Thursday, April 30, 2009

முத்துப்பேட்டை அருகே பரபரப்பு: தர்கா- பள்ளிவாசலை சூறையாடிய வாலிபர்

முத்துப்பேட்டை, ஏப்.18-

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே நாச்சிகுளத்தில் ஞானாசாகிப் ஒலியுல்லா தர்கா உள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் தொழுகை நடைபெற்றது. ல அப்போது அப்பகுதியை சேர்ந்த முகமது பாரூக் (25) என்ற வாலிபர் வந்தார். தர்காவில் உள்ள சமாதியை கடப்பாரையால் அடித்து சேதப்படுத்தினார்.

பின்னர் அருகேயுள்ள அம்மா பள்ளிவாசலுக்கு சென்று காம்பவுண்டு சுவர் கீரில் கேட் ஆகியவற்றையும் சேதப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து ஜமாத் தலைவர் பசூலூருதீன், முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று தர்கா பள்ளிவாசலை சேதப்படுத்திய முகமது பாரூக்கை கைது செய்தனர்.

விசாரணையில் முகமது பாரூக், மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தர்கா- பள்ளிவாசல் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிர‌ஸ் சென்னை ம‌ற்றும் திருச்சிக்கு நேர‌டி விமான‌ சேவை

ஏர் இந்தியா எக்ஸ்பிர‌ஸ் ஏப்ர‌ல் 30 முத‌ல் அபுதாபியிலிருந்து சென்னை ம‌ற்றும் திருச்சிக்கு நேர‌டி விமான‌ சேவை

அபுதாபி : ஏர் இந்தியா எக்ஸ்பிர‌ஸ் விமான‌ம் ஏப்ர‌ல் 30 முத‌ல் அபுதாபியிலிருந்து சென்னை ம‌ற்றும் திருச்சிக்கு நேர‌டி விமான‌ சேவையினை அறிமுக‌ப்ப‌டுத்துகிற‌து.
வார‌ந்தோறும் வியாழ‌ன் ம‌ற்றும் ச‌னிக்கிழ‌மை ஆகிய‌ இரு தின‌ங்க‌ளில் இவ்விமான‌சேவை இய‌க்க‌ப்ப‌டும்.

இவ்விமான‌ம் அபுதாபியிலிருந்து மாலை 6.30 ம‌ணிக்கும், சென்னையிலிருந்து ந‌ண்ப‌க‌ல் 12.50 க்கும் புற‌ப்ப‌டும்.

அறிமுக‌ ச‌லுகையாக‌ திர்ஹ‌ம் 149 திருச்சிக்கும், திர்ஹ‌ம் 99 சென்னைக்கும் வ‌ரிக‌ள் இன்றி அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

மேற்க‌ண்ட‌ த‌க‌வ‌லை அபுதாபி ம‌ற்றும் அல் அய்ன் ப‌குதிக்கான ஏர் இந்தியா மேலாள‌ர் ஆர்சிட் ராய்கான் தெரிவித்துள்ளார். அபுதாபி அர‌சின் ஆத‌ர‌வுட‌ன் ப‌டிப்ப‌டியாக‌ இவ்விமான‌சேவைக‌ள் விரிவு ப‌டுத்த‌ப்ப‌டும்.

முஃமின்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துங்கள்!

முஃமின்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துங்கள்!
நாம் இன்று மிகவும் வலிமையிழந்தவர்களாக இருப்பதற்கும், அவமானப்படுத்தப் படுவதற்கும், நம் சகோதர, சகோதரிகள் சித்திரவதைக்குள்ளாக்கப் படுவதற்கும், நம் கண்கள் முன்னே படுகொலை செய்யப்பட்டு சிதைக்கப் படுவதற்கும், நம்முடைய முஸ்லிம் நாடுகள் கொள்ளையடிக்கப்பட்டு, இறை நிராகரிப்பாளர்களின் (முஷ்ரிக்குகளின்) விருப்பத்திற்கேற்ப கைப்பற்றப்படுவதற்கும், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருந்தும் ஒன்றும் கூற முடியாமல் சக்தியற்றவர்களாக இருப்பதற்கும் காரணம் என்ன வெனில்:-

நாம் அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழி காட்டுதல்களை கைவிட்டு விட்டு முஷ்ரிக்குகளை அவர்களின் ஒவ்வொரு செயல்களிலும் பின்பற்ற முயற்சிப்பதுதான். நம்முடைய வலிமையை நாமே முறித்து நிறம், மொழி, குலம், கோத்திரங்கள், பிரிவுகள், நாடுகள் ஆகியவைகளின் அடிப்படைகளில் பிரிந்து சின்னா பின்னமாகி இருக்கிறோம். மேலும் ஒரு உம்மத்தாக இருந்து ஒரே இறைவனை வணங்க வேண்டிய முஸ்லிம் சமுதாயம் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து ஆட்சி அதிகாரத்திற்காகவும், செல்வத்திற்காகவும் மற்றும் பதவி சுகத்திற்காகவும் நமக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றோம். நாம் நிரந்தரம் இல்லாத இந்த உலகத்தின் கவர்ச்சியிலும், ஆடம்பரத்திலும் மயங்கி இதை தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஆதாரப் பூர்வமான ஹதீஸில் வருகிறது: -

“முஃமின்கள் இந்த உலக வாழ்வை நேசித்து மரணத்தை வெறுக்கும் போது, அல்லாஹ் எதிரிகளுக்கு முஸ்லிம்களின் மீதுள்ள பயத்தை போக்கிவிட்டு, முஸ்லிம்களின் உள்ளத்தில் எதிரிகளைப் பற்றிய பயத்தைப் போட்டுவிடுவான்”

நிச்சயமாக இது தான் நடந்திருக்கிறது.

ஆனால்,

முஸ்லிம்கள் ஒன்றுபடும் நாளில்,

நிரந்தரமற்ற இந்த உலகத்தின் ஆடம்பர வாழ்க்கையை விட மறுமையை அதிகமாக நேசிக்கும் போது,

தற்போதைய அவமானத்தை விட மரணத்தை விரும்பும் போது,

மனம் திருந்தி அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு அவைகளை பின்பற்றி நடக்க ஆரம்பிக்கும் போது,

ஒரே இறைவணை மட்டும் வணங்கக் கூடிய உண்மையான முஸ்லிம்களாக மாறும் போது,

அல்லாஹ்வின் கட்டளைகளை, சட்டங்களை இந்த உலகத்தில் மேலோங்கச் செய்ய முயற்சிக்கும் போது …

அப்போது அல்லாஹ் தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றி முஸ்லிம்கள் இழந்த தங்களின் கவுரவத்தை மீட்க உதவி செய்வான்.

ஆகையால், இன்று ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என்னவெனில்,

- மனம் திருந்தி அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு கட்டளைக்கும் கட்டுப்பட்டு நடப்பது.

- தன்னால் முடிந்த அனைத்து செயல்களையும் செய்து பிரிந்து பல்வேறு கூறுகளாக போன இந்த சமுதாயத்தை ஒன்று சேர்க்க முயற்சிப்பது

இது தான் இந்த உலகில் அல்லாஹ்வின் சட்ட திட்டங்கள் மேலோங்கச் செய்யப்பட நாம் அளிக்கும் நம்முடைய பங்களிப்பாகும்.

முஃமின்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துங்கள்!

அல்லாஹ் கூறுகிறான்: -

“நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்” (அல்-குர்ஆன் 49:10)

உங்களுக்குள் கேலி, கிண்டல் செய்து கொள்ளாதீர்கள்!

“முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்” (அல்-குர்ஆன் 49:11)

முஃமின்களே!பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராயாதீர்கள்!

“முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்” (அல்-குர்ஆன் 49:12)

முஃமின்களே! தீயவனின் செய்தியை அப்படியே நம்பிவிடாதீர்கள்!

“முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்” (அல்-குர்ஆன் 49:6)

முஸ்லிம் சகோதரனுக்கு கெடுதல் செய்வர் சாபத்திற்குரியவர் ஆவார்!

‘ஒரு முஸ்லிம் சகோதரனுக்கு கெடுதல் செய்பவனும், அவருக்கு எதிராக சதி செய்பவனும் சாபத்திற்குரியவர்கள்’ அறிவிப்பவர் : அபூபக்கர் (ரலி), ஆதாரம் : திர்மிதி.

சகோதர முஸ்லிமை கேவலமாகக் கருதுவது கெட்ட செயலாகும்!

ஒரு முஸ்லிம் (மற்ற முஸ்லிமுக்கு) சகோதரராகும். அந்த சகோதரரை மோசடி, பொய் மூலம் ஏமாற்றாதீர்கள். அவருடைய மானத்தைக் கெடுத்து பொருளை அபகரித்து கொலை செய்வது தடுக்கப்பட்டதாகும். அவரை கேவலமாகவும் மதிப்பது கெட்ட செயலாகும். ஆதாரம் : திர்மிதி.

உன்னைத் திட்டினால் நீ அவனைத் திட்டாதே!

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: - ‘எவரேனும் சரி உன்னிடமுள்ள குறைகளைச் சொல்லி உன்னைத் திட்டினால் நீ அவனுடைய குறைகளைச் சொல்லி திட்டாதே! காரணம் அந்த பாவம் அவனையே சாரும்’ ஆதாரம் : அபூதாவுத்.

உண்மையான வீரன் யார்?

“மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.ஆதாரம் : புகாரி.

முஸ்லிம்கள் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்கக் கூடாது!

முஃமின்கள் மூன்று இரவு மூன்று பகல்களுக்கு மேல் பகைமைக் கொண்டு பேசாதிருப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடைசெய்திருப்பதாக வரும் பல நபிமொழிகள் புகாரி போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் காணமுடிகிறது.

ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள்!

“அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி.

‘தனது முஸ்லிம் சகோதரனுடன் மூன்று இரவு (பகலுக்கு மேல்) வெறுத்திருப்பது கூடாத செயலாகும். எனவே மூன்று இரவு (பகலுக்கு மேல்) வெறுத்திருக்கும் நிலையில் மரணிப்பவன் நரகம் நுழைவான்’ அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : அஹ்மது, அபூதாவுத்.

பினக்கிற்குப் பிறகு முதலில் பேசுபவர் தாம் சிறந்தவராவார்: -

ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) ஸலாமை முதலில் தொடங்குகிறவர்தாம் இவர்கள் இருவரில் சிறந்தவராவார் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி), ஆதாரம் : புகாரி.

பகைவரும் உற்ற நன்பர் போல் ஆகவேண்டுமா?

“நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 41:34-35)

Wednesday, April 29, 2009

மனிதநேய மக்கள் கட்சிக்கு “ரெயில் என்ஜின்” சின்னம்:


ஏப்: 28. தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ளன. அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரத்தால் தேர்தல் களம் களை கட்டியுள்ளது. மனித நேய மக்கள் கட்சி, டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், இந்திய தவ்கீத் ஜமாத், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார். மனித நேய மக்கள் கட்சி மயிலாடுதுறை, மத்திய சென்னை, ராமநாதபுரம், பொள்ளாட்சி ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மயிலாடுதுறையில் த.மு.மு.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ், மத்திய சென்னையில் பொதுச் செயலாளர் ஹைதர்அலி, ராமநாதபுரத்தில் மாவட்டச் செயலாளர் சலிமுல்லாஹ்கான், பொள்ளாட்சியில் உமர் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

டாக்டர் கிருஷ்ணசாமியும், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் களமிறங்கியுள்ள 4 வேட்பாளர்களும் தங்களுக்கு ரெயில் என்ஜின் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டிருந்தனர். இதன்படி இவர்கள் அனைவருக்கும் ரெயில் என்ஜின் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.




மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் ஹைதர் அலி நேற்று ரெயில் என்ஜின் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

திருவல்லிக்கேணி பகுதியில் எல்லிஸ்.ரோடு, பைகிராஸ்ரோடு, பெல்ஸ் ரோடு, திருவல்லிக் கேணி நெடஞ்சாலை, அபுல்ஹசன் ரோடு, பார்டர் தோட்டம், பெரிய தெரு, பார்த்தசாரதி ரோடு மற்றும் சேப்பாக்க பகுதிகளிலும் ரெயில் என்ஜின் சின்னத்தை காட்டி ஹைதர்அலி ஓட்டு கேட்டார்.

திறந்த ஜீப்பில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்ட அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மனித நேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் நாசர் உமரி, த.மு.மு.க. பொருளாளர் ரகமதுல்லா, மனிதநேய மக்கள் கட்சியின் தென் சென்னை மாவட்ட செயலாளர் அப்துல்சலாம், த.மு.மு.க. மாவட்ட தலைவர் சீனிமுகமது மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நேற்று காலையில் மட்டும் திருவல்லிக்கேணி பகுதியில் 20 கிறிஸ்தவ பாதிரியார்களை சந்தித்து ஹைதர் அலி ஆதரவு திரட்டியது குறிப்பிடத்தக்கது.

Monday, April 27, 2009

இவர்களில் யார் சிறந்தவர்?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

பிஸ்மில்லாஹ்
இவர்களில் யார் சிறந்தவர்?





மயிலாடுதுறை
முனைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள், பிறப்பால் முஸ்லிம், தூய தவ்ஹீத் கொள்கைக்கு சொந்தகாரர், மாணவ பருவத்தில் இருந்து சமுதாயப்பணி ஆற்றக்கூடியவர், சிம் செய்திமடல், உணர்வு, ஒற்றுமை, மக்கள் உரிமை என மார்க்கம் மற்றும் சமுதாயப் பத்திரிக்கையின் ஆசிரியர், பாகல்பூர் ஒரு பார்வை, பாபரி மஸ்ஜித் ராமா ஜென்மபூமியா போன்ற பல சிறப்புமிக்க வரலாறுகளை தொகுத்த நல்லசிரியர்,

தனது சீரிய தலைமையால் சமுதாயத்திற்கு இடஓதுக்கீடு, உலமாவாரியம் என வரலாற்று பதிவுகளுக்கு சொந்தகாரரான இவர் பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டால் இறையருளால் சமுதாயத்திற்கு நன்மையே தவிர ஒருபோதும் தீமை கிடையாது.

தொகுதியின் பக்கமே தலைகாட்டாத மணிசங்கர் அய்யரைவிட, அம்மா வாய் திறக்கச் சொன்னால்தான் தன் சமுதாய மக்களுக்காககூட வாய் திறக்க இருக்கும் ஓ.எஸ். மணியனை விட பல்லாயிரம் மடங்கு நம் சகோதரர் ஜவாஹிருல்லாஹ் சிறந்தவர்.

மார்க்க விஷயத்தில்கூட கேள்வி கேட்க உரிமை பெற்றுள்ள நாம், நம் மக்கள், நம் சமுதாயம், நம் தொகுதி சீர்பட யாரைத் தோ்ந்ததெடுத்தால் நல்லது என்பதை நாம் முடிவு செய்யும் நேரம் வந்து விட்டது. அவர் சொன்னார், இவர் சொன்னார் என்ற மாயையில் விழாமல், மயிலாடுதுறையில் நம் பேராசிரியருக்கு வாக்களிப்போம் இன்ஷா அல்லாஹ்.


மத்திய சென்னை
அரசியல் என்றால் என்னவென்று தெரியாமல் தன் தாத்தா, தன் தந்தை செல்வாக்கில் உள்ளே நுழைந்து மத்திய அமைச்சராக அதிகாரம் பெற்று அனைவரையும் ஆட்டிப்படைத்த தயாநிதி மாறனைவிட, முஸ்லிமாக இருந்தாலும் அம்மாவின் ஆணைக்கு அடிபணியும் முஹம்மது அலி ஜின்னாவை விட நீண்ட நெடுங்காலமாக சமுதாயப்பணி ஆற்றி பல்வேறு இன்னல்களை சந்தித்து, தனது சீரிய நிர்வாகத்திறனால் 200 கோடிக்கு மேலான வக்பு சொத்துக்களை மீட்டு, சமுதாயத்தை கேவலப்படுத்திய திமுகவை விட்டு வெளியேறிய பொழுது தனது வக்பு வாரிய தலைவர் பதவியை துறந்த நல்ல மனிதர்.

தமுமுகவை மட்டும் அல்ல, மனித நேய மக்கள் கட்சியையும் நல்ல முறையில் வழி நடத்தும் ஹைதர் அலி அவர்களுக்கு நம் வாக்குக்களை சிந்தாமல் சிதறாமல் அளித்து மக்களவையில் நம் சமுதாய மேம்பாட்டிற்கான வழியினை ஏற்படுத்துவோம்.

இராமநாதபுரம்
வயதில் சின்னவராக இருந்தாலும், தனக்கு கொடுத்த பொறுப்பை மிக சிறப்புடன் கடந்த 15 வருடங்களாக செய்து வரும் சகோதரர் சலீமுல்லாஹ்கான், , இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் வாழ்க்கையில் கல்விக்கான வழியை ஏற்படுத்தி கொடுத்தவர். உயிர்காக்கும் இரத்ததானம், மருத்துவ உதவி 7க்கும் மேற்பட்ட ஆம்புலன்களை தன் மாவட்டத்திற்கும், கடலூர், விழப்புரம் மாவட்டங்களுக்கும் தன் மாவட்டத்திலுள்ள தனவந்தர்களிடம் கேட்டு வாங்கி கொடுத்த சமூக சேவகர்.

கொத்தங்குளம், தந்தங்குடி, நொச்சி வயல் என மூன்று கிராமங்களை இஸ்லாத்தில் எடுத்து அவர்களுக்கு பள்ளிவாசல் கட்டி கொடுத்து, அவர்களது வாழ்வாதங்கரங்களுக்கு முறையான ஏற்பாட்டினை செய்த ஒரு நல்ல சகோதரர். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உழைக்கும் இவருக்கு வாக்களித்தால் நம் சமுதாயம் சீர்படுமே அன்றி ஒருபோதும் சீர்கெடாது.

ஆடம்பர கலச்சாரத்திற்கும், ஆபாசத்திற்கும் சொந்தகாரரான நடிகர் ரித்தீஸைவிட, அடாவடி அரசியல் நடத்தி, செயலலிதாவின் ஆணைக்கு காத்திருக்கும் சத்தியமூர்த்தியைவிட, பிறப்பால் முஸ்லிமாக இருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் இஸ்லாத்தை பின்பற்றாத சிங்கை ஜின்னாவைவிட ஆயிரம் ஆயிரம் மடங்கு சலீமுல்லாஹ்கான் தகுதியான வேட்பாளர். எனவே நமது வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அவருக்கு அளிப்போம்.

Friday, April 24, 2009

மனித உருவில் புதிரான விலங்கு - கத்தர் நாட்டில் பரபரப்பு!


வியாழன், 23 ஏப்ரல் 2009 15:02
அருமை வளைகுடா நாட்டில் வளமான தொழிற்புரட்சியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் முதலிடத்தைப் பெரும் தோஹா (கத்தர்) நாட்டில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கார்னிஷ் எனப்படும் கடற்கரைப் பகுதி மக்கள் பொழுது போக்கிற்காகவும், நடைப் பயிற்சிகளுக்காகவும் சிறந்த இடமாகத் திகழ்கிறது.

நேற்று கடற்கரை பூங்கா ஓரமாக உள்ள கார் பார்க்கிங் பகுதியில் திடீரென்று மனித உருவத்தை ஒத்த ஒருவிலங்கு(!) வெளிப்பட்டது.

இதனைக் கண்ட மக்கள் அதிர்ச்சியில் அலறி ஓடினர். முதல்முறையாக இவ்வுருவத்தைக் கண்ட கத்தர் பெண்மணி ஒருவர் அலறியதைக் கேட்டு அங்குள்ள மக்கள் ஒன்று கூடினர். சிலர் தமது கையில் இருந்த மொபைல் போன்கள் மூலம் படம் எடுத்துள்ளனர். (அதில் ஒருவர் எடுத்த போட்டோ இங்கே)

தொடர்ந்து துணிச்சலுடன் நெருங்கிய சிலர் அதனை விரட்டிச் சென்று பிடிக்க முயன்ற போது துள்ளிக் குதித்து ஓடி மறைந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் இது மனிதனாக இருக்க வாய்ப்பே இல்லை என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பத்தால் அங்கு பெரும் பரபரப்பும் பீதியும் நிலவுகிறது.

Thursday, April 23, 2009

ராமதாஸுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டனம்!


முஸ்லிம்கள் குறித்து பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தவறாகப் பேசியதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலர் காயல் மகபூப் விடுத்துள்ள அறிக்கை:

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி அளித்தபோது, "இலங்கை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் ஐ.எஸ்.ஐ., உளவாளிகளிடம் பயிற்சி பெற்று திரும்பி இருப்பதாகவும், அவர்களால் இந்தியாவுக்கு ஆபத்து என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது, தமிழக முஸ்லிம்களை தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடிய சூழ்நிலைக்கு வழிவகுத்துள்ளது. இலங்கை ராணுவத்தின் கோரத் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படுவதைப் போல், விடுதலைப் புலிகளால் இலங்கை முஸ்லிம்கள் பல மடங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் முஸ்லிம் பகுதிகளில் இரவு 12 மணிக்கு விடுதலைப் புலிகள் துப்பாக்கியுடன் புகுந்து, அங்குள்ள லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் அசையும், அசையா சொத்துக்கள் அனைத்தையும் பிடுங்கி, 24 மணி நேர அவகாசத்தில், வாழ்ந்த இடங்களை விட்டு, உடுத்திய உடைகளோடு வெளியேற்றியதை வரலாறு மறக்கத் தயாராக இல்லை.

இவர்களின் பூர்வீகம் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தஞ்சை மாவட்டங்கள் என்ற வரலாறு, ராமதாசைப் போன்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள காத்தான்குடி பள்ளி வாசலில் இரவு தொழுகை நடந்திக்கொண்டிருந்த நிராயுதபாணியான முஸ்லிம்கள் நூற்றுக்கணக் கானவர்களை விடுதலைப் புலிகள் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றதை, ராமதாசைப் போன்றவர்கள் மறந்திருக்கலாம். இலங்கைத் தமிழர்களுக்காகவே வாழ்நாள் எல்லாம் உழைத்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் உள்ளிட்டவர்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப் பட்டதையே இவர்கள் மறந்துவிட்டனர்.

புலனருவ மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் நள்ளிரவில் புகுந்து முஸ்லிம் பச்சிளம் குழந்தைகளை கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்றதை மனசாட்சி உள்ள எவருமே மறக்க மாட்டார்கள். தமிழகத்தின் தொப்புள் கொடி உறவு தமிழர்கள் இலங்கையில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தான். இவர்களுக்குக் குடியுரிமை கொடுக்கக் கூடாது எனத் தடுத்தவர்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள் என்பதும், இதைப் பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியப் பார்லிமென்டில் கோசல் ராம் சுட்டிக்காட்டியதும் வரலாற்றில் பதிவு செய்யப் பட்டுள்ளது.

இவை அனைத்தையும் மறந்துவிட்டு, சொந்த நாட்டிலும், பிற நாடுகளிலும் அகதிகளாக வாழ்ந்துகொண்டிருக்கிற அப்பாவி இலங்கை முஸ்லிம்கள் மீது அநியாயமான அவதூறை ராமதாஸ் சுமத்துவது, இந்திய நாட்டின் மீது விசுவாசம் கொண்டுள்ள முஸ்லிம்களை, விரட்டத் துணியும் கொடூரச் செயல். லோக்சபாத் தேர்தலை மனதில் வைத்து இலங்கைப் பிரச்னையில் காய் நகர்த்தும் ராமதாஸ், இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டவராக இருப்பாரேயானால், மத்திய அமைச்சராக உள்ள அவரது மகனை பதவியிலிருந்து விலகச் செய்துவிட்டு அறிக்கைகளை வெளியிடட்டும்.

இவ்வாறு, காயல் மகபூப் அறிக்கையில் தெரிவித்துள்ளார்

பிரிந்துக்கிடக்கும் நம் சமுதாய இயக்கங்களை ஒன்று சேர்ப்பது யார்?

'சமுதாய ஒற்றுமைக்கு பாடுபடுவோம்!' என்ற முந்தைய பதிவை மிக அழகாக சமுதாய அக்கரையுடன் எழுதிய ஆசிரியருக்கு எனது பாராட்டுக்கள். இதுபோன்ற கட்டுரைகள் வந்தவண்ணம் உள்ளன, ஆனால் பிரிந்துக்கிடக்கும் நம் சமுதாய இயக்கங்களை ஒன்று சேர்ப்பது யார்?

முன்வாருங்கள்!
குழு அமையுங்கள்!
பேச்சுவார்த்தை நடத்துங்கள்!
மனமிட்டு பேசுங்கள் நமது சமுதாய நலனுக்காக!
வேற்றுமைகளை கலையுங்கள்!
ஒன்றுபடுங்கள் நம் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக!

நமது ஒற்றுமையின்மையை சரியாக புரிந்துக்கொண்ட திராவிடக்கட்சிகள் நமக்கு நாமே நம்மை எதிரிகளாக்கி கடைசி வரையிலும் இந்த சமுதாயம் (சமுதாய இயக்கங்கள்) ஒன்றுபட்டுவிடக்கூடாது என்று ஒவ்வோரு தேர்தலிலும் மிக நுட்பமாக காய்களை நகர்த்தி வருகிறார்கள். பிரிந்துக்கிடக்கும் சம் சமுதாய இயக்கங்கள் ஒற்றுமையுடன் தேர்தலை எதிர்க் கொண்டால் இன்ஷா அல்லாஹ், இறைவனின் நாட்டப்படி நாம் கைக்காட்டும் நபர்தான் எம்.பி யாகவோ எம்.எல்.ஏ.வாகவோ வரமுடியும் என்பதற்கு பல(வரலாறுகள்) சான்றுகள் உண்டு.

எனக்கு தெரிந்த நம் சமுதாய இயக்கங்களை இங்கே பட்டியலிடுகிறேன்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
இந்திய தேசிய லீக்.
தேசிய லீக்.
மறுமலர்ச்சி முஸ்லீம் லீக்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா.
ஜனநாயக முஸ்லீம் முன்னேற்றக் கழகம்.
சுன்னத்துவல் ஜமாஅத்.

நிச்சயமாக இதுப்போன்ற இயக்கங்கள் நம் சமுதாய நலன் கருதியே ஆரம்பிக்கப்பட்டிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சமுதாய நலனில், சமுதாயம் முன்னேற ஒத்த நிலைப்பாட்டை கொண்ட நாம் ஏன் ஒன்று சேர முடியாது, ஏன் ஒற்றுமையுடன் தேர்தலை எதிர்க்கொள்ள முடியாது? இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக முடியும்.

ஒன்று சேர்ந்துப்பாருங்கள், பத்திரிக்கையாளர்களைக்கூட்டி பிரகடனம் செய்யுங்கள், அரசியல் கட்சிகளை தேடி நாம் செல்ல வேண்டியதிருக்காது மாறாக அவர்கள் நம்மை தேடி வருவார்கள் இன்ஷா அல்லாஹ்!.

பல்வேறு பிரச்சனைகளில் நாம் வேறுப்பட்டு இருக்கலாம்! நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக, சமுதாய முன்னெற்றத்திற்காக தயவுசெய்து அதை மறந்து ஒன்றுபடுவோம்!

நம் ஒற்றுமையை நிலைநாட்ட இதுவே சரியான தருணம்.
மாறி மாறி கொடி பிடித்து அவர்களை வெற்றியடைய செய்ததும் போதும்!
வாக்குறுதிகள் கொடுத்து அவர்கள் நம்மை ஏமாற்றியதும் போதும்!

சமுதாய நலனில் அக்கறைக் கொண்டவர்களே!
நியாவான்களே!

வாருங்கள்!
ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடிப்போம்!
சமுதாய நலனுக்காக ஒற்றுமையுடன் தேர்தலை சந்திப்போம்!
ஜெயம் கொள்வோம்! இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு : இதை எப்படி செயல்படுத்துவது, எப்படியெல்லாம் நம் சமுதாய இயக்கங்களை ஒன்றுசேர்ப்பது என்று உங்களுடைய ஆலோசனைகளை 'கருத்துகள்' பகுதியில் பதியுங்கள்.

ஆக்கம்,
-அப்துல் பரக்கத்.

thanks அதிரை எக்ஸ்பிரஸ்

Wednesday, April 22, 2009

முஸ்லிம்களுக்கெதிரான பீஜேயின் பயணம்

தமிழகத்தில் தவ்ஹீத் சிந்தனைகளை மிக எளிதாக மக்கள் மனதில் பதிய வைத்தவர்களில் பிஜேயின் பங்கு அபரிதமானது. ஆனால் சில ஆண்டுகளாக அவரின் போக்கு முஸ்லிம்களுக்கு குறிப்பாக தவ்ஹீத் சிந்தனையாளர்களுக்கு கவலையும் அதிருப்தியும் கொள்ளச் செய்கிறது.

என்ன காரணத்திற்காக தமுமுகவிடமிருந்து பிரிந்து சென்றாரோ அதை நூறு சதவீதம் தலைகீழ் மாற்றி தன்னுடைய குடும்ப கட்சியை போன்றே ஆக்கிக்கொணடார் ததஜ வை.

முற்கால தமிழ் சங்க இலக்கியங்களில், வரலாற்றுச் சம்பவங்களில் வருவதைப்போன்றே, சில தவ்ஹீத் வாதிகளின் மதகுருமாரைப் போன்றே ஆகிவிட்டார். அவருடைய எல்லா செயல்களையும் "ஆஹாரம்" செய்ய சிலர் உருவாகிவிட்டனர். மூடநம்பிக்கைக் கொண்டு தாயத்துக்களிலும், மெளலீத்களிலும் மெளலவிகள் மக்களை மடையர்களாக்கின்றனர், மார்க்கத்தை அசிங்கப்படுத்துகின்றனர் என்று சொன்னாரோ அது இப்பொழுது நவீன காலம் ஆதலின் இந்த மெளலவியிடம் தாயத்தும், மெளலீதும் அவருடைய ஆடியோ, வீடியோ சிடிக்களாகவும் மிக அதிக அளவில் விற்று சாதனை படைக்கிறது. பழைய மெளலவிகளின் பிஸினஸை இவர் வாங்கிகொண்டார்.

தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அதிமுக விற்கு வாக்களிப்பது முஸ்லிம்களின் கடமை என்றும், அல்லாஹ் மறுமையில் கேட்பான் என்றும் கூறி அவருடைய நயவஞ்சக தன்மையை வெளிப்படுத்தினார்.

இப்பொழுது அதிமுக தோற்றவுடன் முஸ்லிம்களின் ஓட்டு தேர்தலை தீர்மானிக்கவில்லை என்று சொல்லி முஸ்லிம் விரோத போக்கை கையாண்டுள்ளார். தான் அடையாத வெற்றி பிறர் அடைந்ததை எண்ணி இவ்வாறு பேசியுள்ளார்.

அல்லாஹ்விற்கு பயந்து ததஜ சகோதரர்கள் தலைமை மாற்றவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். "நா" வரண்டு பேசும் பீஜேவிற்கு ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வையுங்கள். அவருடைய முஸ்லிம் விரோத பயணம் தொடராமல் பார்த்துகொள்வது தவ்ஹீத் சகோதரர்களின் முதல் பணியாக அமையட்டும். இல்லையெனில் பின்வரும் நாட்களில் என்னவெல்லாம் பேசுவார் என்பதை அல்லாஹ்வே அறிவான். அவருக்கு ஆஹாரம் செய்வதை விட்டொழியுங்கள்.

ஓட்டளிக்க மாற்று ஆவணங்கள் அறிவிப்பு!

'ஓட்டளிப்பதற்கு புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், 13 வகையான மாற்று ஆவணங்களைக் காண்பித்து ஓட்டளிக்கலாம்' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ள உத்தரவு: கள்ள ஓட்டுக்களைத் தடுக்க, ஓட்டுப்பதிவின் போது அடையாளத்தை உறுதிபடுத்த, வாக்காளர் புகைப்பட அட்டையை அடையாள ஆவணமாகக் காண்பிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

அசாம், ஜம்மு-காஷ்மீர், நாகாலாந்து தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே, ஓட்டளிக்கும் உரிமையை வாக்காளர் பெறுகிறார். எனவே, புகைப்பட அடையாள அட்டை பெற்ற வாக்காளர்கள், வரும் லோக்சபா தேர்தலில் அதைக் காண்பித்து ஓட்டளிக்க வேண்டும். அவ்வாறு வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பிக்கத் தவறும் வாக்காளர்கள், புகைப்படத்துடன் கூடிய 13 வகையான மாற்று ஆவணங்களைக் காண்பித்து ஓட்டளிக்கலாம்.

அவை வருமாறு:

1. பாஸ்போர்ட்
2. டிரைவிங் லைசென்ஸ்
3. வருமான வரி அடையாள அட்டை (பான் கார்டு)
4. மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை, உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய பணியாளர் அட்டை.
5. பொதுத்துறை வங்கிகள், தபால் அலுவலகங்கள் வழங்கிய பாஸ் புத்தகங்கள், கிசான் பாஸ் புத்தகங்கள். கணக்கை இந்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதிக்கு முன் துவக்கியிருக்க வேண்டும்.
6. பட்டா, பத்திரப் பதிவு போன்ற புகைப்படத்துடன் கூடிய சொத்து ஆவணங்கள்.
7. ஆதிதிராவிடர், பழங்குடியினர். இதர பிற்பட்ட வகுப்பினருக்கு, வழங்கிய புகைப்படத்துடன் கூடிய சான்றுகள்.
8. பென்ஷன் ஆவணங்கள்
9. சுதந்திரப் போராட்ட வீரர் அடையாள அட்டைகள்.
10. ஆயுத லைசென்ஸ் அட்டைகள்.
11. உடல் ஊனமுற்றோருக்கான அடையாள அட்டைகள்.
12. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பணி கார்டுகள்.
13. தொழிலாளர் நல அமைச்சகத்தின், மருத்துவக் காப்பீட்டுத் திட்ட 'ஸ்மார்ட் கார்டு'கள்.

இந்த 13 ஆவணங்களும், இந்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதிக்கு முன் பெற்றிருக்க வேண்டும். மேலும், இந்த ஆவணங்களில் குடும்பத் தலைவரின் புகைப்படம் மட்டும் இருந்தால், அந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக ஓட்டுச்சாவடிக்கு வந்து, வாக்காளரை குடும்பத் தலைவர் அடையாளம் காண்பித்த பிறகே ஓட்டளிக்க முடியும். இவ்வாறு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பாப்லர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் தேர்தல் நிலைப்பாடு





15 வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் தேர்தல் நிலைப்பாடு குறித்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் திரு. முகம்மது அலி ஜின்னா தெறிவிக்கையில் :

சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் 60 ஆண்டு காலமாக அரசியல் அதிகாரத்தில் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என்பது பட்டவர்த்தனமான உண்மை. இந்தியாவில் 13.4% வாழும் முஸ்லிம்கள் சுதந்திரமடைந்து அரை நூற்றாண்டுக்கு மேலாகியும் பாராளுமன்ற பிரதிநிதித்துவாத்தில் தனது சதவீதத்தில் பாதியை கூட் பெறவில்லை.

அரசியல் பிரதிநிதித்துவத்தில் முஸ்லிம்கள், தலி்த்துகள், இதர சிறுபானடமையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை அரசியல் ரீதியில் சக்திப்படுத்துதல் என்ற குறிக்கோளுடன் PFI செயல்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில் இதற்கான முயற்சியை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா எடுத்து வரும் இந்த தருனத்தில்தான் மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறோம். இந்த மக்களவை தேர்தலில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நேரடியாக போட்டியிடவில்லை. ஆனால் தேர்தல் சம்பந்தமான முக்கிய நிலைப்பாட்டை திர்மானித்தள்ளது.

தமிழ்நாட்டில் முஸ்லிம் சமுதாயத்தின் அரசியல் முயற்சியாக மனித நேய மக்கள் கட்சி (MMK) தனி சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றது. இதனை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா வரவேற்கின்றது. எனவே மயிலாடுதுறை, மததிய சென்னை, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெறச் செய்யவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மதவாத ஃபாசிஸக் கட்சிகள் அரசியல் அதிகாரத்திற்கு வருவதை தடுக்கும் வகையிலும் கடந்த இரன்டரை வருட திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு கல்வி , ஏவேலை வாய்ப்பில் 3.5% இட ஒதுக்கீடு, உலமா நல வாரியம் அமைப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டும் , கிலோ 1 ரூபாய் அரிசி, ஏழைகளுக்கு எரிவாயு இனைப்புடன் இலவச கேஸ் அடுப்பு, தமிழகத்திற்கு பயனளிக்கும் சேது கால்வாய் திட்டத்திற்கான உறுதியான முயற்சி போன்ற மக்கள் நலத்திட்டங்களை கருத்தில் கொண்டும் புதுவை உட்பட மீதமுள்ள 37 தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை கொண்ட கூட்டணிக்கு ஆதரவிளத்து வெற்றி பெறச் செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்து.

பாரதீய ஜனதா கட்சி ஹிந்துத்துவா என்னும் அரசியல் செயல்திட்டத்துடன் செயல்படும் ஓர் அரசியல் கட்சி. ஹிந்துத்துவா என்னும் இந்த செயல்திட்டம் இந்தியாவின் ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் அரசியல் சாசன சட்டத்திற்கும் ஏன் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்குமே எதிரானதாகும். இதற்கு பா.ஜ.க நாடு முழுவதும் நடத்திய முஸ்லிம், தலித், கிருத்துவர்களுக்கு எதிரான கலவரங்களே சாட்சி. கடந்த கால பா.ஜ.க வின் ஆட்சிக்காலம் இந்திய வரலாற்றில் ஓர் இருன்ட காலமாகும்.

எனவே பா.ஜ.க வை தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் புறக்கணித்தது போல் ஒட்டுமொத்த மக்களும் புறக்கணிக்கும் வகையில் பாரதீய ஜனதா போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா களமிறங்கி பா.ஜ.க வுக்கு எதிராக களப்பணியாற்றி அதனை படுதோல்வியடையச் செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்பத்திரிகையாளர் சந்திப்பில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொருளாலர் ஷேக் முகம்மது தெஹ்லான் பாகவி, மாறிலத் துணைத் தலைவர் ஏ.எஸ் இஸ்மாயீல் , மாநில பொதுச் செயலாளர் ஏ. ஃபக்ருதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

Monday, April 20, 2009

ஆர்வப்படு; ஆதங்கப்படாதே!

ஒரு முஸ்லிம் தனது வாழ்வில் சுறுசுறுப்பானவனாக இருக்க வேண்டும். முழுப் பிரபஞ்சத்தின் முக்கியமான அங்கமாகிய முஸ்லிம், பிரபஞ்சப் பொருட்களிடம் காணப்படுகின்ற சுறுசுறுப்பான இயக்கத்தைத் தன்னுள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவனிடம் இயலாமையும் சோம்பலும் இருக்கக் கூடது. உத்வேகமான செயற்பாட்டைத் தடுத்து நிறுத்தி ஒரு மனிதனை விரக்தியின் விளிம்புக்குக் கொண்டு சென்று விடக் கூடிய கொடிய விஷமே இயலாமையும் சோம்பலுமாகும். இவ்விரண்டும் கண்டிக்கத்தக்க பண்புகள் ஆகும். இவ்விரு குண இயல்புகளிலிருந்தும் தன்னைப் பாதுகாக்குமாறு அண்ணலார் (ஸல்) இறைவனிடம் பாதுகாவல் தேடியுள்ளார்கள்.
"யா அல்லாஹ்! இயலாமை, சோம்பல் முதலானவற்றிலிருந்தும்; உலோபித்தனம், கோழைத்தனம், தள்ளாமை போன்றவற்றிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன்" (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், நஸாயி).
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயலாமையைக் களைந்தெறிந்து விட்டு பயன் தரும் விவகாரங்களில் பேரார்வத்துடன் செயற்படுமாறு பணிக்கிறார்கள். இங்கு நபியவர்கள் பொதுவாக பயன் தரும் விடயங்களில் கவனம் செலுத்துமாறு கூறுகிறார்கள். அதாவது, பயன் தரும் விவகாரங்களை அவர்கள் கூறுபோடவில்லை. நேரடியாக மார்க்கத்துடன் தொடர்புறுகின்ற விடயங்களாக இருந்தாலும் சரி, உலக விவகாரங்களாக இருந்தாலும் சரி, அவற்றில் நலன் தரும் நன்மைகளும் பயன்களும் இருந்தால் அவற்றைப் பேரார்வத்துடன் எடுத்து நடந்திட வேண்டும்.
குறிப்பாக, ஒரு சமுதாயத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் இளைஞர்களும் மாணவர்களும் இவ்விடயத்தில் முழுக்கவனம் செலுத்த வேண்டும். பெறுமதியான மணித்துளிகளை அவர்கள் நாசப்படுத்திடக் கூடாது. கல்வித் தேடல் என்பது (பர்ழான) கடமையாகும். இக்கடமையின் தொடக்க நிலை வாசிப்பும் எழுத்துமாகும். வாசிப்புப் பழக்கம் இல்லாத சமூகம் வெற்றியின் ஏணிப்படிகளை எட்டிப் பிடித்திட முடியாது.
இன்று வாசிப்புப் பழக்கம் மெல்ல மெல்ல வழக்கொழிந்து வருகிறது. எல்லாவற்றையும் பிறரிடம் கேட்டு அறிந்து கொள்கின்ற நிலையும் அவற்றோடு தங்களது தேடலை மட்டிட்டுக் கொள்ளும் போக்கும் தொடருகின்றது. சுயமான தேடல் என்பது பயனுள்ள விடயமாகும். அதனைக் கைவிட்டு பொன்னை விடப் பெறுமதியான நேரத்தை நாசமாக்குகின்ற ஒரு பரம்பரையை நாம் சந்திக்கிறோம்.
பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களில் அநேகர் பரீட்சையில் சித்திபெறுவதற்காக வாசிக்கிறார்கள், மனனமிடுகிறார்கள். பரீட்சை முடிவுற்றதும் வாசிப்புக்கு விடைகொடுத்து அனுப்பி விடுகிறார்கள். எழுத்துக்கும் எழுத்துச் சாதனத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்த குர்ஆனைச் சுமந்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்கின்ற நிலை மட்டும் ஆரோக்கியமாக உள்ளது.
இன்று அரபு உலகைச் சேர்ந்த ஒரு மனிதன் ஒரு வருடத்திற்கு 1/4 பக்கம் வாசிக்கிறான். அதாவது 1/2 மணித்தியாலம் வாசிக்கிறான். ஆனால் ஒரு அமெரிக்கப் பிரஜை ஒரு வருடத்திற்கு 7 நூற்களை வாசித்து முடித்து விடுகின்றான். 1960 ம் ஆண்டுகளில் வாசிக்கத் தெரியாத சமூகம் என்று கேலி செய்யப்பட்டவர்களே அரபுகள். இன்று 1/4 பக்கம் வாசிப்பதானது வரவேற்கத்தக்க விடயமே.
1967 ம் ஆண்டு அன்றைய இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் மோஷே தயான் ஐரோப்பியப் பத்திரிகைகளுக்கு யுத்த தந்திரோபாயங்களையும் வியூகங்களையும் விளக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அவ்வாறு தெளிவுபடுத்தியது குறித்து அவர் விமர்சிக்கப்பட்டார். அப்பொது அவர் கீழ்வருமாறு கூறினார்:
"நான் யுத்த தந்திரோபாயங்களை ஏன் வெளியிட்டேன் என்றால், எனக்குத் தெரியும்; நிச்சயமாக அவற்றை அரபிகள் வாசிக்க மாட்டார்கள். அப்படி வாசித்தாலும் அவற்றை விளங்கி உள்வாங்கிக் கொள்ள மாட்டார்கள். அவ்வாறு உள்வாங்கினாலும் அவற்றை அவர்கள் நடைமுறைப்படுத்த மாட்டார்கள்."
இஸ்லாத்தின் எதிரிகள் நமது பலவீனத்தை நன்குணர்ந்துள்ளார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. நமது அறிவியல் பாரம்பரிய வரலாற்றை எடுத்து ஆராய்ந்தால் சுயமான தேடலுக்கான முன்மாதிரிகளைக் கண்டுகொள்ளலாம். இமாம் இப்னு ருஷ்த் அவர்கள் இரு சந்தர்ப்பங்களில் மாத்திரமே வாசிக்காது இருந்துள்ளார்கள். முதலாவது சந்தர்ப்பம் அவரது தாய் மறைந்த நாள். இரண்டாவது, அவர் திருமணம் செய்து மனைவியோடு இருந்த முதல் இரவு.
அக்கால அப்பாஸிய அரண்மனைகளில் அரச கருமங்களில் ஈடுபட்ட அமைச்சர்கள் தமது அரச கருமங்களிலிருந்து விடுபட்டு இருப்பதற்கு சிறிதளவு அவகாசம் கிடைத்தாலும்கூட, தங்களது சட்டைப் பைக்குள் இருக்கின்ற புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தவறுவதில்லை.
ஓர் அறிஞரை நோக்கி ஒருவர், "வாருங்கள்! சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருப்போம்" என்று கூறினார். அதற்கு அவ்வறிஞர், "சூரியனை நிறுத்தி விட்டு வாருங்கள். பேசிக் கொண்டிருக்கலாம்" என்று கூறினார்.
பயனுள்ள விவகாரம் என்பது நாவல்களையும் சிற்றின்ப வேட்கைக்குத் தீனி போடும் புத்தகங்களையும் வாசிப்பது என்று பொருளாகாது. மாறாக, சிந்தனைக்கு விருந்தாக அமையக்கூடிய, உள்ளத்தைப் பண்படுத்தக்கூடிய, நடத்தைகளை நெறிப்படுத்தக்கூடிய நல்ல நூல்களை வாசிப்பதே பயன் தரும் செயலாகும். வேலைப்பளுவால் நேரத்தை நிரப்புவதும் பயன் தரும் விடயமல்ல. ஓய்வும் மனிதனுக்கு இன்றியமையாத, பயன் தரும் அம்சமே. உடல் ஆரோக்கியம் பேண வியர்க்க வியர்க்க விளையாடுவதும் பயன் தருவதே. மணித்துளிகளை வீண் விளையாட்டுக்களாலும் கேளிக்கைகளாலும் பாவங்களாலும் தீமைகளாலும் நிரப்புவது பயன் தரும் விடயமாகாது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "உனக்குப் பயன் தரும் விடயங்களில் பேரார்வம் கொள். அல்லாஹ்வின் உதவியைப் பெற்றுக் கொள். எதையும் செய்ய இயலாது என்று இருந்து விடாதே. உனக்கு துன்ப துயரம் ஒன்று ஏற்பட்டால் "நான் இவ்வாறு செய்திருந்தால் இவ்வாறு நடந்திருக்குமே" என்று கூறாதே! மாறாக, " அல்லாஹ் திட்டமிட்டு தீர்மானித்தது நடந்திருக்கிறது" என்று கூறு. ஏனெனில், இவ்வாறு செய்திருந்தால், அவ்வாறு செய்திருந்தால் என்ற வார்த்தை ஷைத்தானினது செயற்பாட்டுக்குரிய வாயிலைத் திறந்து விடும்." (ஸஹீஹ் முஸ்லிம்)
நாம் பயன்படுத்துகின்ற கருவிகள்கூட நமக்குப் பயன் தரவேண்டும். அக்கருவிகள் வாழ்க்கை வசதியை இலகுபடுத்தி செக்கன் கருவூலங்களைச் சேமிப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவை. அவ்விலக்கை நாம் அடையாவிட்டால், நாம் பயனற்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளோம் என்பதே அர்த்தமாகும். அது நபி வழியுமல்ல. உதாரணமாக, நாம் அன்றாடம் பயன்படுத்தும் கையடக்கத் தொலைபேசியை எடுத்துக் கொள்வோம். அதன் மூலம் இன்றைய இளைய தலைமுறை பயன்பெறுகிறதா? இதன் மூலம் நலனைவிட தீமையையே அது அதிகம் சம்பாதிக்கிறது.
நமது அன்றாட முக்கிய கடமைகள் முடிவடைந்து மணித்துளிகளைச் சேகரம் செய்து வைத்துள்ளோம் என்றால், அவற்றை எமது வாழ்விடத்தில் வீட்டுத் தோட்டம் ஒன்றை அமைப்பதற்குப் பயன்படுத்தலாம். இது எமது எமது பொருளாதார நெருக்கடி நீங்குவதற்கு வழிகோலலாம்.
நாம் ஒரு பிரசார சமூகம் என்ற வகையில் மார்க்கத்தைக் கற்றல், அதனை எத்தி வைத்தல் என்பது நமக்கு ஈருலகப் பயன்களைப் பெற்றுத்தர வல்லது. இதுவே உச்ச பயனுள்ள செயலாகும்.
விரிந்த சிந்தனையோடு செயற்படுகின்றவர் எப்போதும் பயனுள்ள செயற்பாட்டுக்கான ஊட்டத்தை அல்லாஹ்விடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில், எமது வாழ்வை வரைந்தவன் அல்லாஹ். அவன் சகலவற்றையும் நன்கறிந்தவன். (மனிதனுக்குப்) பயனுள்ளவை; பயனற்றவை முதலானவற்றை வேறு பிரித்து அறியும் ஆற்றல் அவனுக்கே உள்ளது. நாம் பயனுள்ளவை எனக் கருதுகின்றவை சிலபோது பயனற்றவையாக மாறிவிடுகின்றன. பயனற்றவை என்று தூர விலக்கி வைப்பவை சிலபோது உச்ச பயனைத் தந்து விடுகின்றன. ஆகவே, இவ்விவகாரத்தில் அல்லாஹ்வைச் சார்ந்திருப்பதே சாணக்கியமானதாகும். அவனில் முழு நம்பிக்கை வைத்துச் செயற்படுகின்றபோது அவன் சிந்தனைத் தெளிவை எமக்குத் தருவதன் மூலம் துணைநிற்கிறான். செயற்படுத்துவதற்கான தேகாரோக்கியத்தைத் தருபவனும் அவனே!
பயன் தரும் செயற்பாடுகளைச் செய்ய முடியும் என்ற திடஉறுதி ஒருவருக்கு முதலில் தேவை. முடியாது, இயலாது, சிரம சாத்தியமானது முதலாம் பதப் பிரயோகங்கள் எமது வாழ்வைத் துவம்சம் செய்துவிடக் கூடாது. நமது ஆற்றலை, ஆளுமையை முழுமையாக வெளிக்கொணர்ந்து செயற்களத்தில் குதித்திடல் வேண்டும். தனது சக்திக்கு மீறிய ஒன்றைத் தனித்து நின்று செய்ய முடியாதென்றால் அதுவே இயலாமை. செய்ய முடியுமான ஒன்றைச் செய்யாமல் இருப்பது சோம்பல்தனம். பிறரின் உதவியோடு தனது உச்ச ஆற்றலைப் பயன்படுத்தி இயலாமையை இல்லாமலாக்கி முன்னேற வேண்டும். சோம்பல் நம்மிடம் அறவே இருக்கக் கூடாது. இவ்விரு இழி குணங்களும் நமது அன்றாட வாழ்வில் தேக்க நிலையைக் கொண்டு வந்து விடும். எனவேதான், அன்றாடம் தொழுகைக்குப் பின்னர் இவ்விரு பண்புகளிலிருந்தும் நபியவர்கள் பாதுகாவல் தேடச் சொன்னார்கள்.
நாம் நமது வாழ்வில் ஏற்படும் துன்ப துயரங்கள், தோல்விகளினால் மனம் உடைந்து போய்விடக் குடாது. ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் எழுத்தை, அவனது தீர்மானத்தை ஆழமாக நம்பி வாழ்பவன். அவனது திட்டத்தை நூறு வீதம் நம்புகின்றவன். அது வெற்றி காணாதபோது துவண்டு விடக்கூடாது. அது தொடர்பாக அதிகம் அலட்டிக் கொள்ளக் கூடாது. தனது செயற்பாட்டை விரக்தியின் விளிம்புக்கு நகர்த்தி விடக் கூடாது. தனது திட்டத்தைவிடப் பன்மடங்கு பெரியதொரு திட்டம் இருக்கிறது என்பதை நம்பாதவன் அல்லது அதில் பலவீனமானவனே வெறும் கற்பனையில் சஞ்சரிப்பான், ஆதங்கப்படுவான், பிரலாபிப்பான். இறுதியில் ஷைத்தானுக்குக் களம் அமைத்துக் கொடுப்பான்.
அல்லாஹ்வின் திட்டத்தையும் தீர்மானத்தையும் முழுமையாக ஏற்று அங்கீகரித்து அதனையே முழுமையாக விசுவாசித்து வாழுபவன், தனது வாழ்வில் ஏற்படும் துன்ப துயரங்களும் கஷ்ட நஷ்டங்களும் தோல்விகளும் வெற்றிக்கான ஏணிப்படிகள் என்று நினைக்கிறான். சோதனைகள் அவனைப் பொருத்தமட்டில், தான் நடந்து வந்த பாதையில் அறியாமையால், தான் செய்த தவறுகளையும் சறுக்கிய இடங்களையும் சுட்டுகின்ற மைல்கற்கள் என்று கருதுகின்றான். அந்தப் பாதையில் இனி வரப்போகும் அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான பயிற்சிகள் என்று புரிந்து கொள்கிறான். தொடர்ந்தும் விவேகத்துடனும் விழிப்புணர்வுடனும் பயணிப்பதற்கான அபாய அறிவிப்புகள் என்று அவன் விளங்கிக் கொள்கிறான். இந்த நம்பிக்கையை அவன் தனது நாவினால் மொழிகின்றபோது அந்த நம்பிக்கை வலுப்பெறுகிறது. قدّرَ اللَّهُ مَا شاَءَ فعَلَ - (அல்லாஹ் திட்டமிட்டு தீர்மானித்ததே நிகழ்ந்தது).
பயனுள்ள விவகாரங்களில் ஈடுபடுகின்றவர்கள் முழு உற்சாகத்துடன், இடையிடையே நின்றுவிடாது பயணிக்க இறைத்தூதர் அருளிய கத்ர் பற்றிய ஆழமான நம்பிக்கை அவசியம். இந்த நம்பிக்கையில் பலவீனமடைந்தவர்கள் மார்க்கப் பணிகளிலிருந்தும் விடுபட்டு காணாமல் போய் விடுகின்றனர். அவர்கள் தொடர்ந்தும் தங்களுக்கென சிலக் கோடுகளைக் கிழித்துக் கொண்டு கற்பனை வானில் தனியாக சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள்!.

நன்றி: - அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ்(இஸ்லாஹி)

Friday, April 17, 2009

உள்ளத்தில் ஒளி வேண்டுமா? - எம்.அப்துல் ரஹீம்

உள்ளம் அது ஒரு பெரு வெள்ளம்! ஒன்றிரண்டல்ல ஓராயிரம் எண்ணங்களை ஓடவிடும் கணினி -உண்மையாக இருந்தாலும் உடன்படாத பொய்யாக இருந்தாலும் அதை உணரச் செய்யும் உன்னத ஊடகம்,!
ஒற்றுமையாக வாழவும் ஓராயிரம் நன்மைகள் செய்யஉதய கீதம் பாடவும் உதவும் உந்துதல் உணர்ச்சி!நல்லதைச் செய்ய நாடவைக்கும் உள்ளத்தில்நனிசிறந்த எண்ணங்களை உருவாக்கும் ஊற்றுக்கண்!பாசத்தைப் பொழியவும் பகைமையை மறக்கவும்பசித்தவர்க்கு உதவவும் பரந்த நோக்குடன் அரவணைக்கும்பாமரர்களின் அன்னை! பள்ளம் எது மேடு எதுவென்றுபகுத்தறிந்து வாழ்க்கைப் பாதையை நேர்வழிக்கோட்டில்கொண்டு செல்லும் குறிக்கோள்களின் இலக்கு!
பொறாமைத்தீ எரியும்போது புகை வெளி வராமல்தடுத்து, புத்தியுள்ளவனாக வளர வைக்கும் புனல்!குறுக்கு வழி செறுக்கு வழியென்றும் நேர்வழிதான்நித்திரையை கொடுக்கும் நிலையான வழியென்றும்நினைவுபடுத்தும் நாட்காட்டி! கொள்ளையடிப்பதைதடுத்து கொள்கைப்பிடிப்பை உருவாக்கும் கருவூலம்!கண்ட காட்சியே உண்மையென்று உரைக்காமல்கடுகளவும் தவறு வராமல் தடுக்கும் நவீன கருவி!கண்கள் போன போக்கில் கருத்தைப் புகவிடாமல்தடுத்தும் காதில் கேட்பதில் நல்லவைகளை மட்டும்எடுத்து பிரித்தளிக்கும் அன்னப்பறவை !கஷ்டம் வரும்போதும் கலகலப்பான சூழ்நிலைவரும்போதும் கதகதப்பாகவே இருக்கும் வெப்பமானி!காத தூரம் சென்றாலும் கடுகளவும் பழையதைமறக்காமல் நிரப்பி வைக்கும் நினைவாற்றல்!
காலத்தை உணர்த்தி கடமையைச் செய்ய வைக்கும்கருத்துப் பெட்டகம்! கயவர்களின் உறவைகருவறுக்கச் செய்து கல்லறைக்கு அனுப்பும் தூதுவன்!உயர்ந்த வெற்றியை உன்னத நோக்கத்துடன்அடைய வைக்கும் ஒன்றுபட்ட உலகம்!ஓராயிரம் வாழ்க்கைக் கனவுகளை உள்ளடக்கிதேவைப்படும் ஒவ்வொரு நேரத்திலும் ஒளிரும்திரைச்சீலை! இறையச்சத்தை உள்ளடக்கிஇயன்றவரை இறைப்புகழ் பாடும் இன்பக்கருவூலம்!வாள் கொண்டு போரிட்டும் கிட்டாத வெற்றியைவாய்மொழியால் கிட்ட வைக்கும் பேரரசன்!நல்லதிலும் கெட்டதிலும் நல்லதை மட்டும்நாடச்செய்து நற்பெயர் ஈட்டித்தரும் தந்தை!நாம் ஏன் பிறந்தோம் என்பதை சிந்தித்துபடைப்பின் இரகசியத்தை பயத்துடன் புரிந்து கொண்டுநல்லதோர் வாழ்க்கை வாழ நலம்பயக்கும்நடமாடும் பல்கலைக்கழகம்
இப்படிநல்லதையே செய்து இறைவனின் அருள்பெறநாடும் உள்ளம், ஒருசில நேரங்களில்நரக வாழ்விற்குச் செல்ல பாலம் அமைக்கும்நாட முடியாத தீயாக எரிகிறதே! ஏன்?ஒருவேளை இந்த உள்ளம்ஓர் இறைக்கொள்கையை ஏற்று உன்னதவேதத்தின் உள்ளார்ந்த போதனையை துறந்துஉத்தம நபியவர்கள் சொன்னதில் ஒன்றைக்கூடபுரிந்து கொள்ளாமல் உலக வாழ்க்கை இன்பத்தைமட்டும் உயர்ந்ததொரு வாழ்க்கையாகக் கருதிஉறுதியான மரணத்திற்குப்பின் வரும் உயரியவாழ்க்கை சுவர்க்கக் கனியை சுவைக்க வைக்கும்என்ற அல்லாஹ்வின் அருட்கொடையை உணராமல்இஸ்லாத்தின் ஐங்கடமைகள் எங்குள்ளதுஎன்று கூடத் தேடாமல் கண்ணிருந்தும் குருடர்களாய்காதிருந்தும் செவிடர்களாய் கருத்திருந்தும்மூடர்களாய் கால்கள் நடக்கும்பாதையே சரியான பாதையென்று கருவறைமுதல்கல்லறை வரை நிராகரிப்பாளர்களாய் வாழ்ந்துவிட்டுகண்மூடும் மாந்தர்களே விழித்துக்கொள்ளுங்கள்!
இப்போதாவது.....எஞ்சிய வாழ்நாளிலாவது வெள்ளமென ஓடும்உள்ளத்தின் ஒரு சிறு பகுதியாவது இறைவன் பால்நாடச் செய்யுங்கள்_ இஸ்லாத்தில் இணைந்திருக்கும்கருத்துக்கள் இணையற்ற கோடிகள் என்பதை உணருங்கள்!இயற்கையோடு இணைந்து இறைவன்பால் பிணைந்துஇனிய வாழ்க்கை வாழ இன்றாவதுஏற்றுக்கொள்ளுங்கள் ஓர் உறுதிமொழியை!
உள்ளத்தில் ஒளி வேண்டுமா? ஓடுங்கள் இறைவனிடம்!முயன்றால் முடியாதது ஒன்று உலகத்தில் உள்ளதா?
இல்லையே! எதையும் சாதிக்கும் எண்ணத்தில்நிய்யத் ஒன்றை நிதானமாக ஏற்படுத்திக்கொள்ளுங்கள! நின்று நிதானித்து யோசியுங்கள்!நிறைவேற்றும் வல்லமையை நீதிமிகு இறைவன்வழங்க நம்மை நெருங்கி வருகின்றான்!
நெஞ்சை நிமிர்த்துங்கள்! நேர்வழி வாழ நிறைவுடையவாழ்வளிக்கும் இறைக் கட்டளைகளை நிறைவேற்றநில்லாமல் ஓடுங்கள்! அப்படி நிறைவேற்றிவிட்டால்உங்களின் இந்தப் புனித ஓட்டம் ஒருநாள்நின்றபின் புரிந்துகொள்வீர்கள் சொர்க்கத்தில்!!
- எம்.அப்துல் ரஹீம்,எம்.ஏ.,பி.காம்.,பி.ஜி.எல்.,ப்பி.ஜி.டி.பி.ஏ.
கோவை

அத்வானி மீது ‘செருப்பு’ வீச்சு,

ஏப்ரல் 15,2009 பா.ஜ.க சார்பில் பிரதம் வேட்பாளரக போட்டியிடும் அத்வானி,, பா.ஜ.க கட்சி ஆளும் மாநிலமான மத்தியபிரதேசத்தில், கந்தி என்ற தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது பர்வேஷ் அகர்வால் என்பவர், தம் அணிந்திருந்த காலனியை கழட்டி அத்வானி மீது வீசினார்.

பர்வேஷ் அகர்வால்- மாவட்ட அளவில் பா.ஜ.க வில் கட்சி பொறுப்பு வகித்து வந்தாரம், சமீபத்தில் அவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு விட்டதால் ஆத்திரமடைந்து - அத்வானி மீது காலனி வீசியதாக கூறப்படுகிறது

Wednesday, April 15, 2009

சமூக ஜனநாயக முன்னணி உதயம்


மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், இந்திய தேசிய லீக் ஆகிய 3 கட்சிகள் ஒன்றாக சேர்ந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது. “சமூக ஜனநாயக முன்னணி” என்ற பெயரில் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இந்திய தேசிய லீக் மாநில தலைவர் சையத்இனாயத்துல்லா ஆகியோர் கூட்டாக சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக “சமூக ஜனநாயக முன்னணி” என்ற புதிய கூட்டணியை நாங்கள் அமைத்திருக்கிறோம். கடந்த 1 மாதமாக பேசி இன்று இந்த கூட்டணி உருவாகி இருக்கிறது. எங்களுடன் சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு வேளாளர் பேரவை மற்றும் சில அமைப்புகள் பேசி வருகின்றன.

இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சி 4 தொகுதியில் போட்டியிடுகிறது. மயிலாடுதுறை- ஜவாஹிருல்லா, மத்திய சென்னை- எஸ்.ஹைதர்அலி, பொள்ளாச்சி-உமர், ராமநாதபுரம்-சலீமுல்லா கான் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இன்னும் சில தொகுதிகளில் போட்டியிடுவது பற்றி பின்னர் அறிவிப்போம்.

புதிய தமிழகம் கட்சி தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும்.

இந்திய தேசிய லீக் 3 தொகுதியில் போட்டியிடுகிறது. திருச்சி, தஞ்சை, கோவை அல்லது தேனி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த கூட்டணியின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.

இந்த அணியில் விரைவில் இன்னும் பலர் சேருவார்கள்.

கேள்வி:- தி.மு.க., அ.தி. மு.க. போன்ற பெரிய கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி விட்டு புதிய கூட்டணியை உருவாக்கியது ஏன்?

ஜவாஹிருல்லா பதில்:- தி.மு.க.வுடன் 1995-ம் ஆண்டு முதல் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டோம். இந்த தேர்தலில் போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் சிறுபான்மையினரான எங்கள் கட்சி தனி முத்திரை பதித்து விடும் என்று கருதி 1 தொகுதியை கொடுத்து ஓரம் கட்டப்பார்த்தார்கள்.

அதுவும் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். தி.மு.க. காலம் காலமாக இப்படித்தான் செய்து வருகிறது.

சொந்த சின்னத்தில் போட்டியிட விரும்பினோம். அதை அவர்கள் ஏற்க வில்லை. இப்போது தி.மு.க. 21 தொகுதியில் அல்ல 22 தொகுதியில் போட்டியிடுகிறது. காதர்மொய்தீன் முஸ்லிம் லீக் கட்சியும் தி.மு.க. சின்னத்திலேயே நிற்கிறது. அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்த வில்லை.

கேள்வி:- டாக்டர் ராமதாஸ் உங்களிடம் அ.தி.மு.க. வுக்கு ஆதரவு கேட்டாரா?

பதில்:- டாக்டர் ராமதாசுடன் நீண்ட காலமாக பழகியுள்ளேன். அவரது கோட்பாடு எனக்கு பிடிக்கும். அ.தி.மு.க. அணிக்கு ஆதரவு தர வேண்டும் என அவர் கேட்டார். நான் எங்கள் நிலைப்பாட்டை எடுத்துக்கூறினேன்.

கேள்வி:- எல்லாத்தொகுதிகளிலும் போட்டியிடுவீர்களா?

பதில்:- 40 தொகுதிகளிலும் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

கேள்வி:- தேர்தல் பிரசாரம் எப்போது தொடங்குவீர்கள்?

பதில்:- நாளை தொடங்குகிறோம்.

கேள்வி:- எதை மையமாக வைத்து பிரசாரம் செய்வீர்கள்?

கிருஷ்ணசாமி பதில்:- இலங்கை தமிழர் பிரச்சினையை தி.மு.க., அ.தி.மு.க. கைவிட்டு விட்டது. இலங்கை பிரச்சினையை எடுத்து வைப்போம். வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பது போல தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. கடந்த 40 வருடத்தில் தென் மாவட்டங்களில் கல்வி, மருத்துவம், தொழிற்சாலை போன்றவை உருவாக்கப்பட வில்லை.

கேள்வி:- எந்த சின்னத்தில் போட்டியிடுவீர்கள்?

பதில்:- எல்லோரும் ஒரே சின்னத்தில் போட்டியிட விரும்புகிறோம்

Sunday, April 12, 2009

வெற்றியை நோக்கி முஸ்லிம் லீக்!

வேலூர் நாடாளும‌ன்ற‌ தொகுதி இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் க‌ட்சியின் வேட்பாளராக‌ காயிதெமில்ல‌த் பேர‌வையின் உல‌க ஒருங்கிணைப்பாள‌ரும், அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வையின் த‌லைவ‌ருமான‌ முத்துப்பேட்டை எம். அப்துல் ர‌ஹ்மான் அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ளார்.
முத்துப்பேட்டை எம். அப்துல் ர‌ஹ்மான் ப‌ள்ளிக்க‌ல்வியை ஆக்கூர் ஓரிய‌ண்ட‌ல் உய‌ர்நிலைப்ப‌ள்ளியில் ப‌டித்தார். ப‌ள்ளிப்ப‌டிப்பின் போதே மாநில‌ அள‌விலான‌ பேச்சுப் போட்டிக‌ளில் வெற்றி பெற்றுள்ளார். பின்னர் ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரியில் க‌ல்லூரிப் ப‌டிப்பினைப் ப‌யின்றார்.



உத‌ய‌சூரிய‌ன் சின்ன‌த்தில் போட்டியிடுகிறார்!


நக்கீரன் சர்வே!

இந்த நிலையில் நக்கீரன் வார இதழ் (ஏப்- 11- 2009) முடிவின் படி

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முத்துப்பேட்டை

எம். அப்துல்ர‌ஹ்மான் அவர்கள் 48% ஓட்டுக்களைப்பெற்று வெற்றிப் பெறுவார்!

இன்ஷா அல்லாஹ்(இறைவன் நாடினால்)


தமிழ்மணத்தில் வாக்களிக்க அழுத்தவும்!

உன்மையில் முத்துப்பேட்டை எம். அப்துல் ர‌ஹ்மான்

அவர்களை வேட்பாளராக பெற்ற வேலுர் தொகுதிவாசிகள்

கொடுத்துவைத்தவர்கள்....!

Tuesday, April 7, 2009

தி.மு.க விற்கு தார்மீக ஆதரவு

கோவையில் நடைபெற்ற TNTJ வின் மாநிலப் பொதுக்குழு!
தி.மு.க விற்கு தார்மீக ஆதரவு
காங்கிரஸ் போட்டியிடும் 15 இடங்களில் காங்கிரஸிற்கு ஆதரவு இல்லை!
பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்!


05 :04:2009 அன்று கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் முஸ்லிம்களுக்குத் தனி இடஒதுக்கீடு அளிக்கும் ஆணையம் அமைத்ததற்காக அதிமுக கூட்டணியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரித்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் ஜெயலலிதா அமைத்த ஆணையம் பயனற்றுப் போனது.

திமுக தலைமையில் ஆட்சி அமைந்த பின்னர் தனி இடஒதுக்கீடு கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு வீரியமிக்க போராட்டங்களை நடத்தியது. இதன் விளைவாக திமுக அரசு முஸ்லிம்களுக்கு மூனறை சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியது. இது போதுமானதாக இல்லாவிட்டாலும் இந்த அளவிற்காவது கிடைத்ததே என்பதற்காக எதிர்வரும் தேர்தலில் திமுகவை ஆதரிப்பது என்று முடிவு செய்து முதல்வரிடம் எழுத்து மூலமான ஆதரவை டிஎன்டிஜே தெரிவித்தது.


ஆனாலும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஏராளமான வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதை எதிர்த்தும் டிஎன்டிஜே பல்வேறு போராட்டங்களை நடத்தியது. ஆரம்பத்தில் இதை அலட்சியம் செய்த முதல்வர் முஸ்லிம் மக்களின் கடும் அதிர்ப்தியைக் கண்ட பின் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதை ஒப்புக் கொண்டு சரி செய்வதாக உறுதியளித்தார். இதன் பின்னர் வழங்கப்பட்ட வேலை வாய்ப்புகளிலும் உயர் கல்வியிலும் மூனறை சதவீதம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் கடந்த ஆறு மாதங்களில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி சரி செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்ற கோரிக்கையையும் முதல்வர் கண்டு கொள்ளவில்லை. எனவே இடஒதுக்கீடு சட்டம் அமுலுக்கு வந்த பின் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி சரி செய்யப்படாத காரணத்தால் தீவிரமான ஆதரவை திமுகவிற்கு அளிக்க இயலாது. அதே சமயம் இடஒதுக்கீட்டை தற்சமயம் நடைமுறைப்படுத்தியதால் திமுகவிற்கு தார்மீக ஆதரவளிப்பது என்று தீர்மானிக்கிறோம்.

1. கடந்த காலத்தில் செய்யப்பட்ட அநீதியைச் சரி செய்வதாக காலக்கெடுவுடன் எழுத்து மூலமான உறுதிமொழி அளித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில்லறைப் பிரச்சனைகளுக்காக முஸலிம்களின் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்கினால் திமுகவை தீவிரமாக ஆதரிப்பது என்று பொதுக்குழு தீர்மானிக்கிறது.

2. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கடந்த தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதாக தெரிவித்தது. ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் முழுமையாக இருந்தும், இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் கட்சிகள் துணைக்கு நின்றும் முஸ்லிம்களுக்கு இடுஒதுக்கீடு அளிக்க மறுத்து முஸ்லிம்களை ஏமாற்றியது. அமெரிக்கா உடன் அடிமை சாசனம் செய்ய தீவிர முயற்சி செய்த மத்திய அரசு முஸ்லிம்களை வஞ்சித்து விட்டது. இப்போதய தேர்தல் அறிக்கையில் கூட முஸ்லிம்களின் இடஒதுக்கீடு குறித்து எதையும் குறிப்பிடவில்லை. அமெரிக்க அனுசக்தி ஒப்பந்தம், இஸ்ரேலுடன் இராணுவ உறவு, கலவரத் தடுப்பு காவல்படை அமைப்பதாக அளித்த வாக்கை மீறியது. பாபர் மசூதிக்கு நியாயம் வழங்க மறுத்தது என்று அடுக்கடுக்கான அநியாயங்களைச் செய்து வந்ததுடன் கடைசியாக இடஒதுக்கீடு விஷயத்திலும் அநீதி செய்துள்ளது. எனவே வரும் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 15 தொகுதிகளிலும் காங்கிரசிற்கு ஆதரவு அளிப்பதில்லை என்று பொதுக்குழு தீர்மானிக்கிறது.

