Friday, September 4, 2009

கோவை குண்டு வெடிப்பு கைதிகள் 3 பேர் விடுதலை!


கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் மூன்று பேர், நன்னடத்தை அடிப்படையில் தண்டனைக் காலத்திற்கு முன்பே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மத்திய சிறையில், பழனியைச் சேர்ந்த அப்துல் கரீம் (30), கோவை மானியத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சர்தார் (31) ஆகியோர், தண்டனைக் காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்டனர். ஆத்துப்பாலத்தைச் சேர்ந்த பாபு (30) 1ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
‘குண்டு வெடிப்பு வழக்கிற்காக, சிறப்பு கோர்ட்டில் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்த மூவரும், நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்’ என காவல் துறையினர் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment