Sunday, March 15, 2009

முத்துப்பேட்டையில் கம்யூ. நகர செயலாளருக்கு அரிவாள் வெட்டு

முத்துப்பேட்டையில் கம்யூ. நகர செயலாளருக்கு அரிவாள் வெட்டு

மர்ம நபர்களுக்கு வலை

முத்துப்பேட்டை, மார்ச் 14:

முத்துப்பேட்டையில் பஞ்சாயத்து பேசிவிட்டு வந்துகொண்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளரை சரமாரி வெட்டிவிட்டு தப்பி ஓடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

முத்துப்பேட்டையை சேர்ந்தவர் மார்க்ஸ்(45). இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர். இவர் நேற்றிரவு நம்மங்குறிச்சி பகுதியில் இரு சமூகத்தினரிடை யே ஏற்பட்ட இடப்பிரச்னை தொடர்பாக பஞ்சாயத்து பேசிவிட்டு இரவு 11மணிக்கு பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

நம்மங்குறிச்சி பிரிவு ரோட்டில் வந்தபோது அங்கு மறைந்திருந்த மர்மநபர்கள் பைக்கை வழிமறித்து, அரிவாளால் மார்க்சை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிஓடிவிட்டனர்.

இதில் படுகாயமடைந்த மார்க்ஸ் தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னசாமி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து முத்தரையர் சங்க மாநில இளைஞர் அணி செயலாளர் தீரன் உள்பட 4பேரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் சிலரை தேடிவருகின்றனர்.

No comments:

Post a Comment