3. விடுதலைச் சிறுத்தை அமைப்பினர் முஸ்லிம் செல்வந்தர்களையும் வணிகர்களையும் நில உரிமையாளர்களையும் மிரட்டி அராஜகம் செய்து வருவதாலும் அவர்களை திருமாவளவன் அடக்கி வைக்காத காரணத்தாலும் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் விடுதலை சிறுத்தைகள் மீது கடும் கோபத்தில் உள்ளனர். எனவே விடுதலைச் சிறுத்தைகளை ஆதரிப்பதில்லை என்றும் இப்பொதுக்குழுவில் தீர்மானிக்கப்படுகிறது.

4. அதிமுகவைப் பொறுத்தவைர முஸ்லிம்களின் எதிரியாக பார்க்கப்பட்டாலும் இடஒதுக்கீடு ஆணையம் அமைத்ததால் அதிமுகவிற்கு முஸ்லிம்கள் வாக்களித்தனர். திமுகவின் கோட்டையான சென்னையில் அதிக இடங்களை அதிமுக பெற்றதற்கும் பலமான எதிர்க்கட்சியாக அமைந்ததற்கும் முஸ்லிம்களே காரணம். இந்த விசுவாசம் இல்லாமல் முஸ்லிம்களின் முதுகில் குத்தும் வகையில் பயங்கரவாதி மோடியை அழைத்து விருந்தளித்து முஸ்லிம்களின் ஆதரவு தேவையில்லை என்று சொல்லாமல் சொன்ன ஜெயலலிதாவையும் அவரது கூட்டணியையும் ஆதரிப்பதில்லை.

5. பமாக தொடர்ந்து முஸ்லிம் விரோதியாகச் செயல்படுவதாலும் இலங்கைப் பிரச்சனையை மையமாக வைத்து முஸ்லிம்களுக்கு தீவிரவாதிப் பட்டம் சுமத்தியதாலும் கடந்த தேர்தலிலும் இந்த தேர்தலிலும் முஸ்லிம்களுக்கு ஒரு இடம் கூட தராத காரணத்தினாலும் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு விஷயத்தில் புதுவையில் உள் வேளை செய்த காரணத்தினாலும் பமகாவை ஆதரிப்பதில்லை என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

6. விஜயகாந்தைப் பொறுத்த வரை அவர் ஆளும் கட்சியாகவோ எதிர்க் கட்சியாகவோ இருக்கவில்லை. அவரை எடைபோட அவர் நடித்த சினிமாக்கள் தான் உள்ளன. அவரது சினிமாக்களில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கின்ற போக்கு தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுவதால் அவரையும் அவரது கட்சியையும் ஆதரிப்பதில்லை என்று பொதுக்குழு தீர்மானிக்கிறது.

7. புதுவையில் மட்டும் புதுவை மாநில அரசு இடஒதுக்கீட்டிற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதாலும் ஆணையம் அமைத்ததாலும் விரைவில் இடஒதுக்கீட்டை அளிப்பதாக முதல்வர் நேரடியாக புதுவை நிர்வாகிகளிடம் வந்து வாக்குறுதி அளித்ததாலும் புதுவையில் மட்டும் காங்கிரசிற்கு ஆதரவு அளிப்பதாக இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

8. மனித நேய மக்கள் கட்சி எங்கு நின்று போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக அவர்களின் சமுதாய துரோகங்களை அடையாளம் காட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் களம் இறங்கி அவர்களை தோல்வியை தழுவச் செய்யும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

திமுக போட்டியிடாத தொகுதிகளில் காங்கிரஸ்-அதிமுக அல்லது காங்கிரஸ்-பாமக அல்லது காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் அல்லது காங்கிரஸ்-மதிமுக, அல்லது விடுதலைசிறுத்தைகள்-பாமக போட்டியிடும் போது இரண்டு வேட்பாளர்களும் சம நிலையில் இருந்தால் யாரையும் ஆதரிக்காமல் இருக்க வேண்டும். இருவரில் ஒருவரை விட மற்றவர் முஸ்லிம்களுக்குப் பயன்படுவார் என்று மாவட்ட நிர்வாகம் தக்ககாரணங்களுடன் தெரிவித்தால் மாநில நிர்வாகம் பரிசீலித்து அதனை ஏற்றுக் கொள்ளும்.

நன்றி Tntj.net

Sunday, April 5, 2009

முஸ்லிம்கள் ஓட்டு எங்களுக்கு தேவை இல்லை தி.மு.க சூசகம்!

தி மு க 21இடங்களில் போட்டியிடுகிறது அனைத்து வேட்பாளர்களையும் அறிவித்தும் விட்டது!


ஆனால்,முஸ்லிம் சமுதாயத்திலிருந்து ஒரு வேட்பாளரைக்கூட நிறுத்தவில்லை!!

கட்சியில்...
குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள்,
கொலை,
வன்முறை,
கட்டப்பஞ்சாயத்து

இப்படி பல தொடர்ப்பு இருப்பதாக கூறப்படுவர்களுக்கூட பேட்பாளராக களத்தில் நிறுத்தியுள்ளது!

ஆனால்,தி மு க விற்கு ஆரம்பம் முதல் இது நாள் வரை ஆதரவாகவும் வாக்கு வங்கியாகவும் இருக்கும் முஸ்லிம் சமூதாயத்திற்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டு பாராளுமன்றத்திற்கு செல்ல தகுதி இல்லையா...?


அந்த தகுதியும் திறமையும் முஸ்லிம்களுக்கு இல்லை என்பதுப்போல்தான் உள்ளது அதன் வேட்பாளர் பட்டியல்!!

இதன் மூலம் ஒரு செய்தியையும் முஸ்லிம் சமூதாயத்திற்கு சூசகமாக சொல்லியிருக்கிறது நாங்கள் உங்களை வேட்பாளராக்கூட நிறுத்த மாட்டோம் உங்கள் ஓட்டு எங்களுக்கு தேவையில்லை...!

நல்ல டீல் தான் இது...!

நமது வாக்கை சிந்தாமல் சிதறாமல்

"உதய சூரிய"னுக்கு குத்தாமல் இருப்போம்.....!

பேட்பாளர் பட்டியல் மாற்றப்பட்டு நமது விகிச்சார அடிப்படையில் 2சீட் வேண்டும்.

அல்லது, குறைந்த பட்சம் 1சீட்டாவது நிறுத்த வேண்டும்.....
அது வரை நமது "உதய சூரியன்" புறக்கணிப்பு தொடரும்......

தமிழ்மணத்தில் வாக்களிக்க அழுத்தவும்!

முஸ்லிம் இல்லாத வேட்பாளர்கள் பட்டியல்...


1.தென் சென்னை - ஆர்.எஸ்.பாரதி.

2.வட சென்னை - டி.கே.எஸ். இளங்கோவன்

3.மத்திய சென்னை- தயாநிதி மாறன்.

4.திருவள்ளூர் (தனி)- காயத்ரி ஸ்ரீதரன்.

5.ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு.

6.கள்ளக்குறிச்சி - ஆதிசங்கர்.

7.கிருஷ்ணகிரி - சுகவனம்.

8.தர்மபுரி - தாமரைச்செல்வன்.

9.அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்.

10.திருவண்ணாமலை - வேணுகோபால்.

11.பொள்ளாச்சி - சண்முகசுந்தரம்.

12.நாகப்பட்டனம் (தனி)- ஏ.கே.எஸ்.விஜயன்.

13.கரூர் - கே.சி.பழனிச்சாமி.

14.பெரம்பலூர் - நெப்போலியன்.

15.நீலகிரி (தனி) - ராசா.

16.தஞ்சாவூர் - பழனிமாணிக்கம்.

17.மதுரை - மு.க.அழகிரி.

18.ராமநாதபுரம் - ஜே.கே.ரித்தீஷ்.

19.தூத்துக்குடி - ஜெயதுரை.

20.நாமக்கல் - காந்தி செல்வன்.

21.கன்னியாகுமரி - ஹெலன் டேவிட்சன்.


அன்பு வாசகர்களே!

உங்கள் நிலை என்ன...?

தி மு க வின் இந்த முஸ்லிம் புறக்கணிப்பை ஆதரிக்கிறீர்களா?
மனம் திறந்து எழுதுங்கள்...!

உங்கள் கருத்துக்களை பதிய இங்கே அழுத்தவும்!

Thursday, April 2, 2009

நீங்கள் எதிர் வருகின்ற கோடை விடுமுறையை எப்படிக் கழிக்கலாம்

நீங்கள் எதிர் வருகின்ற கோடை விடுமுறையை எப்படிக் கழிக்கலாம் என வெகு ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருப்பது தெரிகிறது. கடின உழைப்புக்குப் பின்பு கட்டாயம் ஓய்வு தேவை. ஆனால் அதே நேரத்தில், ஒரு பொன்னான வாய்ப்பாக வருகின்ற ஒரு விடுமுறைக் கால அவகாசத்தை பெரும்பாலான மாணவர்கள் வீணடித்து விடுகின்ற நிலையையும் நாம் கண்டு வருகிறோம்.

எனவே உங்களுக்கென்று சில ஆலோசனைகள்:

பெற்றோர்களிடம்!

உங்கள் பெற்றோர் உங்களின் பள்ளிக்கூட நாட்களில் வீட்டுக்குத் தேவையான எந்த வேலையையும் உங்களிடம் செய்யச் சொல்லியிருக்க மாட்டார்கள். “பிள்ளைகள் படிக்கிறார்கள். அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று உங்களை விட்டிருப்பார்கள். இப்போது ஏதேனும் சில வேலைகளை உங்களிடம் ஒப்படைத்தால் முகம் சுளிக்காமல் செய்து கொடுங்கள். அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். அது மட்டும் அல்ல. நீங்கள் செய்து கொடுக்கும் வேலைகள் உங்கள் அனுபவமாக உங்களுக்கு பின்னர் உதவும்.

தொழுகை

உங்களை பள்ளிவாசலோடு இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர்கள் இரண்டு அல்லது மூன்று பேர்களை சேர்த்துக் கொள்ளுங்கள். ஆலோசனை செய்து கொள்ளுங்கள். மற்ற மாணவர்களை பள்ளிவாசலுடன் இணைத்து வைப்பது குறித்து திட்டமிடுங்கள். உற்சாகத்துடன் களம் இறங்குங்கள். இதன் இன்பமே அலாதியானது. உங்கள் எதிர்காலத்தையே மாற்றி அமைத்திட வல்லது உங்களது இந்த முயற்சி. இது அனுபவம் சொல்லும் உண்மை. தினமும் காலையில் குர் ஆன் ஓதிடத் தவறாதீர்கள். தெரியாவிட்டால் கற்றுக் கொள்ள இந்தக் கோடை ஒரு வாய்ப்பு.

டீவி

டீவி என்பது இறைவனின் அருட்கொடைகளில் ஒன்று தான். ஆனால் அது “கெடுக்கப்பட்டு விட்ட” ஒரு சாதனமாகத் திகழ்கிறது. இது உங்கள் பொன்னான நேரத்தைச் சூரையாடி விடுகிறது. உங்கள் மனத்தைக் கெடுத்து விடுகிறது. கண் பார்வைக்கும் வேட்டு வைத்து விடுகிறது. எனவே அனுமதிக்கப் பட்ட நிகழ்ச்சிகளை மட்டும் பார்ப்பது என்று வைத்துக் கொள்ளுங்கள். அவைகளையும் எப்போது பார்க்கலாம், எவ்வளவு நேரம் பார்க்கலாம் என்பதற்கு உங்களுக்கு நீங்களே கட்டுப் பாடுகளை விதித்துக் கொள்ளுங்கள்.

