Friday, October 22, 2010

குர்பானி

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

குர்பானி

அல்லாஹுத்தஆலாவின் நெருக்கத்தை பெருவதற்காக நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் காட்டிய வழிமுறையில் கால்நடைகளில் (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில்) ஏதாவது ஒன்றை அறுத்து பலியிடுவதற்கு குர்பானி என்று கூறப்படும்.

இறைவன் நபி இப்ராஹீம்(அலை) அவர்களை சோதிக்க நாடி, அவர்களது பாச மகன் இஸ்மாயீல்(அலை) அவர்களை அறுத்து தியாகம் செய்ய கட்டளையிட்டான். இறைவனின் கட்டளைக்குக் கட்டுப்பட்ட அவ்விருவரைப் பற்றி தனது திருமறைக் குர்ஆனில் ……

“என்னருமை மகனே! நிச்சயமாக நான் உன்னை அறுத்துப் பலியிடுவதாய் மெய்யாகவே கனவில் கண்டேன்; ஆகையால் நீ என்ன கருதுகிறாய்? என்று சிந்திப்பாயாக!” என்று கூறினார். (அதற்கு) ”என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடி செய்யுங்கள். இன்ஷாஅல்லாஹ் பொறுமையாளர்களில் உள்ளவனாக என்னை நீங்கள் காண்பீர்கள்” என்று அவர் கூறினார். (37;102)

இருவரின் துணிவையும் ஏற்றுக்கொண்ட இறைவன், இஸ்மாயீல்(அலை) அவர்களுக்குப் பகரமாக ஒரு ஆட்டை பலியிடச் செய்தான்.

வலுப்பமான ஓர் ஆட்டை (பலியிடப்படவிருந்த) அவருக்குப் பகரமாக்கிக் கொடுத்தோம். (37;107)

குர்பானி ஓர் கடமை:

ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு முதல் நபி(ஸல்) அவர்களின் உம்மத்தாகிய நமக்கு ‘குர்பானி’ கடமையாக்கப்பட்டது.

அல்லாஹ் தன் அருள்மறை குர்ஆனில்………

ஆகவே, உம்முடைய ரப்பை தொழுது, (அவனுக்காக) குர்பானி கொடுப்பீராக! (108;02) என்று கட்டளையிட்டுள்ளான்.

மேலும், நபி(ஸல்) அவர்கள், கருப்பு நிறம் கலந்த கொம்புள்ள இரண்டு வெள்ளை ஆடுகளை தங்களது திருக்கரத்தால் அருத்துப் பலியிட்டார்கள். முதல் ஆட்டை அறுத்த போது, அல்லாஹ்வே! இது முஹம்மதாகிய எனக்கும், என் குடும்பத்தாருக்காகவும் என்றார்கள். பின்பு இரண்டாவதை அறுத்தபோது, இது எனது உம்மத்(சமுதாயத்திற்)காக என்று துஆச் செய்தார்கள்.

குர்பானி கொடுக்கத் தகுதியானவை:

ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் (ஆடு,மாடு,ஒட்டகம் போன்ற) கால்நடைப்பிராணிகளிலிருந்து அவர்களுக்கு அவன் உணவாக கொடுத்தவற்றின் மீது (அவற்றை அறுக்கும்போது) அல்லாஹ்வின் திருப்பெயரை அவர்கள் கூறுவதற்காக, குர்பானியை நாம் ஏற்படுத்தினோம். (22;34)

மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் ஏழு நபர்கள் கூட்டு சேர்ந்து கொடுக்கலாம். ”ஆடு” தனி நபராக கொடுக்க வேண்டும்.

ஒட்டகம் ஐந்து வயது பூர்த்தியடைந்ததாகவும், ஆடு, மாடு இரண்டு வயது பூர்த்தியடைந்ததாகவும் இருக்க வேண்டும்.

குர்பானி கொடுக்கும் நேரம்:

துல்ஹஜ் பிறை-10 (ஹஜ்ஜுப் பெருநாள் அன்று) சூரியன் உதயமாகி பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின்னாலிருந்து …, பிறை – 13 வரை நான்கு நாட்கள் கொடுக்கலாம்.

பெருநாள் தொழுகைக்கு முன்பு குர்பானி கொடுக்கக் கூடாது. ஏனென்றால் அல்லாஹ் குர்ஆனில் ……..

“ஆகவே, உம்முடைய ரப்பை தொழுது, (அவனுக்காக) குர்பானி கொடுப்பீராக” (108;02)

”நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய அறுப்பு(குர்பானியு)ம், என் வாழ்வும், என் மரணமும் அகிலத்தின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும்”, என்று (நபியே!) நீர் கூறுவீராக! (6;162)

என்று முதலில் தொழுகையையும், அடுத்ததாக குர்பானியையும் குறிப்பிட்டுள்ளான்.

பராஉ இப்னு ஆஜிப்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தொழுகைக்குப்பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அதில்) “யார் நமது தொழுகையைத் தொழுது, (அதன் பின்) நாம் குர்பானி கொடுப்பது போன்று கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தனக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவராக மாட்டார்” என்று கூறினார்கள். (புகாரி)

குர்பானி கொடுப்பவர் பின்பற்ற வேண்டியவை:

குர்பானி கொடுக்க நாடி விட்டால், துல்ஹஜ் பிறை பிறந்தது முதல் குர்பானியை நிறைவேற்றும் வரை, நகம் வெட்டுவதையும் முடிகளை நீக்குவதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உம்மு ஸலமா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க நாடினால் துல்ஹஜ் பிறை பிறந்தது முதல் அதை (குர்பானியை) நிறைவேற்றும் வரை தனது முடி, நகம் ஆகியவற்றை களைவதை தவிர்த்துக் கொள்ளட்டும். (முஸ்லிம்)

குர்பானி கொடுக்கும் வரை எதுவும் சாப்பிடாமல் இருந்து குர்பானி இறைச்சியை முதல் உணவாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுப் பெருநாள்) தொழுகையிலிருந்து திரும்பும் வரை உண்ணமாட்டார்கள். பின்னர், குர்பானி இறைச்சியை உண்பார்கள். (ஜாதுல் மஆது)

குர்பானியின் நோக்கம்:

(குர்பானி பிராணிகளாகிய) அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ ஒருக்காலும் அல்லாஹ்வை அடைவதில்லை; என்றாலும், உங்களிலுள்ள தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும். (22;37)

*********************************************************************

மவ்லவி அ. சீனி நைனார் முஹம்மது தாவூதி (துபாய்)

Saturday, October 9, 2010

அதிராம்பட்டினம் பிரச்சினை முடிவுக்கு வந்தது!

அதிராம்பட்டினத்தில் நூற்றாண்டு காலமாக நிலவிவந்த ஊர் பெயர் பிரச்சினை முடிவுக்கு வந்ததுள்ளது.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தமிழகத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஊர். இங்கு நீண்ட காலமாக அதிராம்பட்டினத்தை அதிவீரராம பாண்டியன்தான் ஆட்சி செய்தான் அதனால்தான் அதிராம்பட்டினம் என பெயர் வந்தது. சிலர் நம்பியும் பேசியும் வந்தார்கள்.

இந்நிலையில் அதிரைவரலாறு  http://adiraihistory.blogspot.com/  என்னும் வலைப்பூ அதிராம்பட்டினத்திற்கும் அதிவீரராம பாண்டியனுக்கும் அறவே சம்மந்தமோ,தொடர்போ இல்லை என்று வரலாற்று ஆதாரங்களுடன் நிருபித்திருக்கிறார்கள்.

இந்த இனிய செய்தியை தமிழுலகம் முழுவதும் இணையம், பேஸ்புக், ஓர்குட், மின் குழுமம், மின்மடல்,sms உள்ளிட்ட சகல வழிகளிலும் எடுத்து சென்று மக்கள் பார்வைக்கு வைப்பதுடன் நாமும் கருத்துக்கூறி நல்ல வரலாற்று தளத்திற்கு ஆதரவு கரம் நீட்டுவோமாக!

வலைப்பூ உள்ளவர்கள் இந்த செய்தியை வெளியிடவும்.

Wednesday, November 11, 2009

வாசர்களின் கேள்விகளுக்கு பதில் தருகிறார் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள்!

தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தலைவரும் மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கினைப்பாளருமான பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் www.muthupet.org இணையத்தளத்தில் வாசகர்களின் வினாக்களுக்கு விடைத்தர இசைந்துள்ளார்கள்!! எனவே, தமிழ் கூறும் நல்லுக வாசகர்களே, ஆயத்தமாகுங்கள் உங்கள் கேள்வியை தொடுக்க!
அரசியல்
சமுதாயம்
மனித உரிமை
தேர்தல் களம்
இஸ்லாம்
இஸ்லாமிய வங்கி
இன்னும் இத்தனைக்காலம் உங்கள் மனக்கிடங்கில் போட்டுவைத்த கேள்விகளை ask@muthupet.org க்கு அனுப்பித்தாருங்கள்.
அனுப்ப வேண்டிய கடைசித்தேதி- டிசம்பர் 05/09.
சகோதரர்களே! இணையத்தொடர்பு இல்லாத சகோதர சகோதரிகளிடமும் தகவல் கொடுத்து நீங்களே அவர்களின் கேள்வியைப்பெற்று அனுப்பித்தரலாம்!
இப்படிக்கு.
முத்துப்பேட்டை இணையதளம்
www.muthupet.org

Monday, October 5, 2009

விபச்சாரிகளுக்கு புர்கா அணிவித்து முஸ்லிம் பெண்களை இழிவு படுத்தும் காவல்துறையின் போக்கைக் கண்டித்து காவல்துறை ஆணையரிடம் தமுமுக மனு

(தமுமுக மாநிலச் செயலாளர் பேரா.ஜெ.ஹாஜா கனி வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:)விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை புவனேஸ்வரி மற்றும் சில விபச்சாரப் பெண்கள், முஸ்லிம் பெண்கள் கண்ணியத்துடன் அணிகின்ற புர்காவை அணிந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் படங்கள் பத்திரிக்கைகளில் வெளியாகி உள்ளன.

மேலும், விபச்சார வழக்கில் கைதாகும் கழிசடைப் பெண்களுக்கு முஸ்லிம் பெண்களுக்கே உரிய கண்ணியமான புர்காவை அணிவித்து, அழைத்து வரும் கயமைத்தனம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது பத்திரிக்கைகளிலும் வெளிவருகிறது.இதனால் முஸ்லிம் சமுதாயப் பெண்கள் பெரும் மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் உள்ளாகியுள்ளனர்.

புர்கா அணிந்து செல்லும் பெண்கள் கேலி செய்யப்படும் வாய்ப்பும் இதனால் உருவாகியுள்ளது. விபச்சாரிகளுக்கு புர்கா அணிவிக்கும் தரங்கெட்ட செயûலைத் தடுத்து நிறுத்துமாறு தமிழக முதல்வருக்கும், தமுமுக தலைவர் பேரா. டாக்டர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் கடிதம் எழுதியுள்ளார் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் தமுமுக மாநிலச் செயலாளர் , பி.எஸ்.ஷாகுல் ஹமீத், வடசென்னை மாவட்ட செயலாளர் ஏ.செய்யது அபூதாஹிர் ஆகியோர் தமுமுக சார்பில் புகார் மனு அளித்துள்ளனர்.