுமே இம்மைக்கும் மறுமைக்கும் வழிகாட்டம் முடியும் என்பதை மீண்டும் நிருபித்துள்ளது,

தவ்ஹீத் தங்களின் வளர்சிக்கு தடையாக உள்ளது என்று கூறியவர்களால் இதை சாதிக்க முடியவில்லை.( ஓட்டும் வாங்க முடியவில்லை). இந்த கல்வி சேவையில் ஈடுபட்டவர்கள் தவ்ஹீத்வாதிகளாக இருப்பதினால்தான் உலக ஆதாயம் கருதாமல் மறுமை வெற்றி மட்டுமே குறிக்கோளக கொண்டு வேகத்தோடும் , வீரியத்தோடும் இத்தகைய சாதனைகளை புரிய முடிந்தது,
கல்வி சேவையோடு, முஸ்லீம் இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் த்மிழகத்தில் 120 -க்கும் மேற்பட்ட இடங்களில் மாணவரணியை வழுப்படுத்தி உள்ளனர். முஸ்லீம்களை வைத்து உலக ஆதாயம் தேட முயலும் போலி முஸ்லீம் அமைப்புகளை மாணவர்களும் இளைஞர்களும் புறகணித்து இம்மை மறுமைக்கும் வழிகாட்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவரணியில் சேர்ந்த வண்ணம் உள்ளனர். தமிழக முஸ்லீம் இளைஞர்களின் ஒட்டு மொத்த சக்த்தியாக நமது மாணவரணி உருப்பெற்றுள்ளது..


நமது மாணவரணி வரும் ஆண்டுகளில் கல்வி சேவையை தமிழகத்தின் அனைத்து கடை கோடி முஸ்லீம்களுக்கும் சென்றடையும் வகையில் தனது செயல்பாடுகளை பண்மடங்காக பெருக்க திட்டமிட்டுள்ளது இன்ஷா அல்லாஹ். நமது மாணவரணியின் சேவை இன்னும் சிறக்க அல்லாஹ்விடம் துவா செய்யுமாரு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

S.சித்தீக்.M.Tech
TNTJ மாணவரணி,

ஈரான் தேர்தலில் முகமத் அஹமதிநிஜாத் வெற்றி பெற்றுள்ளார்.

ஈரானில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முகமத் அஹமதிநிஜாத் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் 62,6 வீத வாக்குகளைப் பெற்றள்ளார் எனவும் அந்த நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலைமையில் ஈரான் தலைநகர் தெகரானில் இவரது வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாது என இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடாத்தி வருவதாகவும், இவ்வாறான தன்மைகளை அடுத்து அதி உயர் காவல் துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன


லண்டனில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கிளை துவக்கம்




தமிழக அளவில் இரத்ததான முகாம்கள், கண்சிகிச்சை முகாம்கள், கல்விச் சேவைகள், இலவச மருத்துவ முகாம்கள், அவசர ஊர்தி அர்பணித்தல், சுனாமி நிவாரணப் பணிகள் என்று தமிழகத்தில் பரவலாக அனைத்து சமூக மக்களுக்கும் கடந்த 14 வருடங்களாக சேவை செய்து வருகின்றது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.
இந்த அமைப்பின் கிளைகள் தமிழகம் மட்டுமில்லாது இந்திய எல்லையைத் தாண்டி கிழக்காசிய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது.
இந்த வகையில் பிரிட்டன் வந்துள்ள த மு மு க தலைவர் Dr, M.H. ஜவஹிருல்லாஹ் லண்டனில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். இந்த அமைப்பின் கிளை துவக்குவது சம்மந்தமாக பல்வேறு மக்களை சந்தித்து ஆலோசனை செய்துவருகின்றார்.

புதுவலசையில் 66வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு




இராமநாதபுரதம் மாவட்டம் புதுவலசையில் தமுமுகவின் சார்பாக 66வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப் பட்டது. இதனை தமுமுகவின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அர்ப்பணித்தார். இந்த ஆம்புலன்ஸை புதுவலசை தாஸின் அறக்கட்டளையின் நிறுவனர் தாஸின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தமுமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை செய்யது, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சலிமுல்லாஹ் கான், இராமநாதபுரம் கிழக்கு மாவட்டத் தலைவர் சாதிக் பாட்ஷர் மாவட்டச் செயலாளர் தஸ்பிக் அலி மற்றும் மேற்கு மாவட்டத் தலைவர் சல்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் போது புதுவலசை கிளையின் சார்பாக கல்வி உதவிகளும் வழங்கப் பட்டன.இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் 1200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வரலாற்று சாதனை புரிந்தது TNTJ மாணவர் அணி

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவரணி ஓர் ஆண்டில் மட்டும் (28/05/08 to 31/05/09 - 53 வாரங்கள்) தமிழகத்தில் 80 இடங்களில் 113 கல்வி கருத்தங்குகளை நடத்தி சரித்திரம் படைத்துள்ளது.

தமிழகத்தில் எவ்வளவோ முஸ்லீம் அமைப்புகள் , கல்வி அறக்கட்டளைகள் இருந்தும் நமது சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்காக எந்த முயற்ச்சியும் எடுக்கவில்லை. காரணம் கல்வி அறக்கட்டளைகள் நடத்தும் இவர்கள் கல்வி சேவைக்காக அறக்கட்டளைகள் நடத்தாமல் காசு சம்பாதிக்க அறக்கட்டளை நடத்துகின்றனர்.

இவர்கள் கல்வி நிறுவனங்களை நிருவி சிறுபாண்மை கல்வி நிறுவனம் என்று அரசாங்கத்திடம் இருந்து சலுகைகளை பெற்றுக் கொண்டு ஏழை முஸ்லீம் மாணவர்களுக்கு உதவாமல், கல்வியை வியாபாரமாக்கி முஸ்லீம்களிடமே ஒரு சீட்டுக்கு இலச்சகணக்கில் கொள்ளை அடிக்கின்றனர்.

இவர்களால் அடித்தட்டு முஸ்லீம் மாணவர்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. இதுவரை கல்வி செவையில் ஈடுபட்டவர்கள் வயதானவர்களாக இருந்த காரணத்தினாலும், தவ்ஹீத் இல்லாமையும், பெருமை, புகழ் விரும்பும் மனப்பான்மையும் பெரிய அளவில் இவர்களால் எதுவும் செய்ய இயலாமல் போனது.இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முஸ்லீம்களுக்கு கல்வியில் வழிகாட்ட மாணவரணியை நிறுவி, கல்வி விழிப்புணர்வு பிராசாரத்தை மாநிலம் முழுவதும் முடுக்கிவிட்டது.

இதனால் தவ்ஹீதை ஏற்ற படித்த இளைஞர்கள் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் தமிழகம் முழுவதும் இடைவிடாமல் அடித்தட்டு முஸ்லீம் மக்களின் கல்வி வளர்ச்சிகாக அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

கொட்டும் மழையையும் , கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அல்லாஹ்வுடைய மிகப்பெரிய கிருபையால் ஒர் ஆண்டில் மட்டும் 80 இடங்களில் 113 கல்வி கருத்தங்குகளை நடத்தி உள்ளனர். இதுவரை எந்த முஸ்லீம் இயக்கமும் செய்திறாத சாதனையை நமது TNTJ மாணவரணி செய்துள்ளது. தவ்ஹீதை உயிர் மூச்சாக கொண்டவர்களால் மட்டுமே இம்மைக்கும் மறுமைக்கும் வழிகாட்டம் முடியும் என்பதை மீண்டும் நிருபித்துள்ளது,தவ்ஹீத் தங்களின் வளர்சிக்கு தடையாக உள்ளது என்று கூறியவர்களால் இதை சாதிக்க முடியவில்லை.( ஓட்டும் வாங்க முடியவில்லை).

இந்த கல்வி சேவையில் ஈடுபட்டவர்கள் தவ்ஹீத்வாதிகளாக இருப்பதினால்தான் உலக ஆதாயம் கருதாமல் மறுமை வெற்றி மட்டுமே குறிக்கோளக கொண்டு வேகத்தோடும் , வீரியத்தோடும் இத்தகைய சாதனைகளை புரிய முடிந்தது,கல்வி சேவையோடு, முஸ்லீம் இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் த்மிழகத்தில் 120 -க்கும் மேற்பட்ட இடங்களில் மாணவரணியை வழுப்படுத்தி உள்ளனர்.

முஸ்லீம்களை வைத்து உலக ஆதாயம் தேட முயலும் போலி முஸ்லீம் அமைப்புகளை மாணவர்களும் இளைஞர்களும் புறகணித்து இம்மை மறுமைக்கும் வழிகாட்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவரணியில் சேர்ந்த வண்ணம் உள்ளனர். தமிழக முஸ்லீம் இளைஞர்களின் ஒட்டு மொத்த சக்த்தியாக நமது மாணவரணி உருப்பெற்றுள்ளது..

நமது மாணவரணி வரும் ஆண்டுகளில் கல்வி சேவையை தமிழகத்தின் அனைத்து கடை கோடி முஸ்லீம்களுக்கும் சென்றடையும் வகையில் தனது செயல்பாடுகளை பண்மடங்காக பெருக்க திட்டமிட்டுள்ளது இன்ஷா அல்லாஹ். நமது மாணவரணியின் சேவை இன்னும் சிறக்க அல்லாஹ்விடம் துவா செய்யுமாரு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

S.சித்தீக்.M.TechTNTJ மாணவரணி,

கல்வி கருத்தரங்குகள் நடைபெற்ற 80 இதாங்கள்.
வட சென்னை மாவட்டம்
1. நேதாஜி நகர்
2. ஏழுகினறு
3. மண்ணடி

தென் சென்னை மாவட்டம்
4. திருவல்லிகேணி
5. ஜாம்பஜார்
6. சேப்பாக்கம்
7. தரமணி

காஞ்சி (மேற்கு) மாவட்டம்
8. தாம்பரம்
9. பல்லாவரம்
10. குன்றத்தூர்
11.. காஞ்சிபுரம்
12. உத்திரமேரூர்
13. பீக்கங்கரனை
14. காமராஜபுரம்
15. ரங்கநாதஜபுரம்

காஞ்சி (கிழக்கு) மாவட்டம்
16. கல்பாக்கம்
17. கானத்தூர்
18.. செங்கல்பட்டு
19. கூடுவாஞ்சேரி (வள்ளளார் நகர்)