நேரக் கட்டுப்பாடு

இயல்பாகவே கோடையில் விளையாடுவதற்கு ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்கள் கூடி விடுவீர்கள். நான் சொல்வது ஒன்றே ஒன்று தான். காலையில் விளையாடச் செல்கிறீர்களா? ளுஹர் தொழுகைக்கு பாங்கு சத்தம் கேட்டால், “டேய், வாங்கடா, தொழுகைக்குப் போவோம்” என்று நீங்கள் புறப்பட்டு விட்டால் மற்றவர்களும் உங்களோடு சேர்ந்து தொழுகைக்கு வந்து விடுவார்கள். அது போல மற்ற தொழுகைகளுக்கும் அப்படியே செய்யுங்கள். இரவு அதிக நேரம் கண் விழிக்க வேண்டாம். இதனால் மற்ற வேளை தொழுகைகளை ஒழுங்காகத் தொழும் மாணவர்கள் கூட ஃபஜ்ர் தொழுகையை விட்டு விடுகிறார்கள்.

கோடை வாசத் தலங்கள்

நண்பர்களுடன் வெளியூர் செல்கிறீர்களா? தாராளமாகச் செல்லலாம். ஆனால் - எங்கு இருப்பினும் - தொழுகையை தவற விட்டு விடக் கூடாது. ளுஹர்- அஸர் இரண்டையும் சேர்த்துத் தொழுங்கள். மஃக்ரிப்-இஷாவையும் சேர்த்துத் தொழுங்கள். ஆனால் களா மட்டும் வேண்டவே வேண்டாம். எங்கே தங்கினாலும் “அவூது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா ஃகலக்!” என்று ஓதிக் கொள்ளுங்கள். உங்களுக்கு எந்தத் தீங்கும் வந்தடையாது. உங்கள் குழுவில் நல்ல நணபர்களை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். கெட்ட மழக்கம் உள்ளவர்கள் அதில் இடம் பெற்றிருந்தால் பயணத்தைத் தவிர்த்திடப் பாருங்கள். இல்லையேல் - பயணத்தில் சற்று எச்சரிக்கை தேவை!.

சுய முன்னேற்றம்

கோடை என்பது பொழுது போக்குவதற்கு மட்டும் அன்று. அதனை முறைப் படி பயன் படுத்திக் கொள்வதும் நன்றே. இந்த விடுமுறையில் உங்கள் ஆளுமைத் திறன் குறித்து கவனம் செலுத்திட ஒரு நல்ல வாய்ப்பு. உங்கள் தனிப்பட்ட திறமைகளைக் கண்டுபிடியுங்கள் (discover yourself). இதற்கு நீங்கள் சுய முன்னேற்ற நூல்களில் நல்லதொரு நூலை வாங்கிப் படிக்கலாம். நீங்கள் எப்படிப் பட்டவர்? பொருள்களை ஆய்வதில் உங்களுக்கு ஆர்வமா, கருத்துக்களை சிந்திப்பதில் உங்களுக்கு ஆர்வமா, அல்லது மனிதர்களுடன் பழகுவதில் உங்களுக்கு ஆர்வமா? இம்மூன்றில் எது உங்களுக்கு மிகைத்திருக்கிறது என்பதே உங்கள் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கும். ஆங்கில உரையாடல் திறனை வளர்த்துக் கொள்ளவும் கோடை ஒரு வாய்ப்பு. நாளிதழ்களை தினமும் படியுங்கள். பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
திறன் பயிற்சி

என்ன பட்டம் படித்தாலும் உங்களை தனியொரு உயரத்துக்கு இட்டுச் செல்வது உங்களிடம் உள்ள தனிப்பட்ட திறமைகளே! கார் ஓட்டுவது, நீச்சல், போன்ற திறன்களைக் கற்கலாம். தட்டச்சு, கம்ப்யூட்டர் மென்பொருள் (software)மற்றும் வன்பொருள் (hardware) - போன்றவற்றைக் கற்கலாம்.
எலக்ட்ரிகல் வயரிங், மோட்டார் பம்பு வேலை, ஆட்டோமொபைல் பழுது பார்த்தல், மொபைல் போன் பழுது பார்த்தல் என்று என்னென்னவெல்லாம் கற்க உங்களுக்குப் பிடிக்கிறதோ அவற்றுள் ஒன்றிரண்டை கற்க நேரம் ஒதுக்குங்கள். இவை பின்னர் உங்களுக்கு “தன் கையே தனக்குதவி” போல் பயன்படும்.

அல்லது பகுதி நேர வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தால் விடாதீர்கள். அது உங்கள் வாழ்க்கையில் வேறு எவரும் கற்றுத் தராத, எங்கும் கற்றுக் கொள்ள இயலாத அனுபவங்களைக் கற்றுத்தரும்.

வெற்றியாளர்களை சந்தியுங்கள்

உங்கள் ஊரிலுள்ள அல்லது அருகிலுள்ள - வெற்றியாளர்களைச் சென்று சந்தியுங்கள். ஒரு குழுவாக அவர்களிடம் சென்று கலந்துரையாடுங்கள். அவர்களின் வெற்றி ரகசியத்தை அவர் வாயாலேயே கேட்டு அதில் நீங்கள் கற்க வேண்டியதைக் கற்றுக் கொள்ளுங்கள். இன்னும் இறையச்சம் மிக்க பெரியவர்களையும் சென்று சந்தியுங்கள். அவர்களிடம் உபதேசம் பெறுங்கள். இத்தகைய சந்திப்ப்பு உங்கள் இறை நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

ப்ளஸ் டூ மாணவர்களா நீங்கள்?

கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் விடுமுறை உங்களுக்கு! என்ன செய்யப் போகிறீர்கள்? அடுத்து என்ன படிப்பதாக முடிவு செய்துள்ளீர்கள்? கல்லூரி மாணவர்களை சந்தித்து விபரம் சேகரியுங்கள். உங்கள் கல்லூரிப் படிப்பை முடிவு செய்வது நீங்களா அல்லது உங்கள் பெற்றோர்களா? ப்ளஸ் டூ வில் ஃப்ர்ஸ்ட் க்ரூப் எடுத்தவரா நீங்கள்? எவ்வளவு மதிப்பெண் வரும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? பொறியியல் படிப்புக்கு திட்டமிடுகிறீர்களா? மருத்துவம் படிக்க விருப்பமா? கல்லூரிப் படிப்பைத் தேர்வு செய்திடு முன்பு - முதலில் உங்களுக்கு இரண்டு கேள்விகள்: 1. நீங்கள் தேர்வு செய்திடும் கல்வியைப் படித்திட உங்களுக்குத் தேவையான (aptitude) திறமை இருக்கிறதா? 2. உங்களுக்கே அதில் ஆர்வம் (interest) இருக்கிறதா?
பெற்றோர் வற்புறுத்துகிறார்கள் என்பதற்காக உங்களுக்கே ஆர்வம் இல்லாத படிப்பைத் தேர்வு செய்திட வேண்டாம். அழகான முறையில் பெற்றோர்களிடம் உங்கள் விருப்பமின்மையைச் சொல்லி விடுங்கள். பிறகு உங்களுக்கு விருப்பமான துறையில் சேர்வதற்கு கலந்து பேசி முடிவெடுங்கள்.

மதிப்பெண் குறைவாகத் தான் வருமா? கவலையை விடுங்கள்! லட்சக் கணக்கில் பணம் கட்டி பொறியியல்/ மருத்துவம் சேர்ந்து அங்கே “போராடிக்கொண்டிருப்பதை விட” ஏனைய துறைகள் குறித்து சிந்தியுங்கள். கல்வி கடல் போன்றது. அதில் உங்களுக்குப் பிடித்தமான “முத்து” ஒன்றை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

இறுதியாக…

இந்த கோடைக் கால நேரத்தை வீணடித்து விடாதீர்கள். கெட்ட நண்பர்களை இனம் கண்டு ஒதுக்கி விடப் பாருங்கள், கெட்ட பேச்சுக்களைத் தவிர்த்திடுங்கள். கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகாமல் உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்.

துஆக்களுடன்

உங்கள் கவுன்சலர்மன்சூர்

Wednesday, April 1, 2009

என்டிடிவி கருத்துக் கணிப்பு: 'விஜய்காந்த் எபெக்ட்'-திமுகவுக்கு சரிவு..அதிமுகவுக்கு முழு லாபமில்லை


என்டிடிவி கருத்துக் கணிப்பு: 'விஜய்காந்த் எபெக்ட்'-திமுகவுக்கு சரிவு..அதிமுகவுக்கு முழு லாபமில்லை


டெல்லி: தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கு எதிரான வாக்குகள் அதிமுகவுக்குச் செல்வதற்கு பதிலாக விஜய்காந்த் பக்கம் போய்க் கொண்டுள்ளதாகவும் இதனால் இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு முழு வெற்றி கிடைக்காது என்றும் என்டிடிவி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் சுமார் 50,000 பேரிடம் என்டிடிவி கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. அதை அந்தத் தொலைக்காட்சியி்ன் தலைவர் பிரணாய் ராய் மற்றும் கருத்துக் கணிப்பை ஒருங்கிணைத்த தோராப் சுபாரிவாலா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

இதன்படி கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி (காங்கிரஸ், பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) மொத்தம் 57 சதவீத வாக்குகளைப் பெற்று தமிழகத்தில் 39 தொகுதிகளையும் கைப்பற்றியது.

அதிமுக-பாஜக கூட்டணி 35 சதவீத வாக்குகளைப் பெற்றது. அந்தத் தேர்தலில் விஜய்காந்த்தின் தேமுதிக களத்தில் இல்லை.

இந் நிலையில் திமுக கூட்டணியில் இருந்த மதிமுக, பாமக, இடதுசாரிகள் ஆகியோர் இப்போது அதிமுக கூட்டணிக்குச் சென்றுவிட்டன. திமுகவுடன் காங்கிரஸ் மட்டுமே அணி அமைத்துள்ளது. தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது.

இந் நிலையில் என்டிடிவி நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ள முடிவுகள்:

பாமக, மதிமுக, இடதுசாரிகள் போய்விட்டதால் திமுக கூட்டணிக்கு 6 சதவீத வாக்குகள் குறையும். மேலும் கடந்த முறை திமுக கூட்டணிக்கு வாக்களித்தவர்களில் 10 சதவீதம் பேர் விஜய்காந்துக்கு வாக்களிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் மொத்தத்தில் திமுக கூட்டணி இழக்கும் வாக்குகள் 16 சதவீதமாகும். இதனால் கடந்த தேர்தலில் 57 வாக்குகள் பெற்ற திமுக கூட்டணி இம்முறை 41 சதவீத வாக்குகளையே பெறும்.

அதே போல மதிமுக, பாமக, இடதுசாரிகள் இணைந்ததால் அதிமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 6 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் கடந்த முறை அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தவர்களில் 2 சதவீதம் பேர் விஜய்காந்துக்கு வாக்களிக்கப் போவதாக கூறியுள்ளனர். இதனால் அதிமுகவின் வாக்கு சதவீதத்தில் 2 சதவீதம் சரிவும் ஏற்பட்டுள்ளது.

இதனால் மொத்தத்தில் அதிமுக கூட்டணிக்கு 4 சதவீத வாக்குகளே கூடுதலாகக் கிடைக்கவுள்ளன. இதன் மூலம் அதிமுக கூட்டணிக்கு மொத்தம் 39 சதவீத வாக்குகள் கிடைக்கவுள்ளன.

அதாவது திமுக கூட்டணிக்கு 41 சதவீதமும் அதிமுக கூட்டணிக்கு 39 சதவீதமும் வாக்குகள் கிடைக்கும். இதன்மூலம் திமுக கூட்டணி 20 முதல் 22 இடங்களிலும் அதிமுக கூட்டணி 18 முதல் 20 இடங்களிலும் வெல்லும் என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் விஜய்காந்துக்கு 12 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. ஆனாலும் அவரது கட்சிக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைகாது.

வழக்கமாக திமுகவுக்கு எதிரான வாக்குகள் அப்படியே அதிமுகவுக்கும் அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் அப்படியே திமுகவுக்கும் செல்வதை விஜய்காந்த் தடுக்கிறார். இதன்மூலம் மத்திய காங்கிரஸ் அரசு, மாநில திமுக அரசுக்கு எதிரான வாக்குகள் இம்முறை ஜெயலிலதாவை முழுமையாக அடைவதை தேமுதிக தடுக்கிறது.

இதனால் அதிமுகவுக்குக் கிடைக்க வேண்டிய பெரும் வெற்றி தடைபடுகிறது.

அதே நேரத்தில் விஜய்காந்த் திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் அந்தக் கூட்டணியே அனைத்து 39 இடங்களிலும் வெல்லும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.