Thursday, April 30, 2009

முத்துப்பேட்டை அருகே பரபரப்பு: தர்கா- பள்ளிவாசலை சூறையாடிய வாலிபர்

முத்துப்பேட்டை, ஏப்.18-

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே நாச்சிகுளத்தில் ஞானாசாகிப் ஒலியுல்லா தர்கா உள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் தொழுகை நடைபெற்றது. ல அப்போது அப்பகுதியை சேர்ந்த முகமது பாரூக் (25) என்ற வாலிபர் வந்தார். தர்காவில் உள்ள சமாதியை கடப்பாரையால் அடித்து சேதப்படுத்தினார்.

பின்னர் அருகேயுள்ள அம்மா பள்ளிவாசலுக்கு சென்று காம்பவுண்டு சுவர் கீரில் கேட் ஆகியவற்றையும் சேதப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து ஜமாத் தலைவர் பசூலூருதீன், முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று தர்கா பள்ளிவாசலை சேதப்படுத்திய முகமது பாரூக்கை கைது செய்தனர்.

விசாரணையில் முகமது பாரூக், மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தர்கா- பள்ளிவாசல் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment