Friday, August 28, 2009

பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி சான்றிதழ் ஹஜ் பயணிகள் சமர்ப்பிக்க உத்தரவு


விழுப்புரம் - மயிலாடுதுறை ரெயில்களின் வழிப்பாதை




ஸ்வைன் ப்ளூ எதிரொலி ஹஜ் பயணிகளுக்கு மருத்துவ சான்றிதழ் கட்டாயம் - சவூதி அரசு உத்தரவு



பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்க ஹஜ் யாத்திரையாக வரும் இந்திய யாத்ரீகர்கள் கட்டாயம் மருத்துவ சான்றிதழுடன் வர வேண்டும், தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என சவூதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பான உத்தரவை சவூதி சுகாதார அமைச்சகம் பிறப்பித்துள்ளது.மேலும், தத்தமது நாட்டிலேயே பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கும் சான்றிதழ்களையும் யாத்ரீகர்கள் கொண்டு வர வேண்டும் எனவும் சவூதி அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதவிர பன்றிக் காய்ச்சல் அதிக அளவில் பாதிக்கும் 12 வயதுக்குட்பட்டோரையும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களையும் அனுமதிப்பதில்லை என்றும் சவூதி சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.இந்த தடை காரணமாக இந்திய ஹஜ் கமிட்டி பல்வேறு நடவடிக்கைளில் இறங்கியுள்ளது.அதன்படி காய்ச்சல், சளி போன்ற பிரச்சினைகள் உடையோரை ஹஜ் யாத்திரைக்கு அனுப்பாமல் தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதுதொடர்பான விரிவான நடவடிக்கைகளுக்காக மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகளுடன், ஹஜ் கமிட்டி உறுப்பினர்கள் வருகிற 29ம் தேதி விவாதிக்கவுள்ளனர்.இந்தியாவிலிருந்து யாத்திரை செல்ல விரும்புவோருக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மூலம் மருத்துவ சான்றிதழ் அளிக்கவும், தடுப்பு மருந்து கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.ஆனால் தற்போது பன்றிக் காய்ச்சலுக்கென பிரத்யேகமான தடுப்பு மருந்து எதுவும் இல்லை. டாமிப்ளூ மாத்திரை மட்டுமே உள்ளது. அதையே தடுப்பு மருந்தாக கொடுக்கப் போகிறார்களா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு தெரிவிக்கவி்ல்லை.

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் இணையத்தளம் துவக்கம்










துபாய் : துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களது வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களுக்கான பிரத்யேக இணையத்தளம் http://www.jamalians.com/ துவக்க நிகழ்ச்சி 26.08.2009 புதன்கிழமை மாலை லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

இஃப்தார் நிகழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிகழ்ச்சியின் துவக்கமாக ஜமால் முஹைதீன் இறைவசனங்களை ஓதினார். நிகழ்ச்சிக்கு பேராசிரியர் கலந்தர் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் நமது கல்லூரியின் முன்னாள் உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் வேலூர் பாராளுமன்ற உறுப்பினராகி பல்வேறு சமூக நலப்பணிகளை மேற்கொண்டு வருவதற்கு பாராட்டு தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார தேக்கநிலையினை நாம் மனதைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்றார். முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வருடத்திற்கு நான்கு முறையேனும் நடைபெற வேண்டும் என்ற தனது ஆவலை தெரிவித்தார்.

அபதுல் ஷுக்கூர் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வருடந்தோறும் கல்லூரியில் முன்னாள் மாணவர் தினமாக அனுசரித்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதில் தனக்கும் இவ்விருது வழங்கியதை நினைவு கூர்ந்தார்.

வயதான நிலையிலும் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பல்வேறு நாடுகளிலும் ஆர்வமுடன் கலந்து கொண்ட நிகழ்வு தன்னை மெய்சிலிர்க்க வைத்த்து என்றார்.

நமது முன்னாள் மாணவர் என்ற முறையில் வேலூர் எம்.பி. எம். அப்துல் ரஹ்மான் கல்லூரியின் வளர்ச்சிக்கு ஆற்றிவரும் பணிகளை நினைவு கூர்ந்தார்.ஈடிஏ அஸ்கான் மனிதவள மேம்பாட்டுத்துறை எக்ஸிகியூடிவ் டைரக்டர் எம். அக்பர் கான் கல்லூரி முன்னாள் மாணவர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள http://www.jamalians.com/ என்ற இணையத்தளத்தினை துவக்கி வைத்தார். இதற்காக தங்களது பங்களிப்பினை நல்கிய ஃபரீஜ், ஜாபர் சித்தீக், அப்துல் ஷுக்கூர், இல்யாஸ், பதாவுல்லாஹ், மீரான், சுல்தான், ஜாவித் உள்ளிட்டோரைப் பாராட்டினார்.

வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் ஆற்றி வரும் பணிகள் அளவிடற்கரியது. வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் என மட்டுமல்லாது கல்லூரியின் முன்னாள் மாணவர் என்ற வகையில் எனது பணிகள் என்றும் தொடரும் என்றார். கல்லூரியின் வளர்ச்சிக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் குமாரின் பணிகளை நினைவு கூர்ந்தார்.

டெல்லி AICTE சேர்மனுடன் தனது சந்திப்பு மூலம் கல்லூரிக்கு ஆற்றிய பணிகள் உள்ளிட்டவை குறித்தும் விவரித்தார். எந்த் நேரத்திலும் கல்லூரிக்கு தனது சேவை தொடரும் என்றார். மேலும் முன்னாள் மாணவர்களது உதவித்தொகையின் மூலம் பல ஏழை மாணவர்கள் உயர்கல்வியினை தடையில்லாது கற்று வருகின்றனர்.

இத்தகைய பணிகளுக்கு தொடர்ந்து உதவிட கேட்டுக் கொண்டார்.வேலூர் எம்.பியின் பதவியேற்பு நிகழ்ச்சி, பாராளுமன்ற கன்னிப்பேச்சு ஆகியவை ஒளிபரப்பப்பட்டது.கல்லூரி முன்னாள் மாணவர்கள் எம். அப்துல் கத்தீம்,எஸ்.எம். ஃபாரூக், ஹாமித், முத்து உள்ளிட்டோர் தங்களது மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.

ஜாபர் சித்திக் நன்றி கூறினார். முதுவை ஹிதாயத் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Tuesday, August 25, 2009

இஸ்ரேலிடமிருந்து ரூ.100 கோடி மதிப்பில் ஏவுகணைகள் வாங்க இந்தியா ஒப்பந்தம்

டெல் அவீவ்:இஸ்ரேலிலிருந்து ஏவுகணைகள் வாங்க ரூ.100 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை இந்திய ராணுவம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் படி 2012 ஆம் ஆண்டில் 18 ஸ்பைடர் ஏவுகணைகளை இஸ்ரேல் இந்தியாவுக்கு அளிக்கும். இஸ்ரேலிலுள்ள ஆயுத நிறுவனமான ராஃபேல் அட்வான்ஸ்ட் டிபன்ஸ் சிஸ்டம்ஸ் இந்தியாவுக்கு ஏவுகணைகளை தயாரித்து அளிக்கும் என்று ஜெருசலம் போஸ்ட் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

2008 இலிருந்து ரஷ்யாவை முந்தி இஸ்ரேல் இந்தியாவிற்கு ஆயுதங்களை விற்பனைச்செய்யும் நாடாக மாறியுள்ளது. ஆயுத ஒப்பந்தங்களின்போது இஸ்ரேல் நிறுவனங்களான ஏரோ ஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ராஃபேல் ஆகியன இந்திய அதிகாரிகளுக்கு பெருந்தொகை லஞ்சமாக அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக ஒப்பந்தத்தை செயல்படுத்துவது சில மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

மைக்கேல் ஜாக்சன் மரணத்திற்கு மருந்தே காரணம்-தடயவியல் நிபுணர் அறிக்கை

ஹூஸ்டன்: பாப் மேதை மைக்கேல் ஜாக்சன் மறைவுக்கு, அவருக்கு அபாயகரமான மயக்க மருந்தான புரோபபால், மிக அதிக அளவில் கொடுக்கப்பட்டதே காரணம் என்று லாஸ் ஏஞ்சலெஸ் தலைமை மருத்துவ தடயவியல் நிபுணர் டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்வரன் அறிக்கை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஜாக்சன் மரண வழக்கை கொலை வழக்காக லாஸ் ஏஞ்சலெஸ் போலீஸார் மாற்றவுள்ளனர்.

ஜாக்சன் உடலில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ தடயவியல் சோதனை முடிவுகள் இதுவரை வெளியிடப்படாமல் இருந்தது. இதனால் ஜாக்சன் மரணத்திற்கு என்ன காரணம் என்றும் தெரியாமல் இருந்தது.

ஆனால் ஜாக்சனின் டாக்டர் கான்ராட் முர்ரே கடைசி கொடுத்த அபாயகரமான மயக்க மருந்தான புரோபபால்தான் ஜாக்சன் உயிரைக் குடித்ததாக சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து முர்ரே வீடு, அலுவலகங்களில் சோதனைகள் நடைபெற்றன. தீவிர விசாரணையும் நடந்து வருகிறது. இதில் முர்ரேவுக்கு எதிரான ஆதாரங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து முர்ரே எந்த நேரத்திலும் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில் வெளியிடப்படாமல் இருந்து வந்த மருத்துவ தடயவியல் அறிக்கையை லாஸ் ஏஞ்சலெஸ், தலைமை மருத்துவ தடவியல் நிபுணர் டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்ரவன் ஹூஸ்டன் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளார்.
இதையடுத்து ஜாக்சனின் டாக்டர் கான்ராட் முர்ரேவுக்கு எதிராக கலிபோர்னியா கோர்ட் தேடுதல் வாரண்ட்டை பிறப்பித்துள்ளது.

அந்த வாரண்ட் உத்தரவில், லாஸ் ஏஞ்சலெஸ் தலைமை மருத்துவ தடயவியல் அதிகாரி டாக்டர் சத்யவாகீஸ்வரன் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், மைக்கேல் ஜாக்சனின் மரணத்திற்கு அதிக அளவிலான, அபாயகரமான புரோபபால் மருந்து கொடுக்கப்பட்டதே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஜாக்சன் மரண வழக்கு கொலை வழக்காக மாறுகிறது. டாக்டர் கான்ராட் முர்ரே கைது செய்யப்படவுள்ளார்.

சென்னை டாக்டர் ..!
ஜாக்சன் உடலில் மருத்துவ தடயவியல் சோதனைகளைச் செய்த டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்வரன் சென்னையைச் சேர்ந்த தமிழர் ஆவார்.

கடந்த 1992ம் ஆண்டு அவர் லாஸ் ஏஞ்சலெஸ் தலைமை மருத்துவ தடயவியல் அதிகாரியாக பொறுப்பேற்றார். அதற்கு முன்பு துணை மருத்துவ தடயவியல் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

புகழ் பெற்ற ஓ.ஜே. சிம்ப்சன் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்கு இவர்தான் மருத்துவப் பிரேதப் பரிசோதனை அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 26ம் தேதி மைக்கேல் ஜாக்சன் உடலை பிரேதப் பரிசோதனை செய்தார் டாக்டர் சத்யவாகீஸ்வரன்.

சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த டாக்டர் வாகீஸ்வரன், 1971ம் ஆண்டு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் டாக்டர் படிப்பை முடித்தார். பின்னர் ஒரு வருட பயிற்சியை முடித்த அவர் 1972ம் ஆண்டு அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தார்.

ப்ரூக்ளின் யூத மருத்துவமனையில் ஓராண்டு நேரடி மருத்துவப் பயிற்சிப் படிப்பில் சேர்ந்த அவர் 1973ம் ஆண்டு அதை முடித்தார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் செயின்ட் லூக் மருத்துவமனையில் முழு ஆண்டு உடற்கூறியல் மற்றும் மருத்துவ நோயியல் பிரிவில் சேர்ந்து படித்தார்.

பூரண மது‌வில‌க்கு அமு‌ல்படு‌த்த கோ‌ரி த‌மிழக இல‌‌ட்‌சிய குடு‌‌‌ம்ப‌‌ம் உ‌ண்ணா‌விரத‌ம்


கோடி‌க்கண‌க்கான குடு‌ம்ப‌ங்களை ‌சீர‌ழி‌த்து, ப‌ல்வேறு சமூக, அர‌சிய‌ல் ‌‌சீர‌ழிவுகளு‌க்கு காரணமாக இரு‌க்கு‌ம் மது, போதை‌ப் பொரு‌ட்களை மு‌ற்‌றிலுமாக தடை செ‌ய்ய த‌மிழக அரசு மு‌ன்வர வே‌ண்டு‌ம் எ‌ன்று கோ‌ரி நாம‌க்க‌ல் மா‌வ‌ட்ட இல‌‌ட்‌சிய குடு‌‌ம்ப‌ம் சா‌ர்‌பி‌ல் ஒரு நா‌ள் அடையாள உ‌ண்ணா‌விரத‌ம் இ‌ன்று மே‌ற்கொ‌‌ள்ள‌ப்ப‌ட்டது.

நாம‌க்க‌ல் மோகனூ‌ர் சாலை‌யி‌ல் உ‌ள்ள அரசு மரு‌த்துவமனை எ‌தி‌‌ரி‌ல் நடைபெ‌ற்ற உ‌ண்ணா‌விரத‌த்து‌க்கு நாம‌க்க‌ல் மா‌வ‌ட்ட இல‌‌ட்‌சிய குடு‌‌ம்ப‌‌த்‌தி‌ன் தலைவ‌ர் ரம‌ணி ராஜகோபா‌ல் தலைமை தா‌ங்‌‌கினா‌ர். மு‌ன்னா‌ள் ஊரா‌ட்‌சி‌ ம‌ன்ற துணை‌த் தலைவ‌ர் ‌பி.கே.‌விஜே‌ந்‌திர‌ன் வரவே‌ற்புரை ஆ‌ற்‌றினா‌ர்.

கா‌ந்‌தி ஆ‌சிரம‌ம் துணை‌த் தலைவ‌ர் எ‌ஸ்.ஆராவமுத‌ன், உ‌ண்ணா‌விர‌த‌த்தை தொட‌ங்‌கி வை‌த்து பே‌சினா‌ர். அ‌ப்போது அவ‌ர் பேசுகை‌யி‌‌ல், ''மது நா‌ட்டு‌க்கு, ‌‌வீ‌ட்டு‌க்கு, ‌உ‌யிரு‌க்கு‌க் கேடு எ‌ன்றா‌ல் அதனை அரசே ம‌க்களு‌க்கு ‌வி‌ற்பது அதை‌விட‌க் கேட‌ல்லவா'' எ‌ன்றா‌ர்.உ‌ண்ணா‌விரத‌த்தை ‌சி‌ற்‌பி. வேலாயுத‌ம், வழ‌க்க‌றிஞ‌ர் த‌ங்கவே‌ல் ஆ‌கியோ‌ர் வா‌ழ்‌த்‌தி பே‌சின‌ர். உ‌ண்ணா‌விரத‌த்தை வழ‌க்க‌றிஞ‌ர் எ‌‌ல்.ரா‌‌ஜி முடி‌த்து வை‌த்தா‌ர்.

மலேசியாவில், பொது இடத்தில், மது அருந்திய முஸ்லிம் பெண்ணிற்கு விதிக்கப்பட்ட கசையடி தண்டனை, புனித ரமலான் மாதம் முடிவடையும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



கோலாலம்பூர் : மலேசியாவில், பொது இடத்தில், மது அருந்திய முஸ்லிம் பெண்ணிற்கு விதிக்கப்பட்ட கசையடி தண்டனை, புனித ரமலான் மாதம் முடிவடையும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மலேசியாவை சேர்ந்த முஸ்லிம் பெண் கார்த்திகா சரி தேவி சுகர்னோ(32). இவர், பகுதி நேர மாடலாக பணியாற்றுகிறார். இவர், கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓட்டல் ஒன்றில் மது அருந்தினார். இதற்காக, இவருக்கு ஆறு கசையடிகள் கொடுக் குமாறு, தண்டனை விதிக்கப்பட்டது. மலேசியா நாட்டு சட்டப்படி, முஸ்லிம்கள் மது அருந்துவது தவறானது. மது அருந்தும் முஸ்லிம்களுக்கு, அந்நாட்டில், அபராதம், மூன்றாண்டுகள் சிறை தண்டனை அல்லது ஆறு கசையடிகள் விதிக்கப்படும்.எனவே,பொது இடத்தில் மது அருந்திய கார்த்திகாவிற்கு, கசையடி வழங்க உத்தரவிடப்பட்டது. தண்டனையை நிறைவேற்ற, நேற்று அவர் பகாங் மாகாணத்தில் உள்ள சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், வழியில், அவரது தண்டனை ஒத்தி வைக்கப்பட்டதாக, அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்கவே, கார்த்திகாவை மீண்டும் வீட்டில் கொண்டு வந்து விட்டனர்.இது ரமலான் மாதம் என்பதால், தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, பகாங் மாகாண நிர்வாக கவுன்சிலர் முகமது சப்ரி அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

கார்த்திகா கூறுகையில்,"என்னை இவ்வாறு அலைச்சல் படுத்தாமல், எனது உண்மையான நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்' என்றார்.

Saturday, August 22, 2009

தமிழக இடைத்தேர்தல்:படு கேவலமாக தோற்ற பா.ஜ.க‌



தமிழகத்தில் நடைபெற்ற 5 சட்டமன்ற இடைத்தேர்தலில் தனியாக போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சியை அத்தொகுதிகளின் மக்கள் முற்றிலும் ஒதுக்கி தள்ளிவிட்டனர்.
மதவாதக்கட்சிக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் தமிழக வாக்காளர்கள்.

முகவரியில்லாமல் இருந்த சங்க்பரிவாரத்தின் அரசியல் கட்சியான பாரதீய ஜனதா கட்சியை தமிழக வாக்காளர்களுக்கு அறிமுகப்படுத்தி அண்ட இடம் கொடுத்தவர்கள் தமிழகத்தின் திராவிடக்கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகள்.பின்னர் இக்கட்சிகள் பா.ஜ.க வை கைக்கழுவியதை அடுத்து கடந்த பாராளுமன்றத்தேர்தலில் நடிகர்கள் சரத்குமார்,கார்த்திக் ஆகியோரின் சில்லறைக்கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டது.ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாமல் களத்திலிருந்து துரத்தப்பட்டது.இந்நிலையில்தான் தமிழகத்தின் 5 சட்டமன்றத்தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் நம்பிக்கையிழக்காமல் போட்டியிட்டது.அ.தி.மு.க இடைத்தேர்தலை புறக்கணித்ததால் சந்தடிசாக்கில் ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்றுவிடலாம் என்ற நப்பாசையில் இருந்த பா.ஜ.க விற்கு கேவலமான தோல்வியை வழங்கி 5 சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

ஆப்பசைத்த குரங்கான பா.ஜ.க எதிர்காலத்தை நினைத்து விழி பிதுங்கி நிற்கிறது.பாசிச பா.ஜ.க விற்கு தமிழக மண்ணில் இடம் இல்லை என்று மீண்டும் ஒரு முறை தீர்ப்பளித்த 5 சட்டமன்ற வாக்காளர்களுக்கும் மனித நேயம் கொண்டவர்கள் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறார்கள்.

5 தொகுதியில் பா.ஜ.க பெற்ற வாக்குகள் விபரம்:

இளையாங்குடியில் 1,487, தொண்டாமுத்தூரில் 9,045, பர்கூரில் 1,482, கம்பத்தில் 946, ஸ்ரீவைகுண்டத்தில் 1,797 வாக்குகளையே பெற்றுள்ளது. இந்தக் கட்சி 5 தொகுதிகளிலும் சேர்த்து 14,757 வாக்குகளைத் தான் பெற்றுள்ளது.

துபாய்: 13‍வது சர்வதேச புனித குர் ஆன் விருது நிகழ்ச்சி ரமலான் ஒன்றில் துவக்கம்

துபாயில் வ‌ருட‌ந்தோறும் ர‌ம‌லானில் ந‌டைபெறும் புனித‌ குர் ஆன் விருது நிக‌ழ்ச்சி இவ்வாண்டு ர‌ம‌லான் முத‌ல் தேதியில் துவ‌ங்குவ‌தாக‌ புனித‌ குர் ஆன் விருது க‌மிட்டி த‌லைவ‌ர் இப்ராஹீம் முஹம்மது பூமில்ஹா அறிவித்துள்ளார்.

துபாயிலிலுள்ள‌ ப‌ல்வேறு மைய‌ங்க‌ளில் ச‌னிக்கிழ‌மை முத‌ல் மார்க்க‌ பிர‌ச்சார‌ நிக‌ழ்ச்சிக‌ள் துவ‌ங்கும். இந்தியா உள்ப‌ட‌ ப‌ல்வேறு உல‌க‌ நாடுக‌ளிலுள்ள‌ முஸ்லிம் மார்க்க‌ அறிஞ‌ர்க‌ளை இந்நிக‌ழ்ச்சியில் கெள‌ர‌விக்க‌ அழைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

குர் ஆன் ம‌ன‌ன‌ப்போட்டியில் போர்சுக‌ல்,ஸ்வீட‌ன் உள்ப‌ட‌ 83 நாடுக‌ளிலிருந்து போட்டியாள‌ர்க‌ள் க‌ல‌ந்துக்கொள்கிறார்க‌ள்.வ‌ருட‌ந்தோறும் ந‌டைபெறும் இந்நிக‌ழ்ச்சியின்போது உல‌கின் சிற‌ந்த‌ ஆளுமைத்த‌ன்மைக்கொண்ட‌ முஸ்லிம் அறிஞ‌ர் ஒருவ‌ருக்கு 10 ல‌ட்ச‌ம் ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ திர்ஹ‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.

இந்நிக‌ழ்ச்சியில் சொற்பொழிவாற்ற‌ உல‌கில் மாற்றும‌த‌த்தைச் சார்ந்த‌வ‌ர்க‌ளின் கேள்விக‌ளுக்கு அறிவுப்பூர்வ‌மான‌ ரீதியில் ப‌தில‌ளிப்ப‌தில் சிறந்து விள‌ங்கும் இந்தியாவைச்சார்ந்த‌ டாக்ட‌ர் ஜாஹிர்நாய‌க் அவ‌ர்க‌ள் வ‌ருகிற‌ வியாழ‌ன்,வெள்ளி தின‌ங்க‌ளில் துபாய் world trande centre ஆடிட்டோரியத்தில் உரை நிக‌ழ்த்துகிறார்.

குவைத்தில் நடைபெற்ற சமூக விழிப்புணர்வு மாநாடு!


குவைத் மண்டல தமுமுக, குவைத் தமிழ் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து மாபெரும் சமூக விழிப்புணர்வு மாநாட்டை குவைத் ரவ்தா பகுதியில் அமைந்துள்ள ஜம்இய்யத் அல்-இஸ்லாஹ் அரங்கில் சிறப்புடன் நடத்தியது.

மாலை சரியாக 5 :30 மணிக்கு சவூதியிலிருந்து வருகை தந்திருந்த பொறியாளர் சர்புதீன் தலைமை தாங்க, குவைத் மண்டல தமுமுக தலைவர் திருச்சி அமானுல்லா அவர்களின் வரவேற்புரையுடன் தொடங்கிய முதல் அமர்வின் தொடக்கமாக,
'ஒற்றுமை' என்ற தலைப்பில் பேசிய குவைத் விடுதலை சிறுத்தைகளின் பிரதிநிதி அன்பரசன் அவர்கள், முஸ்லிம் சமுதாயம் பின்தங்கியதற்கு காரணம் உங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள ஒற்றுமையின்மையே. எனவே ஒவ்வொருவரும் எங்கள் பின்னால் அணிவகுக்க வாருங்கள் என்று அழைப்பதை விடுத்து எங்களை போன்றோர் பார்வையில் சிறப்பாக சமுதாயப்பணியாற்றிக் கொண்டிருக்கும் தமுமுகவில் முஸ்லிம்கள் அணிவகுத்து வெற்றிகளை ஈட்ட முன்வரவேண்டும் என்றார்.அடுத்து, 'ஊடக விழிப்புணர்வு' என்ற தலைப்பில் உரையாற்றிய 'அரவணைப்பு' என்ற அமைப்பின் அமைப்பாளர் இளங்கோவன், தங்களது அமைப்பு செய்து வரும் கல்வி பணிகள்- அநாதை குழந்தைகள் அரவணைப்பு பற்றி எடுத்துக்கூறியதோடு, நாம் ஒவ்வொருவரும் நமது வருமானத்தில் குறைந்தது ஒரு சதவிகிதமாவது அனாதைகள் அரவணைப்பு மற்றும் எளியோர்களின் கல்விக்காக ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றவர், குறைந்தது 25 ஆயிரம் குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்வதுதான் தமது அமைப்பின் எதிர்கால லட்சியம் என்று கூறி முடித்தார்.அடுத்து 'உயர்கல்வி மற்றும்- உயர்பதவிகளில் சிறுபான்மையினர் ஏமாற்றப்படுகிறார்களா?' என்ற தலைப்பில் பேசிய வளநாடன் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் வளநாடன் அவர்கள், மத்திய-மாநில அரசுகளின் உயர்பதவிகளில் முஸ்லிம்களின் விகிதாச்சாரத்தை பட்டியலிட்டு பேசியவர், இந்நிலைக்கு நமது கல்லாமையும் காரணம் என்றதோடு, பாஸ்போர்ட் மோகத்தை ஒழித்து கல்விக்கு முக்கியத்துவம் அளித்து கல்வியாளர்களாக நாம் மாறவேண்டும்.

