Friday, September 4, 2009

பாஸ்பரஸ் குண்டு வீசப்பட்டதால் ஈராக்கில் ஒழுங்கற்ற உடலமைப்புடன் பிறக்கும் குழுந்தைகள்


ஸ்கை நியுஸ் விடியோ

இராக்கின் பாலூஜா என்ற நகரில் பிறக்கும் குழந்தைகளில் பலர் ஒழுங்கற்ற உடலமைப்புடன் பிறப்பதாக ஸ்கை நியூஸ் நிறுவனம் காணொளி செய்தி (video news) வெளியிட்டுள்ளது.
அந்த பிஞ்சுக்குழந்தைகளை காணும் காட்சி பார்ப்பவர்களை உறைய வைக்கிறது. இதற்க்கு சரியான காரணம் என்ன என்று அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லையென்றாலும், இராக் போரின் போது பயன்படுத்தப்பட்ட ரசாயனங்களே காரணம் என்று மக்கள் நம்புகின்றனர்.
அதிலும் பாஸ்பரஸ் குண்டுகள் தாம் இவ்வாறு குழந்தைகள் ஒழுங்கற்று பிறப்பதற்கு காணரம் என குழந்தைகளின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
சில குழந்தைகளுக்கு தலை மிகப்பெரியதாகவும், வயிறு மிகப்பெரியதாகவும், கரங்கள் ஒழுங்கின்றியும் இருப்பது உலகை உலுக்கியுள்ளது. இவ்வாறு பிறக்கும் குழந்தைகளில் சில குழந்தைகள் சீக்கிரம் இறந்து விடுவதாகவும் இந்த செய்தி குறிப்பிடுகிறது.
இந்த பாலூஜா நகரில் தான் 2004ல் அதிகம் குண்டு போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. காணொளி செய்தி (Video News) சற்று மனதை பாதிப்பதாகவே உள்ளது,
ஆகவே குழந்தைகள் வயதானவர்கள் இதை பார்ப்பதை தவிர்த்துக் கொள்ளவும்.


உலகம் இனியாவது அமைதிப்பாதையில் செல்லுமா?…

No comments:

Post a Comment