திருவள்ளுர் மாவட்டம்
20. பட்டாபிராம்
21. அரக்கோணம்
22. மதுரவாயல்
23. அம்பத்தூர்

கடலூர் மாவட்டம்
24. மேல்பட்டம் பாக்கம்
25. பரங்கி பேட்டை

விழுப்புரம் மாவட்டம்
26. திண்டிவணம்

வேலூர் மாவட்டம்
27. பேரணம்பேட்
28. வேலூர்

திருவன்ணாமலை மாவட்டம்
29. வந்தவாசி

கிருஷ்ணகிரி மாவட்டம்
30. ஓசூர்

நாமக்கல் மாவட்டம்
31. நாமக்கல்

தர்மபுரி மாவட்டம்
32. தர்மபுரி

தஞ்சாவூர்(வடக்கு) மாவட்டம்
33. கும்பகோணம்
34. வழுத்தூர்
35. கதிராமங்களம்
36. சோழபுரம்
37. ஆவூர்

தஞ்சாவூர்(தெற்கு) மாவட்டம்
38. பட்டுகோட்டை

திருவாரூர் மாவட்டம்
39. திருவாரூர்
40. முத்துபேட்டை

நாகை(வடக்கு) மாவட்டம்
41. அரசூர்
42. துளசேந்திரபுரம்

நாகை(தெற்கு) மாவட்டம்
43. நாகபட்டினம்
44. நாகூர்

திருச்சி மாவட்டம்
45. சிங்காரதோப்பு
பெரம்பலூர் மாவட்டம்
46. லெப்பைகுடிகாடு

புதுக்கோட்டை மாவட்டம்
47. புதுகோட்டை
48. அம்மாபட்டினம்
49. அறந்தாங்கி

இராமநாதபுரம் மாவட்டம்
50. இராம்நாட்
51. கீழகரை

சிவகங்கை மாவட்டம்
52. திருப்பத்தூர்
53. காரைகுடி
54.. இளையான்குடி
55. புதுவயல்

கோவை மாவட்டம்
56. போத்தனூர்
57. ஆனைமலை
58. ஆசாத் நகர்
59. பொள்ளாச்சி

திருப்பூர் மாவட்டம்
60. திருப்பூர்
61. மங்களம்

ஈரோடு மாவட்டம்
62. தாராபுரம்
63. ஈரோடு

சேலம் மாவட்டம்
64. சேலம்

மதுரை மாவட்டம்
65. காய்தேமில்லத் நகர்
66. அவனியாபுரம்
67. வில்லாபுரம்
தேனி மாவட்டம்
68. கம்பம்

திண்டுக்கல் மாவட்டம்
69. பேகம்பூர்

விருதுநகர் மாவட்டம்
70. விருது நகர்
71. அருப்புகோட்டை

நெல்லை மாவட்டம்
72. மேலப்பாளையம்
73. பாளையங்கோட்டை (ரஹ்மத் நகர்)

தூத்துக்குடி மாவட்டம்
74. செய்யுதுங்க நல்லூர்
75. ஆராம்பன்னை
76. தொங்கராங்குறிச்சி

குமரி மாவட்டம்
77. தக்கலைபாண்டிசேரி
78. சுல்தான்பேட்டைகாரைகால்
79. காரைகால்
80. TR பட்டினம்

Saturday, June 13, 2009

சவுதியில் பஸ் தீ விபத்து - கதவுகள் மூடிக்கொண்டதால், பயணிகளும் மரணம்

சவுதி அரேபியாவில் பஸ், வெளிநாட்டு பிரஜைகள் அடங்களாக 29 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததில் பயணம் செய்த 19 பேர் கொல்லப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பஸ்ஸில் 5 இலங்கையர்களும், 3 இந்தியர்களும், பாகிஸ்த்தான்,பங்களாதேஷ்,எகிப்தை சேர்ந்த தலா ஒவ்வொருவரும், சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் நேற்ற (வெள்ளிக்கிழமை காலை) நடைபெற்றுள்ளது.சவுதி அரேபியாவின் அசிசியா (Aziziyah), வின் பிரதான பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த பஸ், வழிநடுவே பாரிய ட்ரக் வண்டியுடன் உரசியதால் தீப்பற்ற தொடங்கியதும், கதவுகள் யாவும் தன்னிச்சையாக மூடிக்கொண்டுவிட்டதால், வெளிவரமுடியாமல் பஸ்ஸினுள்ளேயே 29 பயணிகளும் சிக்கிகொண்டனர்.

தீப்பற்றிக்கொண்டதாக தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த 15 தீயணைப்பு படை இயந்திரங்கள், தீயை அணைக்க கடும் பிரேயர்த்தனம் மேற்கொண்ட போதும், கண்முண், எரிந்துகொண்டிருந்த பஸ்ஸினுள் அகப்பட்டிருந்த பயணிகளை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

அம்புலன்ஸ் வண்டிகள், பிரதான நெடுஞ்சாலை காவல்துறையினர் என அனைத்து தரப்பினரும், சம்பவ இடத்தில் இருந்த போதும் ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட, சில நிமிடங்களில் பஸ் முழுதாக தீப்பற்றி எறியத்தொடங்கி விட்டது.

பஸ்ஸினுடைய சாரதியும், ட்ரக் வண்டியினுடைய சாரதியும் உயிர் பிழைத்த போதிலும், மற்றவர்களை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

இது வரை 21 உடலங்கள் பஸ்ஸில் இருந்து மீட்கப்பட்டுள்ள போதும், மிகுதி பயணிகளின் உடலங்கள் முற்றாக எரிந்து சாம்பலாக்கியிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பஸ்ஸினுள் பயணம் செய்தவர்களில் பெரும்பான்மையோர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள் எனினும், வெளிநாட்டு பயணிகளும் பயணித்தமை, பஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியிருக்கிறது.

இந்த விபத்து, சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இருந்து 30 கிலோ மீற்றர் தூரத்தில் நடைபெற்றுள்ளது.

குஜராத்; காவி காரிருளை கிழித்துக்கொண்டு ஒரு நீதியின் …

குஜராத்தில் பயங்கரவாதி நரேந்திரமோடியின் முழு ஆதரவுடன் நடத்தப்பட்ட முஸ்லீம் இனப்படுகொலையில், சுமார் 3000.முஸ்லிம்கள் கரிக்கட்டையானார்கள்.

முஸ்லீம் சகோதரிகளின் கற்புகள் சூறையாடப்பட்டது. முஸ்லிம்களுக்கு சொந்தமான பலகோடி ரூபாய் சொத்துக்கள் சூறையாடப்பட்டது. இந்த வழக்கில் ஆரம்பத்தில் மோடியின் மிரட்டலால், குற்றவாளிகள் தப்பித்தாலும் நாளடைவில் மனிதநேயமிக்கவர்களின் முயற்சியால் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுவது, அனைத்தையும் இழந்து சொந்த நாட்டில் அகதிகளாக வாழும் குஜராத் முஸ்லிம்களுக்கும், எம் சொந்தங்களின் நிலையை எண்ணி உள்ளத்தில் புழுங்கும் எம்போன்ற முஸ்லிம்களுக்கும் சட்டத்தின்மீதும், நீதியின் மீதும் சற்றே நம்பிக்கை பிறந்துள்ளது.

கடந்த 2002 .ல் காவி பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட முஸ்லீம் இனப்படுகொலையில்,பயங்கரவாதிகளை ஊக்குவித்ததாக குஜராத் பெண் அமைச்சர் மாயாபென் மற்றும் வி.ஹெஜ்.பி தலைவர் ஜெய்தீப் பட்டேல் ஆகியோர்மீது வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் மாயாபென் தலைமறைவானதோடு, தான் கைது ஆகாமல் தப்பிக்க முன்ஜாமீனும் பெற்று இருந்தார். இதற்கிடையில் அவரது முன்ஜாமீனை ரத்து செய்த ஐகோர்ட்டு நீதிபதி வகேலா அவர்கள், ‘மத ரீதியான வன்முறை செயலகள் தீவிரவாத செயல்களுக்கு சமம்;இந்தியா ஒரு ஜனநாயக நாடு, எனவே இது போன்ற சம்பாவங்களை ஊக்குவிக்கக்கூடாது என்றும் கூறினார்.

தனது ஜாமீன் ரத்தானதையடுத்து, தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்த மாயாபென் மற்றும் ஜெய்தீப் படேல் ஆகியோர் சிறப்பு புலனாய்வு போலிஸ் அதிகாரிகள் முன் சரணடைந்ததையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை போன்ற பயங்கரவாத செயல்களுக்கு ஊக்குவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

அதிலும் குறிப்பாக ‘மோடியின் ஆசியோடுதான் இந்த முஸ்லீம் இனப்படுகொலையை நிகழ்த்தினோம்’ என்று தெஹல்கா பேட்டியில் ஒரு பயங்கரவாதி கூறியிருந்தான். எனவே, தெஹல்கா பேட்டியின் அடிப்படையில் மோடியையும் விசாரணைக்கு உட்படுத்தி நீதியை நிலைநாட்டினால்தான் பயங்கரவாதம் நாட்டிலிருந்து துடைத்தெறியப்படும்.

எம்மக்கள் கருகிவிட்டாலும், நீதி கருகாமல் காக்கப்படும் என்றே முஸ்லிம்கள் நம்புகிறோம். — 3/28/2009 12:13:00 AM அன்று நிழல்களும் நிஜங்களும் இல் முகவை எஸ்.அப்பாஸ் ஆல் இடுகையிடப்பட்டது

Friday, June 12, 2009

லண்டனில் த.மு.மு.க தலைவரின் உரை


லண்டனில் த.மு.மு.க தலைவரின் உரை

லண்டனில் உள்ள இஸ்லாமிய அழைப்பு பணி மையம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் முனைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இஸ்லாம் கூறும் மனித உரிமைகள் என்ற தலைப்பில் இன்ஷா அல்லாஹ் நாளை 13-06-2009 மாலை 7 மணியாளவில் உரையாற்றவுள்ளார்கள்.



தமிழகத்தில் இரத்ததான முகாம்கள், கண்சிகிச்சை முகாம்கள், கல்விச் சேவைகள், இலவச மருத்துவ முகாம்கள், அவசர ஊர்தி அர்பணித்தல், சுனாமி நிவாரணப் பணிகள் என்று மாநிலத்தில் பரவலாக அனைத்து சமூக மக்களுக்கும் கடந்த 14 வருடங்களாக மிகச் சிறப்பான முறையில் சேவைகள் செய்து வரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இந்திய எல்லையைத் தாண்டி வெளிநாட்டின் பல பகுதிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.


அந்த வகையில் பிரிட்டன் பயணம் செய்துள்ள தமுமுக தலைவர் முனைவர் ஜவஹிருல்லாஹ் அவர்கள் லண்டனில் வசிக்கும் நமது சமுதாயத்தவர்கள் ஏற்பாடு செய்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அமைப்பின் கிளை துவக்குவது சம்மந்தமாக பல்வேறு அமர்வுகளில் மக்களை சந்தித்து ஆலோசனை செய்துவருகின்றார்.

6 மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.க்கள்

சென்னை, ஜூன் 10: கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்கள் புதன்கிழமை இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் எஸ். மாலதி புதன்கிழமை பிறப்பித்தார்.
இடமாறுதல் செய்யப்பட்ட அதிகாரிகள் பெயர், புதிய பொறுப்பு விவரம் (அடைப்பில் பழைய பதவி)

1.பிரதீப் குமார்- ராமநாதபுரம் எஸ்.பி. (கடலூர் எஸ்.பி.)

2.கே.ஏ. செந்தில்வேலன் -சென்னை சிவில் சப்ளை சி.ஐ.டி பிரிவு எஸ்.பி. (ராமநாதபுரம் எஸ்.பி.)

3.ஆர். இளங்கோ -சென்னை புறநகர் போக்குவரத்து துணை ஆணையாளர் (சென்னை சிவில் சப்ளை சி.ஐ.டி பிரிவு எஸ்.பி.)

4.டி. கிருஷ்ணமூர்த்தி -விருதுநகர் எஸ்.பி. (சென்னை புறநகர் போக்குவரத்து துணை ஆணையாளர்)

5. டி. செந்தில்குமார் -தூத்துக்குடி எஸ்.பி. (விருதுநகர் எஸ்.பி.)

6.அஸ்வின் கோட்னிஸ் -கடலூர் எஸ்.பி. (நாகப்பட்டினம் எஸ்.பி.)

7.மகேஸ்வர் தயாள் -நாகப்பட்டினம் எஸ்.பி. (தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 8-வது பட்டாலியன் கமாண்டண்ட்)

8.அமித்குமார் சிங் -தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 8-வது பட்டாலியன் கமாண்டண்ட் (திருவாரூர் எஸ்.பி.)

9.சி. மகேஸ்வரி -திருவாரூர் எஸ்.பி. (சென்னை மாநகர போலீஸ் தலைமைச் செயலக பாதுகாப்பு துணை ஆணையாளர்)

துபையில் திருச்சி ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி முன்னாள் மாண‌வ‌ர்க‌ள் ச‌ங்க‌த்தின் சார்பில் வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி

துபையில் திருச்சி ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி முன்னாள் மாண‌வ‌ர்க‌ள் ச‌ங்க‌த்தின் சார்பில் வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி

துபையில் திருச்சி ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி முன்னாள் மாண‌வ‌ர்க‌ள் ச‌ங்க‌த்தின் சார்பில் வேலூர் எம்.பி. எம்.அப்துல் ர‌ஹ்மானுக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி 12.06.2009 வெள்ளிக்கிழ‌மை மாலை அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.இந்நிக‌ழ்விற்கு லேண்ட்மார்க் ஹோட்ட‌ல் மேலாண்மை இய‌க்குந‌ர் சாதிக் காக்கா த‌லைமை தாங்க‌ இருக்கிறார்.

ஈடிஏ அஸ்கான் ம‌னித‌வ‌ள‌மேம்பாட்டுத்துறை எக்ஸிகியூடிவ் டைர‌க்ட‌ர் எம்.அக்ப‌ர் கான், ஸ்டார் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளிக‌ளின் இய‌க்குந‌ர் பேராசிரிய‌ர் எஸ்.எம். க‌ல‌ந்த‌ர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வ‌ழ‌ங்ககின‌ர்..

மேல‌திக‌ விபர‌ங்க‌ளுக்கு 050-5356650 / 050 8827493

லண்டன் இஸ்லாமிய அழைப்புப் பணி மையம் வழங்கும் உலக அமைதிக்கு வழி...ஓரிறை கொள்கை ஒன்றே!!

நாள் : 14.06.2009 ஞாயிறு 4:00- PM T PM To 9:00 PM

இடம்: PLASHET SCHOOL { OLD BUILDING }
Plashet Grove,East Ham, LONDON E6 1DG

சிறப்புப் பேச்சாளர்கள்:
மெளலவி S.கமாலுதீன் மதனி
{ அமீர் JAQH,தமிழ்நாடு }

மெளலவி ஹாபிழ் யஹ்யா
அஷ்ஷெய்க் M.மன்சூர் நளீமி
மெளலவி H.M.மின்ஹாஜ்


சிறப்பு விருந்தினர்

Dr, M.H.ஜவாஹிருல்லாஹ்
{ தலைவர் தமுமுக }


இஸ்லாமிய அழைப்புப் பணி மையம்லண்டன்

Thursday, June 11, 2009

வேலூரை வென்றெடுத்த வெற்றி வீரர் அப்துல் ரஹ்மானுக்கு பாராட்டு விழா!


அல்லாஹ்வை வணங்கி வாழ்வோம்!இல்லாதோருக்குவழங்கி வாழ்வோம்! எல்லோருடனும்இணங்கிவாழ்வோம்!


அய்மான் சங்கம்
ஐக்கிய அரபு அமீரகம்,
அபுதாபி.

வேலூரை வென்றெடுத்த வெற்றி வீரர் அப்துல் ரஹ்மானுக்கு பாராட்டு விழா!


அய்மான் அழைக்கிறது அணி திரள்வீர்!!

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....

நாள்: இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 13.06.2009 சனிக்கிழமை.

இடம்: ருசி (RUCHI) ரெஸ்டாரண்ட் அரங்கம் (ஹம்தான் கோ-அப் அருகில்) Al Mansoori plaza building, First Floor.

தமிழக முஸ்லிம்களின் தேசிய பிரதிநிதியும்,முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய அல்ஹாஜ்.எம்.அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டும் வகையில்,அய்மான் சங்கம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த இனிய நிகழ்வில் சமுதாய பெருமக்கள் அனைவரும் இயக்க பேதம் பாராமல் இன்முகத்தோடு பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். தலமை: அல்ஹாஜ்.காதர் பக் ஷ் ஹுஸைன் சித்தீகி (தலைவர் அய்மான் சங்கம், டவுன் காஜி கீழக்கரை)

ஏற்ப்புறை: இந்திய யூனியன் மு ஸ்லிம் லீக்கின் வேலூர் தொகுதி வெற்றி வீரர் அல்ஹாஜ்.எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி.


திரண்டு வரும் உங்கள் வாழ்த்துக்களால் திணர வேண்டும் அரங்கம்!!!

Wednesday, June 10, 2009

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அலிகார் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம்



அலிகார்: இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கி சிறப்பித்தது.உ.பி. மாநிலம் அலிகாரில் உள்ள முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடந்த கண்கவர் நிகழ்ச்சியில் ரஹ்மான் டாக்டர் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.
ஜூன் 7- ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது அவருக்கு இப்பட்டம் வழங்கப்பட்டது.பின்னர் ஏ.ஆர். ரஹ்மான் தனது ஏற்புரையில், ''இஸ்லாமிய சமூகம் தற்போது வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது.

நமது வாழ்க்கையில் அறிவுத் தேடலுக்கான தாகத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும். அமைதியான பலமான இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் தங்கள் பங்களிப்பை தரவேண்டும்'' என்றார்
முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ஜாகிர் உசேன், அப்துல் கலாம் ஆகியோருக்கும் அலிகார் பல்கலைக்கழகம் ஏற்கனவே கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. தற்போது அந்த பெருமையாளர்கள் பட்டியலில் ரஹ்மானும் இணைந்துள்ளார்.

Tuesday, June 9, 2009

ஆம்புலன்ஸ் இல்லாத பரமக்குடி அரசு மருத்துவமனை

பரமக்குடி: பரமக்குடி அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களாக ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.பரமக்குடி அரசு மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லாததால் மேல் சிகிக்சைக்கு நோயாளிகளை மதுரை கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

இதற்காக மருத்துவமனை துவக்கப்பட்ட சமயத்தில் அரசால் வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டு வந்தது. அது தற்போது பயன்படுத்தும் தேதி காலவதியாகி பயணம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. இதையடுத்து அவசர சிகிக்சைக்கு முதுகுளத்தூர் அரசு மருத்துமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் ஒன்றை பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த ஆம்புலன்சும் பழுதாகிவிட்டது.

அதை சரி செய்ய மதுரை பணிமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது என்றும் இரண்டு மாதங்கள் கடந்தும் அது சீரமைக்கப்பட்டு திரும்ப வரவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பரமக்குடி விபத்து மீட்புச் சங்கம், தமுமுக போன்ற சில நல்ல தொண்டு நிறுவனங்கள் விபத்து நடந்த இடங்களுக்குச் சென்று காயமுற்றவர்களை இலவசமாக உடனே ஏற்றிவந்து மருத்துவமனை களில் சேர்க்கின்றனர்.

மேல் சிகிச்சைக்கு மதுரை கொண்டு செல்வதற்கு டீசல் செலவுக்காக ரூ. 1,000 வாங்குகின்றனர். மக்களின் அவசிய தேவைகளை செய்ய வேண்டிய அரசு முக்கிய தேவையான உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் வசதிகளை செய்யாமல் இருந்து வருவதால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


Tags: ambulance, paramakudi, hospital, mudukulathur, madurai, ஆம்புலன்ஸ், பரமக்குடி, மருத்துவமனை, முதுகுளத்தூர், மதுரை.

Saturday, June 6, 2009

தமிழகம் நோக்கி படையெடுக்கும் தொழில் நிறுவனங்கள்!

தமிழகம் நோக்கி படையெடுக்கும் தொழில் நிறுவனங்கள்!



சென்னை: ஒரு சின்ன சறுக்கலுக்குப் பின் மீண்டும் இந்தியத் தொழில் துறையில் க்ரீன் சிக்னல் தெரியத் துவங்கியுள்ளது.

சர்வதேச பொருளாதார மந்தத்தால் பல நாடுகளும் தங்கள் முதலீட்டை திரும்பப் பெற்றுக் கொண்டிருந்த நிலையில், இந்திய தொழில் துறையும் தடுமாற்றத்துக்கு உள்ளானது. பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் புதிய திட்டங்களைத் தள்ளி வைப்பதாக அறிவித்தனர்.

ஆனால் இந்திய மார்க்கெட்டின் உறுதித் தன்மை மற்றும் விரிவடையும் இயல்பைப் பார்த்து அசந்துபோன அந்நிய முதலீட்டாளர்கள் மீண்டும் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.

குறிப்பாக தமிழகத்தைக் குறிவைத்துள்ளனர் இந்த முதலீட்டாளர்கள்.

செய்யாறு புதிய சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் செயின்ட கோபெய்ன், டெல்பி டிவிஎஸ், போர்டு இந்தியா போன்ற நிறுவனங்கள் தங்களது புதிய தொழிற்சாலைகள் மற்றும் விரிவாக்க யூனிட்டுகளைத் துவங்க அடுத்த வாரம் முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளன.

தைவானின் பெங் டாய் குழுமம் கூட இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் புதிய தொழிற்சாலையைத் திறக்கிறது. இதற்கான ஒப்பந்தமும் அடுத்த வாரம் தமிழக அரசுடன் கையெழுத்தாகிறது. செய்யாறு மாங்கால் கூட்டுரோடு அருகே இந்த தொழிற்சாலைக்காக 275 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 5000 தொழிலாளர்களுடன் பணியைத் துவங்கவிருக்கும் பெங் டாய், அதற்கு அடுத்த ஆண்டே 15000 தொழிலாளர்களுடன் இயங்கப்போகிறது.

இந்த நிறுவனங்களைத் தவிர மேலும் 5 நிறுவனங்கள் வரும் வாரங்களில் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்யவிருக்கின்றன.

Thursday, June 4, 2009

ஊடகங்களை வெல்லுவோம் வாருங்கள்!

புகாரியின் புதல்வன்


  • இன்று இன்பர்மேஷன் டெக்னாலஜி என்று சொல்லப்படக்கூடிய ஐ.டி (IT)துறைக்கு நிகராக வருமானத்தை அளிக்கக் கூடிய துறையாக மீடியா துறை (Media) இருந்து வருகிறது. ஆனால் இன்றைய அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர் உலகளவிலும் ஐ.டி துறை பின்னடைவு அடைந்திருப்பதையும், பிரபலமான ஐ.டி நிறுவனங்களே தங்களின் ஊழியர்களை அன்றாடம் வெளியே அனுப்பி வருகிறது. ஆனால் அதற்கு பகரமாக ஊடகத்துறையின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றது.

  • இந்த ஊடகத்துறையின் தொடர்பாக முதலில் என்னென்ன கல்விகள் தமிழகத்தில் இருந்து வருகின்றது என்று பார்க்கலாம்.
    விஷுவல் கம்யூனிகேசன் (Visual Communication), ஜெர்னலிசம் (Journalisam), எலக்ட்ரானிக்ஸ் மீடியா (Electronic Media), மாஸ் மீடியா அண்ட் கம்யூனிகேசன்ஸ் (Mass Media and Communications) ஆகிய படிப்புகளை தமிழ கத்தில் பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் பயிற்று விக்கப்பட்டு வருகின்றன.

  • விஷுவல் கம்யூனி கேஷன்ஸ் (Visual Communication) மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மீடியா (Electronic Media) ஆகிய இரண்டு படிப்புகளும் பி.எஸ்.சி.(B.Sc.), மற்றும் எம்.எஸ்.சி (M.Sc.) படிப்புகளாக வழங்கப்பட்டு வருகின்றன. பி.எஸ்.சி படிப்பதற்கு பிளஸ் டூவில் எந்த குருப் படித்தவர்களும் இதில் சேரலாம். அது போலவே இளநிலை பட்டம் முடித்தவர்கள் யார் வேண்டுமானாலும் எம்.எஸ்.சி விஸ்காம் (M.Sc. Viscom) மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மீடியா (M.Sc.Electronics Media)வைப் படிக்கலாம். இந்த விஸ்காம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மீடியா படிப்புகளில் இணையதள வடிவமைப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு, மல்டி மீடியா, அனிமினேஷன் ஆகியவை பாடத்திட்டங்களாகும். இதனை படித்து முடித்து விட்டால் தொலைக்காட்சிகள், வானொலிகள், விளம்பர தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமில்லாமல் பல்வேறு அனைத்து ஊடகங்களிலும் நுழைவதற்கு இந்த படிப்புகள் ஒரு விசிடிங் கார்டு போன்று ஆகும்.
  • இதனைப் படித்து விட்டு வேலையில் சேர்பவர்களுக்கு ஆரம்ப நிலை சம்பளமே குறைந்தது ரூ.10,000க்கு மேல் கிடைக்கும். மேலும் வளைகுடா நாடுகளில் இந்த படிப்பு களுக்கு மவுசு அதிகமாக உள்ளது. ஊதியமும் மாதத்திற்கு லகரங்களில் கிடைக்கும்.
  • ஜெர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் படிப்புகளைப் பொறுத்த மட்டிலும் பத்திரிக்கை துறையில் நுழைய விரும்புபவர்கள் இதனை தேர்ந்தெடுக்கலாம். ஆரம்ப நிலை ஊதியமாக குறைந்தது ரூ.7,000 கிடைக்கும். இதுவே ஆங்கில ஊடகங்களாயின் ஆரம்ப நிலை ஊதியமே ரூ. 20,000க்கு குறையாது.
  • மேற்கண்ட ஊடகப் படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்க விரும்புபவர்கள் ஏதேனும் ஒருதுறையை முன்னரே தேர்ந்தெடுத்து அதில் சிறப்பு பயிற்சி பெறுவதே நன்று. படிக்கும் போதே பகுதி நேரம் வேலையை தேர்ந்தெடுக்கும் வசதியும் இந்தப் படிப்புகளில் உண்டு.
    இந்த படிப்பினை வழங்கும் கல்வி நிறுவனங்கள்......
  • 1) புதுக்கல்லூரி, சென்னை
  • 2) லயோலோ கல்லூரி, சென்னை
  • 3) சதக் கல்லூரி, சென்னை
  • 4) அண்ணா பல்கலைக் கழகம்
  • 5) சென்னை பல்கலைக் கழகம்
  • 6) காமராஜர் பல்கலைக் கழகம்
  • 7) ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜெர்னலிசம், சென்னை


Wednesday, June 3, 2009

மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவேன் வேலூர் எம்.பி. அப்துல் ரகுமான் பேட்டி


வேலூர் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரகுமான் நாடாளுமன்ற உறுப்பினராக தான் மேற்கொள்ளவுள்ள பணிகள் குறித்து தமிழன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதன் விபரம் வருமாறு:நிச்சயம் எம்.பி.க்களின் இமேஜை மாற்று வொம்.
அதற்காக இப்போதே களத்தில் இறங்கிவிட்டோம். தெரு முனையிலே மைக் பிடித்து வாக்காளர்களுக்கு நன்றி சொல்லாமல், தேர்தலின் போது எப்படி வீடு, வீடாகச் சென்று வாக்கு கேட்டேனோ அதேபோல் வீடு வீடாக அனைவரையும் சந்தித்து நன்றி சொல்லி வருகிறேன்.


இந்த தொகுதியைச் சுற்றி வந்ததில் இருந்து குடிநீர் பிரச்சினைதான் முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது என்பது தெரிகிறது. முதலில் அந்தப் பிரச்சினையை தீர்க்க முயற்சி எடுப்பேன். என் முழுநேரப் பணியே வேலூர் தொகுதியையும், அங்குள்ள மக்களையும் சுற்றி வருவதுதான். இந்தத் தொகுதி மக்கள் எந்த வேறுபாடும் இல்லாமல் என்னை ஆதரித்த பெருந்தன்மையுடைய வர்கள். அவர்கள் காட்டிய பெருந்தன்மைக்கு நன்றிக் கடனாக நானும் யாரையும் வேறுபடுத்திப் பார்க்காமல் அனைவருக்கும் பணியாற்றப் போகிறேன்.

மேலும், பொது மக்களுக்கான சேவையை நான் இளம் வயதில் இருந்தே செய்து வந்திருக்கிறேன். எம்.பி. பதவி என்பது எனக்கு மெருகூட்டுவதாக இருப்பதோடு, நிறைய பொறுப்புகளை யும் வைத்திருக்கிறது. நிச்சயம் மக்களோடு மக்களாக இருந்து மக்கள் பார்க்க முடியாதவர்கள் எம்.பி.க்கள் என்ற இமேஜை உடைத்துக் காட்டுவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் மு க ஸ்டாலினுக்கு முஸ்லிம் லீக் வாழ்த்து




Monday, June 1, 2009

அழைப்பிதழ் - புரைதாவில் சமூக ஒற்றுமைக்கான ஒன்றுகூடல்


இரண்டு பெண்களை இந்திய ராணுவத்தினர் கற்பழித்துக்கொன்ற சம்பவம்:கஷ்மீரில் போராட்டம் வலுக்கிறது.

சி.ஆர்.பி.எஃப் ஐச்சார்ந்த ஜவான்கள் சேர்ந்து இரண்டு பெண்களை கற்பழித்து கொன்ற சம்பவத்தை தொடர்ந்து வடக்கு கஷ்மீரில் போராட்டம் வலுக்கிறது.இரண்டு தினங்களாக தொடரும் போராட்டத்தில் 40 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.இரண்டாம் நாளாகிய நேற்றும் ஷோபியான்,புல்வானா நகரங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தது.சனிக்கிழமை அன்று நிலோஃபர் ஜான்(வயது 22) ஆஸியா ஜான்(வயது17)ஆகிய பெண்களை கடத்திக்கொண்டு சென்று சி.ஆர்.பி.எஃ ஐச்சார்ந்த வெறியர்கள் கற்பழித்து கொலைச்செய்துள்ளனர்.ஆனால் இச்சம்பவத்தை விபத்து என்று கூறுகிறது காவல்துறை.இப்பெண்களின் சகோதரனான ஸஹூர் அஹ்மதுதான் ஆஸியாவின் உடலை நுல்லயில் பாலத்தின் அருகில் முதலில் பார்த்திருக்கிறார்.அப்போது உடலின் பல இடங்களிலும் காயங்களும் ஆடைகள் கிழிந்த நிலையிலும் இருந்ததாக கூறுகிறார்.இச்சம்பவத்தை கண்டித்து அந்நகரைச்சார்ந்த பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் பல இடங்களிலும் மோதல் நடைபெற்றது.இரண்டாம் தினமான நேற்றும் இரு நகரங்களிலும் கடைகளும் அலுவலகங்களும் பூட்டிகிடந்தன.ராணுவத்தின் இந்த அக்கிரமத்தை கண்டித்து இன்று முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார் ஹுரியத் தலைவர் ஸய்யித் அலிஷா கிலானி.க்ஷ்மீரிகளின் உயிர் மட்டுமல்ல அவர்களின் மானத்தையும் பறித்துக்கொண்டிருக்கிறது இந்திய அரசு என மீர்வாய்ஸ் ஃபாரூக் அவர்கள் குற்றம் சுமத்தினார்.