Tuesday, July 7, 2009

சென்னையில் இஸ்லாமிய இலக்கிய மாநில மாநாடு!!

சென்னை, இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் சார்பில் 9-வது மாநில மாநாடு வரும் டிசம்பர் மாதம் நடத்துவது என இக்கழகத்தின் பொதுக்குழு தீர்மானித்துள்ளது.

இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொதுக் குழு தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் பொதுச் செயலாளர் கேப்டன் அமீர் அலி பொருளாளர் எஸ்.எம்.இதயத்துல்லா தலைமையில் நடந்தது. இலக்கிய கழகத்தின் மாநாட்டை வரும் டிசம்பரம் மாதம் சோழிங்கநல்லலூரில் உள்ள சதக் கல்லூரியில் நடத்துவது எனவும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் இலக்கிய இஸ்லாமிய அறிஞர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்றும் அதற்கான விரிவான சர்வதேச இலக்கிய கருத்தரங்க ஏற்பாடுகளை நிறைவற்ற பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

No comments:

Post a Comment