அப்போதுதான் அரசின் உயர்பதவிகளை நம்மால் எட்டிப்பிடிக்க முடியும் என்றார்.அடுத்து 'கல்வி விழிப்புணர்வு' என்ற தலைப்பில் பேசிய தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சார பேரவையின் பொதுச்செயலாளர் சகோதரர் அப்துல் அலீம் அவர்கள், சமீபத்தில் குவைத்தில் பணிக்கு வந்து முதலாளிகளின் கைவிரிப்பால் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாகி தமுமுகவின் உதவியால் தாயகம் சென்ற ஒன்பது நபர்களை சுட்டிக்காட்டி, இதற்கு காரணம் கல்வி விழிப்புணர்வு இன்மையே என்று கூறியவர், முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு பெற்றுத்தந்த தமுமுக, முஸ்லிம்களின் கல்வி விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் நிறைவு செய்தார்.அடுத்து இஷா தொழுகைக்காக இடைவேளை விடப்பட்டு, தொழுகை முடிந்தவுடன் ஆரம்பமான இரண்டாம் அமர்வுக்கு சவூதியில் இருந்து வருகை தந்த சகோதரர் பொறியாளர் ஷபியுல்லா கான் தலைமை தாங்கினார்.

தொடர்ந்து 'அரசியல் விழிப்புணர்வு' என்ற தலைப்பில் பேசிய தமிழ் ஓசை கவிஞர் மன்ற பிரதிநிதி ராவணன் அவர்கள், தற்போதைய அரசியல் நிலவரங்களை எடுத்துக் கூறியவர், பிறந்த இரண்டே மாதங்களில் கூட்டணி என்ற நடைவண்டியின் துணையின்றி மமக எனும் குழந்தை நடந்து காட்டியது பாராட்டுக்குரியது என்றவர், உங்கள் சமுதாய அமைப்புகள் தேர்தல் நேரத்தில் ஆளுக்கொரு கட்சியின் கதவை தட்டுவதை விடுத்து, நீங்கள் அனைவரும் சேர்ந்து ஒரே அணியாக ஒரு கட்சியின் கதவை தட்டினால் அவர்கள் திறந்தே தீரவேண்டிய நீங்கள் கேட்கும் இடங்களை தந்தே தீரவேண்டிய நிலை உருவாகும் என்றார்.இரண்டாவது அமர்வின் இரண்டாவது பேச்சாளராக மேடையேறிய, இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் அழைப்பாளர் மவ்லவி ஜமாலுத்தீன்ஃபாஸி அவர்கள், 'பொருளாதார விழிப்புணர்வு' என்ற தலைப்பில், பொருளாதாரம் வாழ்க்கைக்கு அவசியமானது தான். அதே நேரத்தில் பொருளாதரம் மீது பேராசை கொள்ளக்கூடாது என்றவர் 'சூரத்துல் தகாஸுர்' அத்தியாத்தை மையமாக கொண்டு தனது உரையை கொண்டு சென்றவர், ஆடம்பர வாழ்க்கைக்காக காலமெல்லாம் அரபுநாடுகளில் இளமையை தொலைத்து வாழ்வதை விட இருப்பதை கொண்டு சிறப்பாக வாழ்வது தான் சிறந்தது என்றும், முஸ்லிம்கள் வட்டி போன்ற கொடும்பாவங்களில் சிக்கித்தவிப்பதை தவிர்க்க ஊர்கள் தோறும் 'பைத்துல் மால்' உருவாக்கப்பட வேண்டும் அதற்கு தமுமுக முழுமுயற்சி செய்யவேண்டும் என்றார்.இறுதியாக சிறப்புரையாற்றிய தமுமுகவின் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் ஹைதர் அலி அவர்கள், மமக தொடங்கப்பட்ட ஒன்றிரண்டு மாதங்களில் அதுவும் கூட்டணி எதுவுமின்றி தேர்தல் களம் கண்டது சரியா என்ற சிந்தனை நம் சமுதாயத்தில் பெரும்பாலோர் உள்ளத்தில் உள்ளது. கூட்டணி அமைந்தால் தலைமை நிர்வாகிகளாகிய நாங்கள் நிற்பதாக இல்லை.

தனித்து நின்று தோல்விதான் கிடைக்கும் என்பதை அறிந்துதான் அந்த தோல்வியை மற்றவர்களை விட தலைமை நிர்வாகிகளாகிய நாங்கள் ஏற்பதுதான் சரி என்பதால் தேர்தலில் போட்டியிட்டோம், மேலும் ஒரு சீட்டை பெற்றுக்கொண்டு தன் சுய முகவரியை இழந்து நிற்கும் முஸ்லிம்லீக் போல் அல்லாமல், தனித்து நின்று வெற்றி பெறாவிட்டாலும் முஸ்லிம்கள் எங்கள் அடையாளம் தொலைத்து எவருக்கும் அடிமை சாசனம் எழுதித்தந்து பதவியை அனுபவிக்க வேண்டியதில்லை என்று காட்டியுள்ளோம். அதனால் தான் வக்பு வாரிய பதவியை தூக்கி எறிந்தோம்.

எங்களை பொருத்தவரை பதவியை கொண்டு சமுதாயத்திற்கு பயன்தரும் பணிகளை செய்ய முடிந்தால் அதை ஏற்றுக் கொள்வோமே தவிர அலங்காரத்திற்காக நாம் பதவிக்கு வர ஒருபோதும் விரும்பமாட்டோம் என்றவர், வக்பு வாரியத்தில் தான் பதவிக்கு வரும் முன் இருந்த நிலையையும், தான் வந்த பின் வாரியத்தில் செய்த சீர்திருத்தங்களையும், மீட்கப்பட்ட வக்பு சொத்துக்கள பற்றியும் எடுத்துரைத்தவர், அரசியலில் மமக ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் இன்றல்லா விட்டாலும் வரும் காலத்தில் நிச்சயம் இன்ஷா அல்லாஹ் வெற்றியைத் தரும் என்று தனது உரையை நிறைவு செய்தார்.



இறுதியாக கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது நேரமின்மையால் சில கேள்விகளுக்கு மட்டுமே ஹைதர்அலி பதிலளித்தார். அதில் பிரதானமாக, பீஜே விவாதத்திற்கு அழைத்தபோது ஒடி ஒளிந்துவிட்டீர்களாமே என்ற கேள்விக்கு, தேர்தலுக்கு முதல் நாள், வேட்பாளரான நான் தேர்தல் ஆயத்தப்பணிகளை மேற்கொள்ளும் நாளை தேர்ந்தெடுத்து அவராக ஒரு ரூம் போட்டுக்கொண்டு, ரூம் போடுவது அவர்களது வழக்கம் போலும். அவர் போட்ட ரூமுக்கு அவர் அழைத்த நேரத்தில் நான் போகவேண்டும் என்றால், இது அறிவுடையோர் ஒப்புக்கொள்வார்களா? எனவே விவாத பூச்சாண்டி காட்டும் பீஜே, பொதுமேடையில் மக்கள் முன்னிலையில் என்மீதான குற்றச்சாட்டை முன்வைத்து விவாதத்திற்கு வரத்தயாரா என்று நாம் ஏற்கனவே சவாலாகவே சொல்லியுள்ளோம்.

அதோடு கருணாநிதிக்கு இப்போது நெருக்கமாக உள்ள பீஜே, கருணாநிதியிடம் சொல்லி என்மீது சி.பி.சி.ஐ.டி. விசாரணை வைக்க சொல்லட்டுமே! நாம் சந்திக்க தாயார் என்று தானே இப்போதும் சொல்கிறோம் என்று ஹைதர் பதில் அளித்தார்.அரங்கின் கீழ்பகுதியில் ஆண்களும், மேல்பகுதியில் பெண்களாலும் நிரம்பிய இந்த மாநாடு சரியாக 10 ;30 மணிக்கு குவைத் மண்டல தமுமுக தலைவர் அமானுல்லா அவர்களின் நன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்! மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு சிறப்பான உணவு ஏற்பாட்டையும்- வாகன ஏற்பாட்டையும் மண்டல தமுமுக செயல்வீரர்கள் சிறப்பாக செய்து பார்வையாளர்களின் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Friday, August 21, 2009

ரமளான் முபாரக் !

ரமழான் சிறப்பு நிகழ்ச்சிகள்

ரமலான் முழுவதும் இரவு 10.30 மணி முதல் 11.00 மணிவரை தமிழன் டி.வி.யில் ''திருக்குர்ஆனின் தேன்துளிகள்'' என்ற தலைப்பிலும், அதிகாலை (ஸஹர்) 4.00மணி முதல் 4.30 மணி வரை ''தமிழன்'' டி.வி.யிலும், 4.30 மணி முதல் 5.00 மணி வரை ''மக்கள்'' தொலைக்காட்சியிலும் பிரபல மார்க்க அறிஞர்களும், ஆலிமாக்களும், குழந்தைகளும் பங்கேற்கும் பல்சுவை மார்க்க நிகழ்ச்சிகளும், சொற்பொழிவுகளும் ஒளிபரப்பாகும் இன்ஷாஅல்லாஹ்.
ரமலான் முழுவதும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் வர்த்தக விளம்பரங்கள், வாழ்த்து அட்டைகள் வரவேற்கப்படுகின்றன. தொய்வின்றி நிகழ்ச்சிகள் தொடர பொருளாதார உதவிகளையும் தாராளமாக வழங்கிட கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு..
பிளாக் & ஒயிட் கம்யூனிகேஷன்ஸ்
7, வடமரைக்காயர் தெரு,
மண்ணடி, சென்னை - 600 001.
போன் : 044 25241200

பண்டாரவாடையில் தமுமுகவின் 71வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு


தஞ்சை (வ) மாவட்டம் பண்டார வாடையில் தமுமுவின் 71வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. ஆம்புலன்ஸை அர்ப்பணித்து தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் சிறப்புரை யாற்றினார். மமக துணைப் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி மற்றும் தமுமுக மாநிலச் செயலாளர் ஹாஜாகனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் முஹம்மது செல்லப்பா தலைமை தாங்கினார். பாபநாசம் ஒன்றியச் செயலாளர் முஹம்மது ச­ம் வரவேற்புரையாற்றினார்.


பாபநாசம் சட்டமன்ற பேரவை உறுப்பினர் இரா. துரைக்கண்ணு, மாவட்டச் செயலாளர் ஹமீது சுல்தான், முன்னாள் மாவட்டத் தலைவர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆம்புலன்ஸ் சாவியை மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முஹம்மது யாசிர் பெற்றுக் கொண்டார்.
இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு பொதுக் கூட்டத்தில் மழை பெய்தாலும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொது மக்கள் கலைந்து செல்லாமல் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்

Thursday, August 20, 2009

ரமழானின் பயனை பெறுவது எப்படி?" -மெளலவி முபாரக் மதனி(VIDEO)

மெளலவி முபாரக் மதனி அவர்கள்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்-கோபர் இஸ்லாமிய மையமும் தமிழ் தஃவா கமிட்டியம் இணைந்து கடந்த 19-09-2007 அன்று இரவு அல்கோபர் நகரின் மையப்பகுதியில் அமைந்தள்ள அல்கோபர் இஸ்லாமிய மையத்தால் நடத்தப்படும் இஃப்தார் குடிலில் (நோன்பு திறக்கும் குடில்) சிறப்பான முறையில் ஒரு இஸ்லாமிய குடும்ப நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் பிரபல மார்க்க அறிஞர் முபாரக் மதனி அவர்களும், இந்தியாவை சேர்ந்த பிரபல அழைப்பாளர் மெளலவி அலி அக்பர் உமரி அவர்களும், இலங்கையை சோந்த பிரபல அழைப்பாளர் மெளலவி மன்சூர் மதனி அவர்களும் தங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த தலைப்புகளின் கீழ் சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சிக்கு தமிழ் தஃவா கமிட்டியின் நிர்வாகி மறியாதைக்குறிய மக்கீன் நலீமி அவர்கள் தலைமை தாங்கி நடத்தி தந்தார்கள்.

நிகழச்சிக்குறிய ஏற்பாடகளை அல்கோபர் இஸ்லாமிய மையத்துடன் இணைந்து அல்கோபர் தமிழ் தஃவா கடமட்டியிர் மிகச்சிறப்பாக செய்திருந்தனர். அதன் தன்னார்வ தொண்டர்கள் அயராது உழைத்து இந்நிகழச்சியை சிறப்பாக நடத்தி தந்தனர். இந்நிகழ்ச்சிக்கு ஆன்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் குடும்பத்துடன் வந்திருந்து பயன் பெற்றனர்.

நிகழச்சியில் இலங்கையை சேர்ந்த மார்க்க அறிஞர் முபாரக் மதனி அவர்கள் "ரமழானின் பயனை பெறுவது எப்படி?" என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் வீடியோ தமிழ் முஸ்லிம் மீடியாவில் வெளியிடப்பட்டுள்ளது தமிழ் மக்கள் அணைவரும் இந்த வீடியோவை கண்டு இந்த ரமழானை நல்லபடியாக பணன்படுத்தி பயன் பெற வேண்டும். வீடீயோவை காண கீழே சொடுக்கவும்..



"ரமழானின் பயனை பெறுவது எப்படி?"
.
நிகழ்ச்சியின் அணைத்து வீடியோக்களையும் இன்னும் பல அற்புத தலைப்புக்களில் இஸ்லாமிய பயான் வீடியோக்களை காண :.
.
இஸ்லாமிய தஃவா.காம்

காட்டுமன்னார்குடியில் நடைபெற்ற பெண்களுக்கான ஒரு நாள் இஜ்திமா!



கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி-தாலுக்கா நடத்திய இஸ்லாமிய பெண்கள் ஒருநாள் இஜ்திமா 16-08-2009 ஞாயிறு அன்று T S M திருமண மண்டபத்தில் காலை 10:00 முதல் மாலை 5:௦௦00 மணி வரை நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஆலிமா சையத் அலி பாத்திமா அவர்கள் மாநில செயலாளர் அப்துல் ரஜாக் அவர்கள் ராஜ் முஹம்மத் M.I.S.C அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் சிறப்புரை ஆற்றின்னார்கள்.
இதில் 350 - க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்,

கவிக்கு(கோ) அரசானாலும் வல்ல ரஹ்மானின் அடிமைதான்.


தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு சொந்தமான கொவ்ஸ் மைதீன் பேட்டை வக்புக்கு சொந்தமான இடத்தில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியம் சார்பாக ஜெயலலிதா ஆட்சி காலத்தில் வீடுகள் கட்டப்பட்டன. கலைஞர் ஆட்சியில் அரசு சார்பில் அவ்வீடுகள் ஏழைகளுக்கு தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.உடனே அன்று வக்பு வாரிய தலைவராக இருந்த ஹைதர் அலி வக்ப் வாரியத்திற்கு சொந்தமான வீடுகளை தமிழக அரசு ஒதுக்க கூடாது.வக்ப் வாரியத்திடமே ஒப்படைக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.பல முயற்சிகளுக்கு பின்னர் அந்த இடங்கள் வக்பு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.அதற்குள் தேர்தல் வந்து விடவே ஹைதர் அலி வக்ப் வாரிய பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

இந்நிலையில் புதிதாக பதிவியேற்ற கலைஞரின் நண்பர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் வீடுகளை வைத்து சமூகத்தின் மதிப்பை பெற்று விட வேண்டும் என்று களத்தில் இறங்கினார்.பாவம் இளிச்சவாய் பொதுமக்கள்.காசிமேடு பகுதியில் நூறு வீடுகளும் துரைப்பாக்கம் பகுதியில் 176 வீடுகள் மட்டுமே இருக்கும் நிலையில் அதிலும் 10% இமாம்களுக்கும் 10% மோதினர்களுக்கும்,10% விதவைகளுக்கும்,10% கை விடப்பட்ட பெண்களுக்கும்,10% வேலை இல்லாத ஆலிம்களுக்கும் மீதி 50% மற்ற ஏழை மக்களுக்கும் என ஒதுக்கப்பட உள்ள நிலையில் 5 நாட்கள் வீடுகளுக்கு விண்ணப்பம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.வாடகை 250 என்றும் அட்வான்ஸ் 1000 என்றும் வீடு (வெறும்) 250 Sqft என்றும் கூறப்பட்டது. இதை கேட்டதும் வக்பு வாரியத்தின் முன் 17.8.09 திங்கள் கிழமை முதல் மக்கள் சாரை சாரியாக குவிந்தனர்.விண்ணப்பங்கள் வாங்க வந்த கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறினர் வாரிய அதிகாரிகள்.போலீஸ் வந்து கூட்டத்தை சமாளிக்க வேண்டியதாயிற்று.

முதல் நாள் இரவிலேயே ரோட்டிலேயே உட்கார்ந்து அங்கேயே படுத்து தூங்கி காலையில் விண்ணப்பம் வாங்க வந்த முஸ்லிம்களை பார்த்து அந்த பகுதியில் வழக்கமாக தெருவில் வசிக்கும் மக்களே ஆச்சரியப்பட்டனர்.கைக்குழந்தைகளோடு இயற்க்கை உபாதைகளை நிறைவேற்றக்கூட வசதி இல்லாத நிலையில் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் அதிகாலை முதலே வரிசையில் நின்று கொண்டிருந்தது பார்க்கவே கொடுமையாக இருந்தது.சமுதாயத்தின் மானத்தை சந்தி சிரிக்க வைக்க வேண்டும் என்ற வக்பு வாரியத்தின் எண்ணம் நல்லபடியாக நிறைவேறியது.வெறும் வீடுகளுக்கு இது வரை 15,000விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது.ஏழை மக்களின் அடிப்படை தேவைகளை வைத்து அரசியல் செய்யும் வாரியத்தின் கூத்தை பார்த்து எல்லோரும் காரி துப்பினர்.கூட்டத்தின் வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் திணறிய போலீசார் ஒரு கட்டத்தில் தடியடி நடத்தும் சூழ்நிலை உருவானது.கடைசியாக போலீசார் வக்பு வாரிய உயர் அதிகாரியிடம் அசம்பாவிதம் ஏதும் நடந்தால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்ய நேரிடும் என்று கூறியதால் வியாழன் கிழமையோடு விண்ணப்பம் வழங்குவதை நிறுத்தி கொண்டனர்.


மொத்த ஒதுக்கீட்டில் அரசியல்வாதிகளுக்கும் வக்பு வாரிய உயர் அதிகாரிகளுக்கும் வாரிய உறுப்பினர்களுக்கும்(வாங்காதவர்களும் உண்டு)அவர்களுக்கு தேவை பட்டவர்களுக்கும் போக மீதி உள்ள இடங்களுக்குத்தான் இவ்வளவு போட்டி.நவீன யுகத்தில் இன்டர்நெட் போன்றவற்றில் டவுன்லோட் செய்து கொள்ளும் வசதிகள் எல்லாம் வந்து விட்ட பிறகு மக்களை வரிசையில் நிற்க வைத்து கஷ்டப்படுத்துவது பக்கா அரசியல். சென்னையில் வெள்ள நிவாரணம் என்ற பெயரில் திரண்ட கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளு முள்ளு போன்று ஏற்பட்டு ஏதாவது உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் என்னவாகி இருக்கும்.அப்போது இரங்கல் கவிதையை பாடுவதை தவிர வாரிய தலைவரால் என்ன செய்ய முடியும்.மக்களுக்கு நன்மை செய்கிறேன் என்று கிளம்பி தான் தோன்றி தனமாக வேலை செய்வதை விட்டு உருப்படியான வேலைகளை வக்பு வாரியம் பார்க்க வேண்டும்.

நன்றி:தமிழ் முஸ்லிம் தளம்.

கவி கோ(அரசன்) ஆனாலும், அந்த ரஹ்மானின்(அல்லாஹ்) அடிமைதான் என்பதை கவிஞரே மறவாதிர்.

Wednesday, August 19, 2009

TNTJ நடத்திய தமிழக முதல்வர் வீடு முற்றுகை

(17-8-2009) காலை சரியாக 11 மணி அளவில் முதல்வர் வீடு அருகே உள்ள தவ்சன்ட் லைட் என்ற பகுதியில் பல்லாயிரக்கணக்கானோர் தமிழக முதல்வர் வீட்டை முற்றுகையிட துவங்கினர்.

காவல்துறை எதிர் பார்த்ததை விட கூட்டம் அதிகமானதால் முற்றுகையிடும் சகோதர சகோதரிகளை கைது செய்ய துவங்கிய தமிழக காவல்துறை வாகன பற்றாக்குறையினால் தினறியது.

அல்ஹம்துலில்லாஹ்!.

இறை இல்லத்தை மீட்க கொட்டும் மழையையும் பொருட்படுத்தால் பெண்கள் கைகுழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.சென்னை அண்ணா சாலையே இன்று ஸ்தம்பித்து போனது வாகனங்கள் வேரு வழியாக திருப்பி விடப்பட்டது!. அல்ஹம்துலில்லாஹ்…






















ரமலான் பற்றிய அனைத்து சத்தேகங்களும் தெளிவுகளும்

அட்டவணை

Click here for PDF

00. முன்னுரை

01. ரமளான் மாதத்தின் நோன்பை நோற்பது கடமை

02. ரமளான் மாதத்தின் சிறப்புகள்

03. ரமளான் நோன்பின் சிறப்புகள்

04. பிறை கண்ட பின்பே நோன்பும் பெருநாளும்

05. சந்தேகமான நாட்களில் நோன்பு நோற்கக்கூடாது

06. ஸஹர் உணவு உண்பதின் சிறப்பு

07. ஸஹர் உணவை தாமதப்படுத்துதல்

08. குளிப்பு கடமையான நிலையில் நோன்பு

09. நோன்பை விட அனுமதிக்கப்பட்டவர்கள்

10. நோன்பு நேரத்தில் தவறிலிருந்து விலகி இருத்தல்

11. நோன்பாளி மறதியாக சாப்பிட்டால் குடித்தால்

12. நோன்பாளி குளிப்பதில் தவறில்லை

13. நோன்பாளி பல்துலக்குதலில் குற்றமில்லை

14. நோன்பாளியின் உளு

15. நோன்பின் நிய்யத்தை பஜ்ருக்கு முன் வைப்பது அவசியம்

16. பெருந்தொடக்குள்ள பெண்கள்

17. விரைவாக நோன்பு திறப்பது சுன்னத்தாகும்

18. பேரீத்தம் பழத்தால் நோன்பு திறப்பது சிறந்தது

19. நோன்பு திறந்த பின் ஓதும் துஆ

20. நோன்பு திறக்கும் போது கேட்கப்படும் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்

21. நோன்பு திறக்க வைப்பதின் சிறப்புகள்

22. லைலத்துல் கத்ரின் சிறப்புகள்

23. இஃதிகாஃப்

24. குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்

25. ஸதகத்துல் ஃபித்ர்

26. பெருநாள் தொழுகை

27. நோன்பின் கடமைகள்(பர்ளுகள்)

28. நோன்பை முறிக்கும் செயல்கள்

29. அனுமதிகள்

30. ஒழுக்கங்கள்

31. ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பின் சிறப்புகள்

Tuesday, August 18, 2009

சகோதரிக்கு உதவிடுவீர்!!!



அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ரசியா பேகம் வயது 37, இந்தச் சகோதரிக்குக் கழுத்தில் கேன்ஸர் ஏற்பட்டுள்ளது. இது நான்காவது கட்டத்தை தாண்டி மிகவும் ஆபத்தான நிலையை அடைந்துள்ளார்.

சிகிச்சைக்காகச் சென்னையில் உள்ள குளோபல் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டுள்ளார். இவரது சிகிச்சைக்கான செலவு 1,50,000 ரூபாய் ஆகும் என டாக்டர்கள் கூறிவிட்டனர்.

மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள இவருக்கு 15, 13, 10 வயதுடைய 3 ஆண்மகன்கள் உள்ளனர். இவருடைய கணவரோ நாள் சம்பளத்திற்கு விவசாய வேலை பார்த்து வருகின்றார். அண்டை வாசிககளின் உதவியால் இந்தச் சகோதரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு கேன்சர் என்பதை அறிந்த பிறகு அவ்வளவு பெரிய தொகைக்கு உதவி செய்ய ஆள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்தச் சகோதரியின் மருத்துவச் செலவிற்கு உதவி கேட்டு உங்களை நாடியுள்ளார்கள்.

இன்ஷாஅல்லாஹ், அல்லாஹ் இந்தச் சகோதரிக்கு உடல் சுகத்தையும் உதவி செய்யும் உங்கள் அனைவருக்கும் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியைத் தருவானாக.
எனதருமைச் சகோதரர்களே!

நம்மால் பெரிய தொகை அனுப்பிட முடியாவிட்டாலும், சிறு தொகை ஒவ்வொருவரும் அனுப்புவதன் மூலம் அது பெரிய தொகையாகி நமது சகோதரிக்கு மேல் மருத்துவ சிகிச்சைக்காக உதவும்.

தயவு செய்து இதைப் படித்துவிட்டு மூடி விடாமல், ஒரு தாளில் இங்குத் தரப்பட்ட பேங்க் அக்கவுண்ட் நம்பரையும் பெயரையும் குறித்து உங்கள் பாக்கெட்டில் வைத்து கொள்ளுங்கள். உங்களால் முடிந்த தொகையை அனுப்பி விடுங்கள். இவரை யாரோ ஒருத்தர் என்று நினைத்து விட்டு விடாமல், உங்களின் உறவுக்காரர் என்று நினைத்து உதவுங்கள். நீங்கள் ஏதேனும் ஓர் அமைப்பில் அல்லது இயக்கத்தில் இருப்பவராக இருந்தால் அதன் மூலமும் உதவலாம். பணம் அனுப்ப இயலாதவர்கள் இவருக்காக துஆச்செய்யுங்கள்.
அல்லாஹ், எனக்கும் உங்களுக்கும் உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் நோய்நொடியற்ற நீடித்த ஆயுளை தருவானாக ஆமீன்.
கூத்தாநல்லூர்: நூர்.


தொடர்புக்கு:
உள்ளுர்
U. அக்பர் அலி
Cell# 00919677690562,
Acc No#: 18223
Indian Overseas Bank,
Sirkali Branch.Nagai – DT.
UAE (அரபு எமிரேட்ஸ்)
A. Mohamed MansurMob: 0097150 8520115
E-Mail-
mansurbca@rediffmail.com
mansurbca31@yahoo.com

சவுதி அரேபியா
K. சர்தார் அலி ,
Mob: 00966554696301

இஸ்லாமிய வழிகாட்டி மையம் (IGC), குவைத் நடத்தும் ரமலான் சிறப்பு நிகழ்ச்சிகள்