Friday, May 1, 2009

வேலூர் நாடாளுமன்ற தொகுதி முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரகுமானுக்கு தொகுதி முழுவதும் வரவேற்பு


வேலூர் நாடாளுமன்ற தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரகுமான் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் வாக்காளர்கள் மிகுந்த எழுச்சியுடன் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தி.மு.க. பொருளாளரும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலின் வேலூர் கோட்டை மைதானத்தில் பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
இந்திய யூனியன் முஸ் லிம் லீக் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான இ.அஹமது வேலூர் தொகுதிக்கு வருகை தர இருக்கிறார்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க தலைமையி லான கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு வேலூர் தொகுதி ஒதுக்கப் பட்டுள்ளது.
அத்தொகுதியில் போட் டியிடும் எம். அப்துல் ரகுமான் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாட்றாம்பள்ளி ஒன்றியத்திலும், 27ம் தேதி திங்கள் கிழமை ஆலங்காயம் ஒன்றியம், உதயேந்திரம், பேரூர், பேர்ணாம்பட்டு ஒன்றியம் ஆகிய இடங்களிலும் வாக்கு சேகரித்தார்.

அன்று இரவு வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்டமான தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் தி.மு.க பொருளாளரும் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.

மத்திய மாநில அரசுகள் இதுவரை செய்துள்ள சாதனைகளையும் அ.இ.அ. தி.மு.க. கூட்டணி இலங்கை தமிழர் பிரச்சி னையில் நடத்துகின்ற நாடகத்தையும் சுட்டிக் காட்டி உரையாற்றிய மு.க.ஸ்டாலின் அப்துல் ரகுமானை வெற்றி பெற செய்யுமாறு வாக்காள பெருமக்களை கேட்டுக் கொண்டார். 28ம் தேதி வேலூர் நகர் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வேட்பாளர் அப்துல் ரகுமான் வாக்கு சேகரித்தார். பொது மக்கள் இல்லங்களிலிருந்து வெளி யில் வந்து மிகுந்த உற்சாகத் துடன் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அவருடன் வேலூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன், தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் முஹம்மது சகி, மேயர் கார்த்திகேயன், துணை மேயர் சாதிக், நகரச் செயலாளர் ராமலிங்கம், நகர அவைத் தலைவர் விஜய சங்கர், பொருளாளர் சந்துரு, காங்கிரஸ் கட்சி யின் சந்திர பிரகாஷ், சீனி வாசன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள்.
வேலூர் கிழக்கு மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் கே.எல். முஹம் மது ஹனீப், செயலாளர் கே. சான் பாஷா, பொருளா ளர் அப்துல் அஜீஸ். வேலூர் மாநகர முஸ்லிம் லீக் தலைவர் அய்யூப் பாஷா, செயலாளர் குல்சார், பொருளாளர் பாபு மற்றும் மாமன்ற முஸ்லிம் லீக் உறுப்பினர் கள், நிர்வாகிகள், இளஞர் அணி, மாணவர் அணியின் பொருப்பாளர்கள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

துரைமுருகன் தலைமையில் கே.வி. குப்பத்தில் வாக்கு சேகரிப்பு
29ம் தேதி புதன் கிழமை கே.வி.குப்பம் தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர் துரைமுருகன் உடன் சென்று தொகுதி முழுவதும் அவ ருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.

30.4.09 குடியாத்தம் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தார். மே 1ம் தேதி வேலூர் ஒன்றியத்திலும், 2ம் தேதி ஆலங்காயம் ஒன்றியத்திலும் பேரூர் பகுதியிலும், 3ம் தேதி திருப்பத்தூர் ஒன்றியத்திலும், 4ம் தேதி மாதனூர் ஒன்றியத்திலும், 5ம் தேதி அணைக் கட்டு ஒன்றியத்திலும், 6ம் தேதி ஒடுக்கத்தூர், பள்ளி கொண்டா, பேரூர், கணியம்பாடி பகுதியிலும் வாக்கு சேகரிக்கிறார்.

5 மற்றும் 6 தேதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான இ. அஹமது வேலூர் தொகுதிக்கு வருகை தந்து அப்துல் ரகுமானுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

No comments:

Post a Comment